PM Modi: ”மோடி ஒன்னும் செய்ய மாட்டாரு” அடித்து சொல்லும் மக்கள் - கஷ்டத்தில் தவிக்கும் இந்தியர்கள்...
PM Modi: பிரதமர் மோடியின் ஆட்சியின் கீழ் வாழ்க்கைத் தரம் உயரும் என்ற நம்பிக்கையை இழந்த இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
![PM Modi: ”மோடி ஒன்னும் செய்ய மாட்டாரு” அடித்து சொல்லும் மக்கள் - கஷ்டத்தில் தவிக்கும் இந்தியர்கள்... more indians losing hope of improved quality of life under pm modi survey shows details in tamil PM Modi: ”மோடி ஒன்னும் செய்ய மாட்டாரு” அடித்து சொல்லும் மக்கள் - கஷ்டத்தில் தவிக்கும் இந்தியர்கள்...](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/15/871777944e7e4f5599c0cdb597d98b8c1736942269180426_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
PM Modi: 2013ம் ஆண்டிற்குப் பிறகு இதுவரை இல்லாத அளவில் மோடியின் மீதான நம்பிக்கை சரிந்துள்ளதாக, ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சி-வோட்டர்ஸ் ஆய்வு முடிவுகள்:
நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் இன்னும் இரண்டு தினங்களில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சிக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது.தேங்கி நிற்கும் ஊதியங்கள் மற்றும் உயர் வாழ்க்கைச் செலவுகள் ஆகியவை எதிர்கால வாய்ப்புகளை மழுங்கடிப்பதால், அதிகமான இந்தியர்கள் தங்கள் வாழ்க்கைத் தரம் குறித்து நம்பிக்கையை இழந்து வருவதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டுக்கு முந்தைய கணக்கெடுப்பில் பதிலளித்தவர்களில் 37 சதவீதத்திற்கும் அதிகமானோர் அடுத்த ஆண்டில் சாதாரண மக்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரம் மோசமடையும் என்று எதிர்பார்க்கிறார்கள். இது 2013 க்குப் பிறகு மிக உயர்ந்த சதவீதமாகும் என்று தேர்தல் ஏஜென்சி நிறுவனமான சி-வோட்டரின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014 முதல் மோடி பிரதமராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நம்பிக்கையை இழக்கும் பிரதமர் மோடி?
இந்த கணக்கெடுப்புக்காக இந்திய மாநிலங்கள் முழுவதும் 5,269 பெரியவர்களிடம் கருத்துக் கணிப்பை நடத்தியதாக சி-வோட்டர் தெரிவித்துள்ளது. அதில் ”கண்களில் நீர் வரவழைக்கும் அளவில் தொடர்ந்து உயரும் உணவுப் பணவீக்கம் இந்தியக் குடும்ப வரவு செலவுத் திட்டங்களை அழுத்தி, செலவழிக்கும் சக்தியைக் குறைத்துள்ளது. மேலும் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடான இந்தியா, கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவிலான அதன் மெதுவான வளர்ச்சியைப் பதிவு செய்யும்” என்று எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துக்கணிப்புக்கு பதிலளித்தவர்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு பணவீக்கம் கட்டுப்பாடில்லாமல் இருப்பதாகவும், மோடி பிரதமரான பிறகு விலைகள் உயர்ந்துள்ளதாகவும், பாதிக்கும் மேற்பட்டவர்கள் பணவீக்க விகிதம் தங்கள் வாழ்க்கைத் தரத்தை "பாதகமாக" பாதித்துள்ளதாகவும் கூறியுள்ளனர். கருத்து கணிப்புகளில் பதிலளித்தவர்களில் ஏறக்குறைய பாதி பேர், கடந்த ஆண்டில் தங்களுடைய தனிப்பட்ட வருமானம் ஒரே மாதிரியாக இருந்ததாகக் கூறியுள்ளனர்.
வேலைவாய்ப்புகள் எங்கே?
உலக அளவில் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தாலும், இந்தியாவின் வேலைச் சந்தை, அதன் இளைஞர்களுக்கு வழக்கமான ஊதியம் பெற போதுமான வாய்ப்புகளை வழங்கவில்லை. கடந்த பட்ஜெட்டில், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான பல்வேறு திட்டங்களுக்காக ஐந்து ஆண்டுகளில் செலவழிக்க கிட்டத்தட்ட 24 பில்லியன் டாலர்களை இந்தியா ஒதுக்கியது. ஆனால் விவரங்கள் பற்றிய விவாதங்கள் இழுபறியாக இருப்பதால் அந்த திட்டங்கள் இன்னும் செயல்படுத்தப்படவில்லை. இதனிடையே மத்திய அரசின் பட்ஜெட்டில், வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதார வளர்ச்சியை உயர்த்தவும், செலவழிக்கக்கூடிய வருமானத்தை உயர்த்தவும் மற்றும் நீட்டிக்கப்பட்ட நடுத்தர வர்க்கத்தை சமாதானப்படுத்தவும் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)