மேலும் அறிய

Railways Privatisation : ரயில்வே துறை தனியார்மயமா? - மத்திய அமைச்சர் கொடுத்த விளக்கம் இதோ..

2023க்குள் 75 பெட்டிகள் தயாரிக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளது. 

ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் பேச்சுக்கே இடமில்லை என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் கூறியுள்ளார்.சென்னை ஐ.சி.எஃப்பில் வந்தே பாரத் திட்டத்தின் கீழான ரயில்வே கோச்கள் உருவாக்கும் பணியை பார்வையிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.மேலும் கூறிய அவர்,”கடைசியாக நாம் 50களில் தான் கோச்களை வடிவமைத்துள்ளோம். புதிய டிசைன்களை உருவாக்குவது தேவையாக இருக்கிறது.” என்றுள்ளார். 

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் கோச்கள் அதிகபட்சமாக ஒரு மணிநேரத்துக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கக் கூடியவை. முதல் இரண்டு பெட்டிகள் வருகின்ற ஆகஸ்ட்க்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து 2023க்குள் 75 பெட்டிகள் தயாரிக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளது. 

முன்னதாக, இந்தியாவின் 2022-23ம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார், அவற்றில் ரயில்வே துறைக்காகவும் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

ரயில்வே துறையின் கீழ் அவர் வெளியிட்ட அறிவிப்புகள், “நாடு முழுவதும் 2023ம் ஆண்டுக்குள் 2 ஆயிரம் கி.மீ. தொலைவிற்கு ரயில்வே கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும். உள்ளூர் வணிகங்களை மேம்படுத்த ஒரு ரயில்நிலையம், ஒரு உற்பத்தி பொருள் என்ற நடைமுறை அமல்படுத்தப்படும். போக்குவரத்து வசதிகளுக்கும், உள்கட்டமைப்பு வசதிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.

நாடு முழுவதும் அடுத்த 3 ஆண்டுகளில் 400 வந்தே பாரத் ரெயில்கள் அறிமுகப்படுத்தப்படும். வந்தே பாரத் திட்டத்தின்கீழ் இந்த ரயில்கள் கொண்டு வரப்படுகின்றன. சிறந்த ஆற்றல் திறன்கொண்ட புதிய தலைமுறை வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படும். அடுத்த 3 ஆண்டுகளில் 100 பிரதம கதி சக்தி ரயில் முனையங்கள் அமைக்கப்படும். சிறு விவசாயிகள் மற்றும் சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ரயில்வே புதிய தயாரிப்புகளை உருவாக்கும்.

பிரதமர் கதி சக்தி மாஸ்டர் பிளான் என்ற திட்டத்தின் மூலம் 2021-22 நிதிநிலை அறிக்கையில் பொது முதலீடு மற்றும் மூலதனச் செலவு கணிசமான அளவு உயர்ந்துள்ளது. இந்த நிதிநிலை அறிக்கையில் இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், எஸ்.சி.எஸ்.டி. பிரதமர் கதி சக்தி மாஸ்டர் பிளான் மூலம் வழிநடத்தப்படுவார்கள் “ என்று அவர் அறிவித்தார்.

நிர்மலா சீதாராமனின் அறிவிப்பில் குறிப்பிட்டு எந்த ரயில்சேவைகள் பற்றியும் அறிவிப்புகள் இல்லை. புதியதாக அமைய உள்ள 100 ரயில் முனையங்கள், வந்தே பாரத் ரயில்கள் குறித்து ரயில்வே துறை விரிவாக விளக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நிதிநிலை அறிக்கை தாக்கலின்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆத்மநிர்பர் பாரதத்தை அடைவதற்கான உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டம் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது என்றார். ரயில்களின் பயணிகள் கட்டணம் குறைப்பு, சலுகை உள்ளிட்டவை குறித்து எந்தவித அறிவிப்புகளும் வெளியாகவில்லை.

நாட்டில் ரயில்வே துறைக்கு என்று தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்த நிலையில், மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு நாட்டின் நிதிநிலை அறிக்கையுடன் இணைந்தே ரயில்வே பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

ஆன்லைன் பரிவர்த்தனை: வருமான வரி நோட்டீஸ் வராமல் தடுக்க இதைச் சரிபார்க்கவும்!
ஆன்லைன் பரிவர்த்தனை: வருமான வரி நோட்டீஸ் வராமல் தடுக்க இதைச் சரிபார்க்கவும்!
வரிசைக்கு குட்பை! சத்தீஸ்கரில் ரேஷன் ஏடிஎம்: தமிழகத்திலும் வருமா?
வரிசைக்கு குட்பை! சத்தீஸ்கரில் ரேஷன் ஏடிஎம்: தமிழகத்திலும் வருமா?
மஹிந்திரா கார்களுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் வரை சலுகை! முந்துங்கள்!..
மஹிந்திரா கார்களுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் வரை சலுகை! முந்துங்கள்!..
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
CM Vijay: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Anbumani: பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
Kite Festival : காத்தாடி திருவிழா! 2 நாள் விடுமுறையில் குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம் – அனுமதி இலவசம்; எங்கே தெரியுமா?
காத்தாடி திருவிழா! 2 நாள் விடுமுறையில் குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம் – அனுமதி இலவசம்; எங்கே தெரியுமா?
Embed widget