மேலும் அறிய

Rajiv Gandhi Assassination : ராஜீவ் காந்தி படுகொலை...24 ஆண்டுகால விசாரணை ஆணையம் கலைப்பு...முக்கிய தகவல்கள் இதோ

எம்.சி. ஜெயின் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் 1998 ஆம் ஆண்டு இரண்டு ஆண்டுகாலத்திற்கு எம்டிஎம்ஏ அமைக்கப்பட்டது. 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதையடுத்து கொலையின் பின்னணியில் உள்ள சதியை குறித்து ஆராயும் வகையில் அமைக்கப்பட்ட பல்நோக்கு விசாரணை ஆணையத்தை (எம்டிஎம்ஏ) 24 ஆண்டுகளுக்கு பிறகு மத்திய அரசு கலைத்துள்ளது. 

மத்திய புலனாய்வு அமைப்பின் ஒரு அங்கமாக பல்நோக்கு விசாரணை ஆணையம் செயல்பட்டு வந்தது. மத்திய பாதுகாப்பு அமைப்புகளை சேர்ந்த அலுவலர்கள் இந்த ஆணையத்தில் இடம்பெற்றிருந்தனர். எம்டிஎம்ஏ-வை கலைப்பதற்கான உத்தரவு மே மாதம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மேலும் நிலுவையில் உள்ள விசாரணை சிபிஐயின் வேறு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 1991ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 23ஆம் தேதி, நீதிபதி எம்.சி. ஜெயின் தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. ராஜீவ் காந்தி கொலையின் பின்னணியில் உள்ள சதி செயலை கண்டறியும் வகையில் இந்த ஆணையம் அமைக்கப்பட்டது. எம்.சி. ஜெயின் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் 1998 ஆம் ஆண்டு இரண்டு ஆண்டுகாலத்திற்கு எம்டிஎம்ஏ அமைக்கப்பட்டது. 

ஆனால், விசாரணையில் அது எந்த பெரிய முன்னேற்றத்தையும் அடையவில்லை. இருப்பினும், ஆண்டுக்கு ஒரு முறை விசாரணை ஆணையத்திற்கு கால நீட்டிப்பு வழங்கப்பட்டது.

துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் அளவில் உள்ள அலுவலரின் தலைமையில் எம்டிஎம்ஏ அமைக்கப்பட்டு வங்கி பரிவர்த்தனைகள் உள்பட வழக்கின் பல்வேறு அம்சங்களைப் பற்றிய தகவல்களைக் கோரி இலங்கை, இங்கிலாந்து மற்றும் மலேசியா போன்ற நாடுகளுக்கு எம்டிஎம்ஏ 24 கடிதங்களை அனுப்பியது.

இதில் 20க்கும் மேற்பட்ட கோரிக்கைகளுக்கு இந்த நாடுகளால் பதிலளிக்கப்பட்டன. மேலும், சில கோரிக்கைகளுக்கு மட்டுமே பதில் அளிக்கவில்லை என்று அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். விசாரணை ஏறக்குறைய முடிந்துவிட்டதாகவும், நிலுவையில் உள்ள சில நீதித்துறை கோரிக்கைகள் மற்றும் எம்டிஎம்ஏ அனுப்பிய கடிதம் பற்றிய விவகாரம் இப்போது சிபிஐயால் கையாளப்படும் என்றும் அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

