மேலும் அறிய

Railways Privatisation : ரயில்வே துறை தனியார்மயமா? - மத்திய அமைச்சர் கொடுத்த விளக்கம் இதோ..

2023க்குள் 75 பெட்டிகள் தயாரிக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளது. 

ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் பேச்சுக்கே இடமில்லை என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் கூறியுள்ளார்.சென்னை ஐ.சி.எஃப்பில் வந்தே பாரத் திட்டத்தின் கீழான ரயில்வே கோச்கள் உருவாக்கும் பணியை பார்வையிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.மேலும் கூறிய அவர்,”கடைசியாக நாம் 50களில் தான் கோச்களை வடிவமைத்துள்ளோம். புதிய டிசைன்களை உருவாக்குவது தேவையாக இருக்கிறது.” என்றுள்ளார். 

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் கோச்கள் அதிகபட்சமாக ஒரு மணிநேரத்துக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கக் கூடியவை. முதல் இரண்டு பெட்டிகள் வருகின்ற ஆகஸ்ட்க்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து 2023க்குள் 75 பெட்டிகள் தயாரிக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளது. 

முன்னதாக, இந்தியாவின் 2022-23ம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார், அவற்றில் ரயில்வே துறைக்காகவும் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

ரயில்வே துறையின் கீழ் அவர் வெளியிட்ட அறிவிப்புகள், “நாடு முழுவதும் 2023ம் ஆண்டுக்குள் 2 ஆயிரம் கி.மீ. தொலைவிற்கு ரயில்வே கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும். உள்ளூர் வணிகங்களை மேம்படுத்த ஒரு ரயில்நிலையம், ஒரு உற்பத்தி பொருள் என்ற நடைமுறை அமல்படுத்தப்படும். போக்குவரத்து வசதிகளுக்கும், உள்கட்டமைப்பு வசதிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.

நாடு முழுவதும் அடுத்த 3 ஆண்டுகளில் 400 வந்தே பாரத் ரெயில்கள் அறிமுகப்படுத்தப்படும். வந்தே பாரத் திட்டத்தின்கீழ் இந்த ரயில்கள் கொண்டு வரப்படுகின்றன. சிறந்த ஆற்றல் திறன்கொண்ட புதிய தலைமுறை வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படும். அடுத்த 3 ஆண்டுகளில் 100 பிரதம கதி சக்தி ரயில் முனையங்கள் அமைக்கப்படும். சிறு விவசாயிகள் மற்றும் சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ரயில்வே புதிய தயாரிப்புகளை உருவாக்கும்.

பிரதமர் கதி சக்தி மாஸ்டர் பிளான் என்ற திட்டத்தின் மூலம் 2021-22 நிதிநிலை அறிக்கையில் பொது முதலீடு மற்றும் மூலதனச் செலவு கணிசமான அளவு உயர்ந்துள்ளது. இந்த நிதிநிலை அறிக்கையில் இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், எஸ்.சி.எஸ்.டி. பிரதமர் கதி சக்தி மாஸ்டர் பிளான் மூலம் வழிநடத்தப்படுவார்கள் “ என்று அவர் அறிவித்தார்.

நிர்மலா சீதாராமனின் அறிவிப்பில் குறிப்பிட்டு எந்த ரயில்சேவைகள் பற்றியும் அறிவிப்புகள் இல்லை. புதியதாக அமைய உள்ள 100 ரயில் முனையங்கள், வந்தே பாரத் ரயில்கள் குறித்து ரயில்வே துறை விரிவாக விளக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நிதிநிலை அறிக்கை தாக்கலின்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆத்மநிர்பர் பாரதத்தை அடைவதற்கான உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டம் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது என்றார். ரயில்களின் பயணிகள் கட்டணம் குறைப்பு, சலுகை உள்ளிட்டவை குறித்து எந்தவித அறிவிப்புகளும் வெளியாகவில்லை.

