மேலும் அறிய

NCRB Report: ‛கொரோனா காலத்தில் மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு...’ - என்.சி.ஆர்.பி. அதிர்ச்சி அறிக்கை!

கொரோனா தொற்று காலத்தில் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட விகிதம் 21.2 சதவீதமாக உயர்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய குற்ற ஆவண காப்பகம் ஆண்டு விபத்துக்கள் மரணம் மற்றும் தற்கொலை அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது. இந்த தரவுகள் அனைத்தும் இந்தியாவில் நடைபெற்ற விபத்துக்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் சேகரிக்கப்பட்டவை.

கொரோனா பெருந்தொற்று காலம் உலகம் முழுவதும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் அதன் தாக்கம் மிகவும் மோசமாக இருந்தது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்தியாவில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது இந்த புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. குறிப்பாக, மாணவர்கள் மத்தியில் தற்கொலை அதிகரித்திருப்பது சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


NCRB Report: ‛கொரோனா காலத்தில் மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு...’ - என்.சி.ஆர்.பி. அதிர்ச்சி அறிக்கை!

கொரோனா பெருந்தொற்று காலத்தில் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட விகிதம் 21.2 சதவீதம் நபர்களாக அதிகரித்துள்ளது. தொழில்முனைவோர், ஊதியம் பெறுவொர் 16.5 சதவீதம் நபர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தினசரி கூலி பெறுபவர்கள் 15.67 சதவீதம் நபர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். ஓய்வு பெற்ற நபர்கள் 11.9 சதவீதம் நபர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். வேலையில்லாத பட்டதாரிகள் 11.65 சதவீதம் நபர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இந்த தரவுகள் 2020ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் தற்கொலை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. துல்லியமாக கூற வேண்டுமென்றால் 1 லட்சத்து 53 ஆயிரத்து 52 பேர் உயிரிழந்துள்ளனர். 1967ம் ஆண்டுக்கு பிறகு இதுதான் அதிகளவிலான தற்கொலை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கை ஆகும்.



NCRB Report: ‛கொரோனா காலத்தில் மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு...’ - என்.சி.ஆர்.பி. அதிர்ச்சி அறிக்கை!

2019ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்கொலை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. மாணவர்கள் தற்கொலை விகிதம் ஆண்டுதோறும் 7 சதவீதம் மற்றும் 8 சதவீதமாக ஆண்டுதோறும் பதிவாகி வந்தது. இந்த நிலையில், கடந்தாண்டு தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் எண்ணிக்கை 21.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. விற்பனையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் தற்கொலை செய்துகொண்டவர்களின் 26.1 சதவீதம் மற்றும் 49.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.

தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், விபத்தில் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டு இந்தியாவில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 57 ஆயிரத்து 21 நபர்கள் உயிரிழந்தனர். கடந்தாண்டு கணக்கெடுப்பின்படி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 சதவீதமாக பதிவாகியுள்ளது. அதாவது, 2020ம் ஆண்டு 3 லட்சத்து 74 ஆயிரத்து 397 நபர்கள் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா காலத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இணையவழி வகுப்பை அறிமுகம் செய்தன. இந்த இணையவழி வகுப்புகளினால் மாணவர்கள் பலரும் பெரிதும் சிக்கல்களை சந்தித்தனர். சில மாணவர்களின் பெற்றோர்களால் கொரோனா நெருக்கடி காலத்தில் போதியளவு வருமானம் இல்லாத சூழலில் செல்போன்கள் வாங்க இயலாமலும், பல மாணவர்கள் சரியான நெட்வொர்க் வசதியில்லாமலும் என எண்ணற்ற சிக்கல்களை சந்தித்தனர். சில மாணவர்கள் கடுமையான மன அழுத்தத்தை இந்த கொரோனா காலத்தில் சந்தித்தனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
EPS ADMK: அதிமுகவில் ஓபிஎஸ்க்கு நோ... டிடிவிக்கு..? அமித்ஷாவுடன் சந்திப்பில் நடந்தது என்ன.? இபிஎஸ் பரபரப்பு தகவல்
அதிமுகவில் ஓபிஎஸ்க்கு நோ... டிடிவிக்கு..? அமித்ஷாவுடன் சந்திப்பில் நடந்தது என்ன.? இபிஎஸ் பரபரப்பு தகவல்
Tata Punch Facelift: பீஸ்ட் மோடில் பஞ்ச்.. ஃபேஸ்லிஃப்ட்டின் வேரியண்ட்களும், அம்சங்களும்.. மொத்த லிஸ்டை கொடுத்த டாடா
Tata Punch Facelift: பீஸ்ட் மோடில் பஞ்ச்.. ஃபேஸ்லிஃப்ட்டின் வேரியண்ட்களும், அம்சங்களும்.. மொத்த லிஸ்டை கொடுத்த டாடா
ABP Premium