பல்நோக்கு விசாரணை ஆணையம், தொடக்க காலத்தில், இணை காவல்துறை இயக்குநர் அளவில் உள்ள அலுவலரின் தலைமையில் இயங்கி வந்தது. இதையடுத்து, டிஐஜி அளவிலான அலுவலரிடம் இந்த ஆணையம் ஒப்படைக்கப்பட்டது. கொலையின் சதி செயல் பல நாடுகளை நோக்கி கையை காட்டிய நிலையிலும், உண்மைகள் எதனையும் விசாரணை ஆணையத்தால் வெளிச்சத்திற்கு கொண்டு வர முடியவில்லை என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 1991ஆம் ஆண்டு, மே 21ஆம் தேதி அன்று தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரத்தின் போது ராஜீவ் காந்தி விடுதலைப் புலிகளின் தற்கொலை படையால் கொல்லப்பட்டார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
‘தொகுதி மாறும் செந்தில்பாலாஜி?’ கோவையை தேர்வு செய்தது ஏன்? – பரபரப்பு பின்னணி..!
‘தொகுதி மாறும் செந்தில்பாலாஜி?’ கோவையை தேர்வு செய்தது ஏன்? – பரபரப்பு பின்னணி..!
திருவள்ளூரில் அரசுப்பள்ளி மாணவர் பலி; யாராக இருந்தாலும் நடவடிக்கை- அமைச்சர் அன்பில் உறுதி!
திருவள்ளூரில் அரசுப்பள்ளி மாணவர் பலி; யாராக இருந்தாலும் நடவடிக்கை- அமைச்சர் அன்பில் உறுதி!
Kia Discount: களத்துக்கு வந்த கியா..! மொத்த மாடல்களுக்கும் ரூ.3.5 லட்சம் வரை தள்ளுபடி - டிச., விஷேசம் என்ன?
Kia Discount: களத்துக்கு வந்த கியா..! மொத்த மாடல்களுக்கும் ரூ.3.5 லட்சம் வரை தள்ளுபடி - டிச., விஷேசம் என்ன?
ABP Premium

வீடியோ

Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்
டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident
கைதாகிறாரா சீமான்? திமுக நிர்வாகி மீது அட்டாக் பாய்ந்த கொலை மிரட்டல் வழக்கு | Seeman Arrest
நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
‘தொகுதி மாறும் செந்தில்பாலாஜி?’ கோவையை தேர்வு செய்தது ஏன்? – பரபரப்பு பின்னணி..!
‘தொகுதி மாறும் செந்தில்பாலாஜி?’ கோவையை தேர்வு செய்தது ஏன்? – பரபரப்பு பின்னணி..!
திருவள்ளூரில் அரசுப்பள்ளி மாணவர் பலி; யாராக இருந்தாலும் நடவடிக்கை- அமைச்சர் அன்பில் உறுதி!
திருவள்ளூரில் அரசுப்பள்ளி மாணவர் பலி; யாராக இருந்தாலும் நடவடிக்கை- அமைச்சர் அன்பில் உறுதி!
Kia Discount: களத்துக்கு வந்த கியா..! மொத்த மாடல்களுக்கும் ரூ.3.5 லட்சம் வரை தள்ளுபடி - டிச., விஷேசம் என்ன?
Kia Discount: களத்துக்கு வந்த கியா..! மொத்த மாடல்களுக்கும் ரூ.3.5 லட்சம் வரை தள்ளுபடி - டிச., விஷேசம் என்ன?
BJP vs DMK: திமுகவின் மெகா பிளான்... முறியடிக்க கை கோர்க்கும் அண்ணாமலை- நயினார்.! திடீர் ட்விஸ்ட்
திமுகவின் மெகா பிளான்... முறியடிக்க கை கோர்க்கும் அண்ணாமலை- நயினார்.! திடீர் ட்விஸ்ட்
IPL 2026 Unsold: பேரு பெத்த பேரு, போக இல்ல ஊரு.. ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத வீரர்கள் - சிஎஸ்கே, மும்பை ஸ்டார்ஸ்
IPL 2026 Unsold: பேரு பெத்த பேரு, போக இல்ல ஊரு.. ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத வீரர்கள் - சிஎஸ்கே, மும்பை ஸ்டார்ஸ்
Women Self Help Group: பொங்கலுக்கு குஷி தான்.! மகளிர் சுய உதவிக்குழு எதிர்பார்த்த அறிவிப்பு.! தேதி குறித்த தமிழக அரசு
பொங்கலுக்கு குஷி தான்.! மகளிர் சுய உதவிக்குழு எதிர்பார்த்த அறிவிப்பு.! தேதி குறித்த தமிழக அரசு
Porur - Poonamallee metro train: சென்னை மக்களுக்கு ஹேப்பி.! வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில்- எப்போ தொடங்குது தெரியுமா.?
சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.! வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில்- எப்போ தொடங்குது தெரியுமா.?
Embed widget