நாட்டில் ரயில்வே துறைக்கு என்று தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்த நிலையில், மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு நாட்டின் நிதிநிலை அறிக்கையுடன் இணைந்தே ரயில்வே பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

வேலை விட்டாலும் PF பணத்திற்கு வட்டி உண்டு! 58 வயது வரை கவலை வேண்டாம்.
வேலை விட்டாலும் PF பணத்திற்கு வட்டி உண்டு! 58 வயது வரை கவலை வேண்டாம்.
வங்கி வேலைகள்: AI மாற்றம், புதிய திறன்களே உங்கள் எதிர்காலம்!முழு விபரம் தெரிந்துகொள்ளுங்கள்.
வங்கி வேலைகள்: AI மாற்றம், புதிய திறன்களே உங்கள் எதிர்காலம்!முழு விபரம் தெரிந்துகொள்ளுங்கள்.
Top 10 Headlines Today: ஜூலை 21 டாப் 10 செய்திகள்: நீட் போராட்டம், நாடாளுமன்ற அமளி, மேகதாது சர்ச்சை!
Top 10 Headlines Today: ஜூலை 21 டாப் 10 செய்திகள்: நீட் போராட்டம், நாடாளுமன்ற அமளி, மேகதாது சர்ச்சை!
Cockroach Delhi Protest : டெல்லியை அதிரவைத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.! போராட்டத்திற்கான காரணம் என்ன.?
டெல்லியை அதிரவைத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.! போராட்டத்திற்கான காரணம் என்ன.?

வீடியோ

Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
AIADMK: பொதுக்குழுவிற்கு தயாராகும் அதிமுக..! புரட்சியாளர்களுக்கு எண்ட் கார்ட், ஓரங்கட்ட எடப்பாடி பக்கா ப்ளான்
பொதுக்குழுவிற்கு தயாராகும் அதிமுக..! புரட்சியாளர்களுக்கு எண்ட் கார்ட், ஓரங்கட்ட எடப்பாடி பக்கா ப்ளான்
“நல்ல மரியாதை”.. விஜய் காலடியில் விழுந்து கிடக்கும் வைகோ.. நாஞ்சில் சம்பத் பேச்சால் சர்ச்சை!
“நல்ல மரியாதை”.. விஜய் காலடியில் விழுந்து கிடக்கும் வைகோ.. நாஞ்சில் சம்பத் பேச்சால் சர்ச்சை!
Markandeyan: MLA மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் சிறை.. கோபத்தில் விஜய் குடும்பத்தை விமர்சித்த மகன்!
Markandeyan: MLA மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் சிறை.. கோபத்தில் விஜய் குடும்பத்தை விமர்சித்த மகன்!
Automobile Facts: கோடி ரூபாய் கொடுத்து கார் வாங்கினாலும்.. ரூ.10 எலுமிச்சை முக்கியம் ஏன் தெரியுமா? விஷயம் என்ன?
கோடி ரூபாய் கொடுத்து கார் வாங்கினாலும்.. ரூ.10 எலுமிச்சை முக்கியம் ஏன் தெரியுமா? விஷயம் என்ன?
திமுக MLA கைது எதிரொலி.. ஆட்டத்துக்கு நான் வரல.. அனிதா ராதாகிருஷ்ணன் எடுத்த திடீர் முடிவு!
திமுக MLA கைது எதிரொலி.. ஆட்டத்துக்கு நான் வரல.. அனிதா ராதாகிருஷ்ணன் எடுத்த திடீர் முடிவு!
Gold and silver rate today : போட்டி போட்டு உயர்ந்த தங்கம், வெள்ளி விலை.! ஒரு கிராமுக்கு இவ்வளவா.!! இன்றைய விலை நிலவரம் இதோ..
போட்டி போட்டு உயர்ந்த தங்கம், வெள்ளி விலை.! ஒரு கிராமுக்கு இவ்வளவா.!! இன்றைய விலை நிலவரம் இதோ..
Temple Trustees : 8,193 திருக்கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம்.! தகுதி என்ன.? விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது.?
8,193 திருக்கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம்.! தகுதி என்ன.? விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது.?
JanaNayagan: CM விஜயின் ஜனநாயகன் - பிரச்னை செஞ்சது யார்? உண்மையை போட்டுடைத்த இயக்குனர் எச். வினோத்
CM விஜயின் ஜனநாயகன் - பிரச்னை செஞ்சது யார்? உண்மையை போட்டுடைத்த இயக்குனர் எச். வினோத்
Embed widget