மேலும் அறிய

Tirumala Temple: நாளை தொடங்கும் நவராத்திரி பிரமோற்சவம்: திருப்பதியில் கட்டுப்பாடுகள் விதித்த தேவஸ்தானம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அக்டோபர் 15 ஆம் தேதி (நாளை) முதல் 9 நாட்களுக்கு நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது.

Tirumala Temple: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அக்டோபர் 15 ஆம் தேதி (நாளை) முதல் 9 நாட்களுக்கு நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது.

திருப்பதி கோயில்:

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். ஏழுமலையானுக்கு உகந்த புரட்டாசி மாதம் தொடங்கியதை அடுத்து அந்த எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இன்றுடன் புரட்டாசி மாதம் நிறைவடைய உள்ளதால், தென்னிந்தியா மட்டுமின்றி நாடு முழுவதுமிருந்து பக்தர்கள் அங்கு குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில், திருப்பதி கோயிலில் வரும் 15ம் தேதி (நாளை) தொடங்கி 23ம் தேதி வரையில் நவராத்திரி பிரமோற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு இன்று அங்குரார்பனாமும்,  நாளை  கொடியேற்றமும் நடைபெற உள்ளது.  

தேவஸ்தானம் அறிவிப்பு:

பிரமோற்சவ விழாவை முன்னிட்டு நாளை முதல் திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடும் கூட்ட நெரிசலும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை தவிர்க்கும் நோக்கில் தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதாவது, பக்தர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் ஆர்ஜித சேவைகள், வி.ஐ.பி. பிரேக் தரிசனம், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் வருபவர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு தரிசனங்கள் உள்ளிட்ட அனைத்தும் சிறப்பு தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதன் மூலம் இலவச தரிசனத்திற்காக வரும் பக்தர்களின் காத்திருப்பு நேரம் குறையும் என தேவஸ்தானம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. அதிகப்படியான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யவும் இது உதவும் என கருதப்படுகிறது. மேலும், போக்குவரத்து நெரிசல் காரணமாக, இருசக்கர வாகனங்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் தடை விதித்துள்ளது.  இதற்கிடையில், ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் இரவு 7 மணிக்கு கருட சேவை நடைபெறுவது வழக்கம். வரும் 19ஆம் தேதி ஆகம விதிகளின்படி 30 நிமிடங்களுக்கு முன்பாக 6.30 மணிக்கு தங்க கருட வாகனத்தில் ஏழுமலையான் 4 மாட வீதிகளில் உலா வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு பேருந்துகள் இயக்கம்:

திருப்பதியில் நாளை முதல் நடைபெறவுள்ள பிரம்மோற்சவம் திருவிழாவினை முன்னிட்டு,  பக்தர்கள் வசதிக்காக தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. அதன்படி சென்னை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், கோவை, மதுரை, காரைக்குடி, கும்பகோணம் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களிலிருந்து நேற்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

மேலும், 26ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மேற்கூறிய இடங்களிலிருந்து இயக்கப்படும் பேருந்துகளுக்கு முன்பதிவு வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவையை பக்தர்கள் முழுமையாக பயன்படுத்தி பயணம் மேற்கொள்ள https://www.tnstc.in/home.html டி.என்.எஸ்.டி.சி. செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தலைப்பு செய்திகள்

BJP: மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
தூத்துக்குடி ITI: சிறந்த வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி! ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்!
தூத்துக்குடி ITI: சிறந்த வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி! ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்!
EPFO-வின் பொது மன்னிப்பு திட்டம்: பிஎஃப் நிறுவனங்களுக்கு அபராதம் இன்றி ஒரு அரிய வாய்ப்பு!
EPFO-வின் பொது மன்னிப்பு திட்டம்: பிஎஃப் நிறுவனங்களுக்கு அபராதம் இன்றி ஒரு அரிய வாய்ப்பு!
PF கணக்குதாரர்களுக்கு நல்ல செய்தி! 8.25% வட்டி ஜூலை 15-க்குள் வரவு!
PF கணக்குதாரர்களுக்கு நல்ல செய்தி! 8.25% வட்டி ஜூலை 15-க்குள் வரவு!

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
Gold rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
Premalatha vs Vijay : தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
EV Car Charging : மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
Embed widget