மேலும் அறிய

AFSPA | ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டமும்; ஐரோம் ஷர்மிளாவும்.. இன்னும் பிற தகவல்களும்..!

ஜூன் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், நாகாலாந்து மாநிலத்தை மேலும் 6 மாதங்களுக்கு அமைதி குலைந்த பகுதியாக நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. 

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்தில் பல ஆண்டுகளாக நாகா படையினருக்கும் இந்திய அரசுக்கும் மோதல் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அந்தப் பகுதியில் ஆயுதப் படைகளின் சிறப்பு அதிகார சட்டம் (AFSPA) அங்கு அமலில் உள்ளது. இந்தச் சட்டத்தின் படி நாகாலாந்து மாநிலம் அமைதி குலைந்த மாநிலமாக அறிவிக்கப்பட்டு அங்கு ராணுவ படைக்கு சிறப்பு அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கடைசியாக கடந்த டிசம்பர் மாதம் நாகாலாந்து பகுதியில் இந்த உத்தரவு 6 மாதங்கள் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி இந்த உத்தரவு ஜூன் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், நாகாலாந்து மாநிலத்தை மேலும் 6 மாதங்களுக்கு அமைதி குலைந்த பகுதியாக நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. 

 


Nagaland| நாகாலாந்து அமைதி குலைந்த மாநிலம்- மத்திய அரசு அறிவிப்பு

 

இது தொடர்பாக வெளியான அறிவிப்பின்படி, “ஜூன் 30 2021 முதல் டிசம்பர் 31 2021 வரை நாகாலாந்து மாநிலம் முழுவதும் அமைதி குலைந்த பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு மாநில காவல்துறையுடன் சேர்ந்து ராணுவத்தினருக்கும் பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபடுவார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அங்கு தொடர்ந்து ஆயுதப் படை சிறப்பு அதிகார சட்டமும் தொடர்ந்து அமலில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம், மிகுந்த சர்ச்சைகளுக்கு உள்ளான இச்சட்டம் பற்றி அறிந்து கொள்வது அவசியம். கடைசியாக வடகிழக்கு மாநிலமான மேகாலயாவிலிருந்து இந்தச் சட்டம் 2018, ஏப்ரல் 1ம் தேதி விலக்கிக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இச்சட்டம் பற்றியும் அதன் பின்னணி பற்றியும் அறிந்து கொள்வோம். ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் என்று கூறும்போதே கூடவே நமக்கு ஐரோம் ஷர்மிளாவும் நினைவுக்கு வருவார்.

AFSPA சட்டம் என்றால் என்ன?
எளிமையாக விளக்க வேண்டுமென்றால், எந்தப் பகுதியெல்லாம் சர்ச்சைக்குரிய பகுதி என்று அரசால் கண்டறியப்படுகிறதோ, அங்கெல்லாம் ஆயுதப்படையினருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டு பொது அமைதியைக் காக்க உத்தரவிடப்படுகிறது. ஆஃப்ஸ்பா படையினருக்கு சிறப்பு அதிகாரங்கள் தான் கொடுக்கப்பட்டுள்ளது ஆனால் சில இடங்களில் வானளாவிய அதிகாரங்கள் இருப்பதாகக் கருதிக் கொண்டு நிகழ்த்தப்படும் அத்துமீறல்கள் தான் இந்தச் சட்டத்தை டெரர் சட்டமாக மாற்றியிருக்கிறது. ஆஃப்ஸ்பா சட்டத்தைக் கொண்டு 5 பேருக்கு மேல் ஓரிடத்தில் கூடாமல் பார்த்துக் கொள்ள முடியும், ஒரு நபர் சட்டவிரோதமாக நடக்கிறார் என்று கருதினால், சிறு எச்சரிக்கைக்குப் பின்னர் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முடியும். சந்தேகத்தின் பேரில் யாரை வேண்டுமானாலும் எங்கு வைத்தும் எந்த நேரத்திலும் கைது செய்ய முடியும். அவ்வாறு கைது செய்யப்படும் நபர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்படுவார்.

சரி சர்ச்சைக்குரிய பகுதி என்றால் அது எது? யார் அப்படி வரையறுக்கிறார்கள்? 
 
ஆஃப்ஸ்பா (AFSPA) ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரி சட்டத்தின் மூன்றாவது பிரிவின் படி சில இடங்கள் பதற்றம் நிறைந்த சர்ச்சைக்குரிய பகுதியாகக் கருதப்படுகிறது. மத ரீதியாக, இன ரீதியாக, மொழி அல்லது பிராந்திய ரீதியாக, சாதி ரீதியாக சர்ச்சைகளுக்கு உள்ளாகும் வாய்ப்பு கொண்ட பகுதிகள் பதற்றம் நிறைந்த பகுதிகளாகக் கருதப்படுகிறது. மத்திய அரசோ மாநில ஆளுநரோ அல்லது யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநரோ இவ்வாறாக ஏதேனும் ஒரு பகுதியை பதற்றம் நிறைந்த பகுதியாக அறிவிக்க இயலும். இந்தச் சட்டத்தை ஒரு பகுதியில் நடைமுறைக்குக் கொண்டு வரும் அதிகாரம் மத்திய உள்துறைக்கே உள்ளது. 
 
AFSPA பின்னணி என்ன?

வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு குழுவினருக்கும் இடையே மோதல்கள் வெடித்தன. இது பெரிய வன்முறைகளாக வெடித்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்துவந்தன. இந்நிலையில் கடந்த 1958-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் இணைந்து ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை இயற்றியது.

இதுவரை இந்தச் சட்டங்கள் எங்கெல்லாம் அமலில் இருந்துள்ளது?

நாகாலாந்து, அசாம், மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளில் இந்தச் சட்டம் அமலில் இருந்துள்ளது. ஏப்ரல் 2018-ஆம் ஆண்டில் மேகாலயாவிலிருந்து இச்சட்டம் திரும்பப்பெறப்பட்டது. திரிபுராவில் இந்தச் சட்டம் 2015-ஆம் ஆண்டில் திரும்பப்பெறப்பட்டது. ஜம்மு காஷ்மீரிலும் இதுபோன்றதொரு சட்டம் இருக்கிறது.

மக்கள் என்ன நினைக்கின்றனர்?

இந்தச் சட்டத்தின் தாக்கத்தை நேரடியாக அனுபவித்த னைத்து மக்களுமே தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். மணிப்பூரின் ஐரோம் ஷர்மிளா இச்சட்டத்தைக் கடுமையாக எதிர்த்தார். மணிப்பூரின் மாலோம் நகரில் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காகக் காத்திருந்த 10 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனை எதிர்த்து ஐரோம் ஷர்மிளா நவம்பர் 2000ல் உண்ணாவிரதம் தொடங்கினார். 2016ம் ஆண்டு ஆகஸ்ட் வரை தனது உண்ணாவிரதத்தை அவர் தொடர்ந்து நடத்தினார்.

தலைப்பு செய்திகள்

Independence day 2026: 80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
Students Protest : தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
Embed widget