மேலும் அறிய

பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்கும் திட்டம்: இன்று முதல் தொடக்கம்!

பொதுத்துறை நிறுவனங்கள், ஆயுள் காப்பீட்டு கழகம், வங்கிகள் போன்ற பொதுத்துறை நிறுவனங்களை விற்பதாக கடந்த பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.

இந்தியாவில் உள்ள பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்று அதன் மூலம் வருவாய் ஈட்டுவதற்கான புதிய திட்டத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று துவக்கி வைக்கிறார்.

இந்தியாவில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், வரும் ஆண்டுகளில் அரசின் வருவாயினை மேம்படுத்தும் வகையில் புதிய திட்டங்களைக்கொண்டு வருவதற்கு மத்தியில் ஆளும் பாஜக அரசு பல்வேறு வழிமுறைகளைக்கொண்டுவருகிறது. இதன்படி பொதுத்துறை நிறுவனங்களையெல்லாம் தனியாருக்கு விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் இந்திய அரசின் பொதுச்சொத்துக்களை பணமாக்கலுக்கான புதிய திட்டத்தினை மத்திய அரசு கடந்த பட்ஜெட்டில் அறிவித்தது. குறிப்பாக கடந்த நிதியாண்டில் பொதுத்துறை நிறுவனங்கள், ஆயுள் காப்பீட்டு கழகம், வங்கிகள் போன்ற பொதுத்துறை நிறுவனங்களை விற்பதாக கடந்த பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இவ்வாறு பங்குகளை விற்பதன் மூலம் மத்திய அரசு அடுத்த நிதியாண்டில் ரூ.1.75 லட்சம் கோடி நிதி திரட்டுவதற்கான இலக்கினை நிர்ணயம் செய்துள்ளது. மேலும் இதன் மூலம் நாட்டில் உள்ள புதிய உள்கட்டமைப்புகளை உருவாக்கவும் இத்திட்டம் வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தப்போதும் பொதுத்துறை வங்கிகளை விற்பனை செய்வதற்கு பல்வேறு எதிர்ப்புகளை எதிர்க்கட்சியினர் முன்வைத்து வந்தனர். மேலும் இத்திட்டம் அரசின் சொத்துக்களை அனைத்தும் தனியாருக்கு விற்பனை செய்யும் வழிமுறைகளை வகுப்பதாகக் குற்றம் சாட்டிவந்தனர்.

  • பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்கும் திட்டம்: இன்று முதல் தொடக்கம்!

இந்நிலையில் தான், இந்தியாவில் பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பதற்கான புதிய திட்டத்தினை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிமுகம் செய்கிறார். இதன் மூலம் இரயில்வே, விமான நிலையம், பொதுத்துறை வங்கிகள் போன்றவற்றின் மூலம் சுமார் 6 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துக்களைக்கொண்டு நிதி திரட்டப்படும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். இதற்காக ரயில்வே, விமானத்துறை போன்றவற்றில் மேற்கொள்ளப்படும் உள்கட்டமைப்புகளை தனியாருக்கு விற்கு அதன் மூலம் வருவாயினை ஈட்டுவதற்கு மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாகவும், அதற்கான என்.எம்.பி என்ற திட்டம் இன்று முதல் அறிமுகமாகிறது. மேலும் இதன் மூலம் நாட்டின் முன்னேற்றத்தைக் கண்காணிப்பதற்கும், முதலீட்டாளர்களுக்கு தெரிவு நிலையை வழங்குவதோடு மட்டுமில்லாமல் பணமாக்கல் வழிமுறையும் இத்திட்டம் கொண்டுள்ளது.  எனவே அடுத்த நான்கு ஆண்டுகளில் இத்திட்டத்தின் மூலம் பொதுத்துறை நிறுவனங்களை பங்குகளை விற்று பணமாற்றுவதை இலக்காகக்கொண்டு தேசிய பணமாக்கல் ஆதால வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

  • பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்கும் திட்டம்: இன்று முதல் தொடக்கம்!

எனவே தொலை நோக்குப்பார்வையோடு மத்திய அரசு அறிமுகம் செய்யவுள்ள இந்த திட்டத்தினை மத்திய நிதிஅமைச்சர் இன்று துவங்குகிறார். இந்த விழாவில் நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜூவ் குமார் உள்ளிட்டோர் கலந்துக்கொள்ளவுள்ளனர். மேலும் இதில் பொதுத்துறை சொத்துக்களை விற்று பணமாக்குவதற்கான தேசிய பணமாக்கல் ஆதாரப்புத்தகம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

தலைப்பு செய்திகள்

ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் 10 நிமிடத்தில் கேஸ் சிலிண்டர் டெலிவரி! இனி கவலை இல்லை!
ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் 10 நிமிடத்தில் கேஸ் சிலிண்டர் டெலிவரி! இனி கவலை இல்லை!
10 கிலோ எல்பிஜி சிலிண்டர்: இனி சுமை இல்லை! வணிகர்கள், வீடுகளுக்கு புதிய வசதி.
10 கிலோ எல்பிஜி சிலிண்டர்: இனி சுமை இல்லை! வணிகர்கள், வீடுகளுக்கு புதிய வசதி.
Chennai-Bengaluru Bullet Train: மணிக்கு 320 கி.மீ வேகம்! தமிழ்நாட்டின் முதல் புல்லட் ரயில் பாதை... வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
மணிக்கு 320 கி.மீ வேகம்! தமிழ்நாட்டின் முதல் புல்லட் ரயில்! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
BJP: மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்

வீடியோ

G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IAS Transfer: ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய தவெக அரசு.. ராதாகிருஷ்ணன், சுப்ரியா சாஹுவும் ட்ரான்ஸ்பர் - முழு லிஸ்ட் இதோ
IAS Transfer: ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய தவெக அரசு.. ராதாகிருஷ்ணன், சுப்ரியா சாஹுவும் ட்ரான்ஸ்பர் - முழு லிஸ்ட் இதோ
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
US Russia Sanctions Bill: 500 இல்ல, வெறும் 100 தான்.! ரஷ்ய எண்ணெய் கொள்முதல் கட்டணங்களை மாற்றும் அமெரிக்கா; இந்தியாவுக்கு நிம்மதி
500 இல்ல, வெறும் 100 தான்.! ரஷ்ய எண்ணெய் கொள்முதல் கட்டணங்களை மாற்றும் அமெரிக்கா; இந்தியாவுக்கு நிம்மதி
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
ஒரே சார்ஜில் 427 கிலோமீட்டர் மைலேஜ்.. வரப்போது Volkswagen ID Cross மின்சார கார் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 427 கிலோமீட்டர் மைலேஜ்.. வரப்போது Volkswagen ID Cross மின்சார கார் - விலை எவ்ளோ?
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
Maruti Suzuki Dzire on EMI: நடுத்தர வர்க்கத்தின் நம்பகமான கார்.! மாருதி சுசூகி டிசையரின் ஆன்-ரோடு விலை, முன்பணம், EMI எவ்வளவு.?
நடுத்தர வர்க்கத்தின் நம்பகமான கார்.! மாருதி சுசூகி டிசையரின் ஆன்-ரோடு விலை, முன்பணம், EMI எவ்வளவு.?
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
Embed widget