மேலும் அறிய

இரண்டாக பிரிக்கப்படுகிறதா நாகாலாந்து? மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபடும் தலைவர்கள்...!

கடந்த வாரம், அஸ்ஸாம் - மேகாலயா எல்லை அருகே உள்ள மேற்கு ஜெயின்டியா மலை பகுதியில் முக்ரோஹ் என்ற இடத்தில் துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில், வனத்துறை அதிகாரி உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர்.

வட கிழக்கு இந்தியாவில் அமைந்துள்ள மாநிலங்களுக்கிடையே மோதல் சம்பவங்கள் வெடிப்பது வழக்கமாகிவிட்டது.

கடந்தாண்டு, அஸ்ஸாம், மிசோரம் எல்லை பகுதியில் நடந்த வன்முறை சம்பவத்தில் அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த ஐந்து காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

இதனை தொடர்ந்து, கடந்த வாரம், அஸ்ஸாம் - மேகாலயா எல்லை அருகே உள்ள மேற்கு ஜெயின்டியா மலை பகுதியில் முக்ரோஹ் என்ற இடத்தில் துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில், வனத்துறை அதிகாரி உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர்.

இப்படி, வன்முறை சம்பவங்கள் நடப்பதற்கு மாநிலங்களிக்கையே நிலவும் எல்லை பிரச்னைதான் காரணமாக உள்ளது.

வட கிழக்கு மாநிலங்களில் நாகாலாந்தை பொறுத்தவரையில், அந்த மாநிலத்தை இரண்டு மாநிலங்களாக பிரிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

இந்நிலையில், நாகாலாந்தில் இருந்து பிரிந்து செல்ல விரும்பும் ஆறு மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவின் தலைவர்கள் டிசம்பர் 3 ஆம் தேதி டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் மாநில கோரிக்கை குறித்து விவாதிக்க உள்ளனர்.

இதுகுறித்து கிழக்கு நாகாலாந்து மக்கள் அமைப்பின் செய்தி தொடர்பாளர் பேசுகையில், "நாகாலாந்தின் 16 மாவட்டங்களில் ஆறு மாவட்டங்களுக்கு மாநில அந்தஸ்து வழங்குவது குறித்து விவாதிக்க ஒரு குழுவை அமித் ஷா அழைத்துள்ளார். 

இந்த மாவட்டங்களில் ஆதிக்கம் செலுத்தும் ஆறு பெரிய பழங்குடியினர், பல தசாப்தங்களாக புறக்கணிக்கப்பட்ட நிலையில் அதில் இருந்து விடுபட 'எல்லை நாகாலாந்து' உருவாக்கப்பட வேண்டும் என்று கோரி வருகின்றனர். எங்களின் கோரிக்கைக்கு மத்திய அரசு செவி சாய்க்காவிட்டால், தேர்ந்தெடுக்கப்பட்ட 20 பிரதிநிதிகள் (எம்எல்ஏக்கள்) அனைவரையும் ராஜினாமா செய்யும்படி கேட்போம்" என்றார்.

டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கும் நாகாலாந்தின் முக்கியத்துவம் வாய்ந்த ஹார்ன்பில் திருவிழாவில் பங்கேற்க வேண்டாம் என கிழக்கு நாகாலாந்து மக்கள் அமைப்பு முடிவு செய்துள்ளது. மாநிலத்தின் அனைத்து இன சமூகங்களின் கலாசாரம் மற்றும் பாரம்பரியமானது இந்த ஆண்டு விழாவில் பறைசாற்றப்படும்.

ஆண்டு விழாவை கிழக்கு நாகாலாந்து மக்கள் அமைப்பு புறக்கணிப்பது குறித்து பேசியுள்ள அம்மாநிலத்தின் தலைமை செயலாளர் ஆலம், "அமைப்பும் தொடர்புடைய அனைத்து பழங்குடித் தலைவர்களையும் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். அவர்களிடம் இருந்து சாதகமான பதிலை எதிர்பார்த்து அரசு காத்திருக்கிறது" என்றார்.

ஆகஸ்ட் மாதம், மாநில அந்தஸ்து கோரிக்கையை தொடங்கிய கிழக்கு நாகாலாந்து மக்கள் அமைப்பு, நாகாலாந்தை பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், 2023 சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளது.

நாகாலாந்தில் மொத்தம் 60 சட்டப்பேரவை இடங்கள் உள்ளன. அதில், கிஃபிர், லாங்லெங், மோன், நோக்லக், ஷாமடோர், டுயன்சாங் ஆகிய ஆறு மாவட்டங்களில் 20 தொகுதிகள் உள்ளன. அதில், ஆளும் தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சிக்கு (என்டிபிபி) 15 எம்எல்ஏக்களும், கூட்டணிக் கட்சியான பாஜகவுக்கும் 4 எம்எல்ஏக்களும் உள்ளன. ஒரு எம்எல்ஏ சுயேச்சையாக உள்ளார்.

மாநில சட்டப்பேரவையில் என்டிபிபிக்கு மொத்தமாக 42 எம்எல்ஏக்களும், பாஜகவுக்கு 12 எம்எல்ஏக்களும், நாகா மக்கள் முன்னணிக்கு 4 பேரும், இருவர் சுயேச்சைகளாகவும் உள்ளனர்.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Embed widget