கடந்த கால கசப்பான நினைவுகளை மறக்கும் வழிகள்!
வாழ்க்கையில் அனைவருக்கும் கசப்பான நினைவுகள் இருக்கும். அவற்றை மறக்காமல் அடிக்கடி நினைத்துக் கொண்டே இருந்தால், தினசரி வேலைகளில் கவனம் செலுத்த முடியாது. மனஅமைதியும், தன்னம்பிக்கையும் குறையும். கடந்த காலங்களில் செய்த தவறுகள், மனஅமைதியை பாதிக்கும் நிகழ்வுகள் போன்ற வற்றை அடிக்கடி நினைத்துப் பார்ப்பதால் மனச் சோர்வு, பதற்றம் போன்ற உளவியல் பிரச்சினைகளுக்கு உள்ளாக நேரிடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
வ்வொரு நாளும் நமக்கு ஒவ்வொரு அனுபவத்தை கொடுக்கும் என்பதை புரிந்து கொள்வது அவசியம். ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட விடாமல் பாதுகாக்க வேண்டும்.
சில படங்கள், பொருட்கள், வாசனைகள் அல்லது இடங்கள் நமக்கு மோசமான நினைவுகளைத் தூண்டலாம். அந்த நிகழ்வு நடந்த இடத்திற்கு செல்வதையோ அல்லது அந்த நினைவுடன் சம்பந்தப் பட்ட நபரையோ, பொருட்களையோ தவிர்த்தால் நாளடைவில் அந்த நினைவை மறக்க முடியும்.
கசப்பான நினைவுகள் மனதில் கிளர்ந்தெழும்போது, ஒரு நிமிடம் நிதானமாக செயல்பட்டு மகிழ்ச்சிக்குரிய நினைவுகளை மனதிற்கு கொண்டு வர முயற்சி செய்யுங்கள். வாழ்க்கையில் தினந்தோறும் அந்தந்த நொடியில் வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.
கடந்த காலம் அல்லது வருங்காலத்தைப் பற்றி யோசிக் காமல் நிகழ் காலத்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள். தினமும் உங்களை நீங்களே ஏதோ ஒரு வேலையில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.
அப்போது கசப்பான நினைவுகளை நினைக்க நேரம் இருக்காது. கசப்பான நினைவுகளைப் பற்றி சிந்திப்பதால் நம் உடலை கவனித்துக்கொள்ள தவறுகிறோம். எனவே உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள்.
தினமும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள். நம்பகத்தன்மை வாய்ந்த நபருடன் உங்களின் கசப்பான எண்ணங்கள் மற்றும் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
மனதில் தோன்றும் உணவுகளை எழுதுங்கள். எவ்வித தயக்குமும் இல்லாமல் எழுதலாம். பின்பு, எழுதிய காதிதத்தை கிழித்துவிடலாம்.
உளவியல் ஆலோசனைகளைப் பெற தயக்கம் காட்டாதீர்கள். மனதை அமைதியான நிலையில் செலுத்துவதற்கு உளவியல் ஆலோசகரை அணுகுவது சிறந்த வழியாகும்.வாழ்க்கை முறையில் சில சுவாரசியமான மாற்றங் களை ஏற்படுத்துங்கள். உங்களுக்குப் பிடித்த பொழுது போக்குகளில் கவனம் செலுத்துங்கள்.