வீடியோ

Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!
Madhampatti Rangaraj|”அது என் குழந்தையா DNA TEST எடுக்கணும்” ஜாய்-ஐ சீண்டும் மாதம்பட்டி
MP Jothimani Issue | ’’எதுக்கு வந்தீங்க ஜோதிமணி?’’வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர்அடித்து விரட்டிய காங்கிரஸார்’’ஏய்..போடா’’
வெனிசுலாவில் நிலவும் நெருக்கடிமோசமான சிறையில் மதுரோ போரை தொடங்குகிறாரா ட்ரம்ப்? | America Trump Vs Venezuela

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
EPS ADMK: அதிமுகவில் ஓபிஎஸ்க்கு நோ... டிடிவிக்கு..? அமித்ஷாவுடன் சந்திப்பில் நடந்தது என்ன.? இபிஎஸ் பரபரப்பு தகவல்
அதிமுகவில் ஓபிஎஸ்க்கு நோ... டிடிவிக்கு..? அமித்ஷாவுடன் சந்திப்பில் நடந்தது என்ன.? இபிஎஸ் பரபரப்பு தகவல்
Tata Punch Facelift: பீஸ்ட் மோடில் பஞ்ச்.. ஃபேஸ்லிஃப்ட்டின் வேரியண்ட்களும், அம்சங்களும்.. மொத்த லிஸ்டை கொடுத்த டாடா
Tata Punch Facelift: பீஸ்ட் மோடில் பஞ்ச்.. ஃபேஸ்லிஃப்ட்டின் வேரியண்ட்களும், அம்சங்களும்.. மொத்த லிஸ்டை கொடுத்த டாடா
Trump Vs Petro: அமெரிக்காவிடமிருந்து தப்புமா கொலம்பியா.? ட்ரம்ப்பை அழைத்துப் பேசிய பெட்ரோ; விரைவில் சந்திப்பு
அமெரிக்காவிடமிருந்து தப்புமா கொலம்பியா.? ட்ரம்ப்பை அழைத்துப் பேசிய பெட்ரோ; விரைவில் சந்திப்பு
iPhone 200mp Camera: DSLR-களை ஓரங்கட்ட வரும் ஆப்பிள் ஐபோன்; ஆத்தாடி.! 200 MP கேமராவா.? சம்பவம் எப்போ தெரியுமா.?
DSLR-களை ஓரங்கட்ட வரும் ஆப்பிள் ஐபோன்; ஆத்தாடி.! 200 MP கேமராவா.? சம்பவம் எப்போ தெரியுமா.?
Chennai Power Cut: சென்னைல ஜனவரி 9-ம் தேதி எங்கெங்க மின் தடை செய்யப் போறாங்கன்னு தெரியுமா.? விவரம் இதோ
சென்னைல ஜனவரி 9-ம் தேதி எங்கெங்க மின் தடை செய்யப் போறாங்கன்னு தெரியுமா.? விவரம் இதோ
JanaNayagan: ஜனநாயகனுக்காக காங்., வக்காலத்து.. ”ஆர்.எஸ்.எஸ்., படங்கள் மட்டும் கலாச்சாரமா?” என கேள்வி
JanaNayagan: ஜனநாயகனுக்காக காங்., வக்காலத்து.. ”ஆர்.எஸ்.எஸ்., படங்கள் மட்டும் கலாச்சாரமா?” என கேள்வி
Embed widget