மேலும் அறிய

"நாங்களும் ஆயுள் தண்டனையை அனுபவித்து வருகிறோம்” - கொல்லப்பட்ட பத்திரிகையாளர் சௌமியாவின் தாய்

நீதிமன்றத்தின் தீர்ப்பில் திருப்தி அடைகிறேன். ஆனால் மகிழ்ச்சியாக இல்லை என்று கொல்லப்பட்ட பத்திரிகையாளர் சௌமியாவின் தாயார் தெரிவித்துள்ளார்.

டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு:

டெல்லியில் 2008ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி பத்திரிகையாளர் சௌமியா விஸ்வநாதன் கொல்லப்பட்ட வழக்கில் டெல்லி நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் இருதரப்பு வாதங்களும் முடிவுக்கு வந்த நிலையில், டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது. அதில், குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட ரவி கபூர், அமித் சுக்லா, பல்ஜீத் மாலிக், அஜய் குமார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி சாகேட் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், ரவி கபூர், அமித் சுக்லா, பல்பீர் மாலிக், அஜய் குமார் ஆகிய 4 பேருக்கும் தலா ரூ.25,000 அபராதமும், மகாராஷ்டிரா ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கட்டுப்பாடு சட்டத்தின் கீழ் தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

நான்கு குற்றவாளிகளுக்கும் விதிக்கப்பட்ட அபராத தொகையில் ரூ.1.2 லட்சத்தை சௌமியா விஸ்வநாதனின் பெற்றோருக்கு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.  இந்த நான்கு பேருக்கு உதவியதற்காக ஐந்தாவது குற்றவாளியான அஜய் சேத்திக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.7.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  அஜய் சேத்தி அபராத தொகையில்  இருந்து ரூ.7.2 லட்சத்தை சௌமியா குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிட்டதட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு பெண் பத்திரிகையாளர் சௌமியா விஸ்வநாதன் கொல்லப்பட்ட வழக்கில் டெல்லி நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பு வழங்கியுள்ளது.

"15 ஆண்டுகளுக்குப் பிறகு நீதி கிடைத்துள்ளது”

இந்நிலையில், சௌமியா விஸ்வநாதனின் தாயார் மாதவி கூறுகையில், "நான் என் மகளைத் திரும்பப் பெறமாட்டேன். 15 ஆண்டுகளுக்குப் பிறகு நீதி கிடைத்துள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பில் திருப்தி அடைகிறேன். ஆனால் மகிழ்ச்சியாக இல்லை. என் மகள் இல்லாமல் நானும் என் கணவரும் கஷ்டப்பட்டு வருகிறோம். என் கணவர் ஐசியுவில் இருக்கிறார். அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் நீதிக்காக காத்திருந்தார். ஒருவகையில் நாங்களும் ஆயுள் தண்டனையை அனுபவித்து வருகிறோம். நாங்க ஒவ்வொரு நாளும் கஷ்டப்படுறது, அவங்க வாழ்நாள் முழுக்க கஷ்டப்படணும்னு நினைக்கிறேன்.  தவறு செய்பவர்கள் அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டும்" என்றார். 


மேலும் படிக்க

Uttarkashi Tunnel Collapse: தொடரும் சவால்கள்! துளையிடும் இயந்திரத்தில் மீண்டும் கோளாறு - 41 தொழிலாளர்களை மீட்பதில் என்ன சிக்கல்?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
Siddha Ayush Ministry: சித்த மருத்துவத்தை திருடும் ஆயுர்வேதம்? ஆதரவாக மோடி அரசு? கொதிக்கும் தமிழ் சமூகம்
Siddha Ayush Ministry: சித்த மருத்துவத்தை திருடும் ஆயுர்வேதம்? ஆதரவாக மோடி அரசு? கொதிக்கும் தமிழ் சமூகம்
EPS Delhi Visit : ’விமானத்தில் ஏறிய எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி’ டெல்லியில் ரகசிய டீல்!
EPS Delhi Visit : ’விமானத்தில் ஏறிய எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி’ டெல்லியில் ரகசிய டீல்!
ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Edappadi Palaniswami : ராஜ்யசபா சீட் யாருக்கு? OPS, TTV-க்கு  செக்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்Savukku Sankar: சவுக்கு வீட்டில் சாக்கடை.. அடித்து உடைத்த கும்பல்! வெளியான பகீர் காட்சி | CCTVPuducherry Assembly | திமுக MLA-க்கள் ஆவேசம் குண்டுக்கட்டாக வெளியேற்றம் சட்டப்பேரவையில் பரபரப்புMadurai Police Murder | மதுரையில் துப்பாக்கிச் சூடு குற்றவாளியை பிடித்த போலீஸ் காவலர் எரித்துக் கொன்ற விவகாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
Siddha Ayush Ministry: சித்த மருத்துவத்தை திருடும் ஆயுர்வேதம்? ஆதரவாக மோடி அரசு? கொதிக்கும் தமிழ் சமூகம்
Siddha Ayush Ministry: சித்த மருத்துவத்தை திருடும் ஆயுர்வேதம்? ஆதரவாக மோடி அரசு? கொதிக்கும் தமிழ் சமூகம்
EPS Delhi Visit : ’விமானத்தில் ஏறிய எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி’ டெல்லியில் ரகசிய டீல்!
EPS Delhi Visit : ’விமானத்தில் ஏறிய எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி’ டெல்லியில் ரகசிய டீல்!
ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
Actor Hussaini: திரையுலகம் அதிர்ச்சி..! பலனளிக்காத சிகிச்சை, நடிகர் ஹுசைனி மரணம் - உடல் தானம்
Actor Hussaini: திரையுலகம் அதிர்ச்சி..! பலனளிக்காத சிகிச்சை, நடிகர் ஹுசைனி மரணம் - உடல் தானம்
Watch Video: உன் பொண்ணா இருந்தா இப்படி பண்ணுவியா.? +2 மாணவியை ஓடவிட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர்...
உன் பொண்ணா இருந்தா இப்படி பண்ணுவியா.? +2 மாணவியை ஓடவிட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர்...
kunal kamra: ”சி.எம்., சொன்னா? மன்னிப்புலா கேட்க முடியாது” ஏக்நாத் ஷிண்டே விவகாரம், குணால் கம்ரா திட்டவட்டம்
kunal kamra: ”சி.எம்., சொன்னா? மன்னிப்புலா கேட்க முடியாது” ஏக்நாத் ஷிண்டே விவகாரம், குணால் கம்ரா திட்டவட்டம்
Turkey Protest: துருக்கியில் போராட்டக்காரர்களை பறக்கவிட்ட போலீஸ்காரர்கள்.. உச்சகட்ட பதற்றம்.. 1,100 பேர் கைது...
துருக்கியில் போராட்டக்காரர்களை பறக்கவிட்ட போலீஸ்காரர்கள்.. உச்சகட்ட பதற்றம்.. 1,100 பேர் கைது...
Embed widget