மேலும் அறிய

Railways Privatisation : ரயில்வே துறை தனியார்மயமா? - மத்திய அமைச்சர் கொடுத்த விளக்கம் இதோ..

2023க்குள் 75 பெட்டிகள் தயாரிக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளது. 

ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் பேச்சுக்கே இடமில்லை என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் கூறியுள்ளார்.சென்னை ஐ.சி.எஃப்பில் வந்தே பாரத் திட்டத்தின் கீழான ரயில்வே கோச்கள் உருவாக்கும் பணியை பார்வையிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.மேலும் கூறிய அவர்,”கடைசியாக நாம் 50களில் தான் கோச்களை வடிவமைத்துள்ளோம். புதிய டிசைன்களை உருவாக்குவது தேவையாக இருக்கிறது.” என்றுள்ளார். 

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் கோச்கள் அதிகபட்சமாக ஒரு மணிநேரத்துக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கக் கூடியவை. முதல் இரண்டு பெட்டிகள் வருகின்ற ஆகஸ்ட்க்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து 2023க்குள் 75 பெட்டிகள் தயாரிக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளது. 

முன்னதாக, இந்தியாவின் 2022-23ம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார், அவற்றில் ரயில்வே துறைக்காகவும் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

ரயில்வே துறையின் கீழ் அவர் வெளியிட்ட அறிவிப்புகள், “நாடு முழுவதும் 2023ம் ஆண்டுக்குள் 2 ஆயிரம் கி.மீ. தொலைவிற்கு ரயில்வே கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும். உள்ளூர் வணிகங்களை மேம்படுத்த ஒரு ரயில்நிலையம், ஒரு உற்பத்தி பொருள் என்ற நடைமுறை அமல்படுத்தப்படும். போக்குவரத்து வசதிகளுக்கும், உள்கட்டமைப்பு வசதிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.

நாடு முழுவதும் அடுத்த 3 ஆண்டுகளில் 400 வந்தே பாரத் ரெயில்கள் அறிமுகப்படுத்தப்படும். வந்தே பாரத் திட்டத்தின்கீழ் இந்த ரயில்கள் கொண்டு வரப்படுகின்றன. சிறந்த ஆற்றல் திறன்கொண்ட புதிய தலைமுறை வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படும். அடுத்த 3 ஆண்டுகளில் 100 பிரதம கதி சக்தி ரயில் முனையங்கள் அமைக்கப்படும். சிறு விவசாயிகள் மற்றும் சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ரயில்வே புதிய தயாரிப்புகளை உருவாக்கும்.

பிரதமர் கதி சக்தி மாஸ்டர் பிளான் என்ற திட்டத்தின் மூலம் 2021-22 நிதிநிலை அறிக்கையில் பொது முதலீடு மற்றும் மூலதனச் செலவு கணிசமான அளவு உயர்ந்துள்ளது. இந்த நிதிநிலை அறிக்கையில் இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், எஸ்.சி.எஸ்.டி. பிரதமர் கதி சக்தி மாஸ்டர் பிளான் மூலம் வழிநடத்தப்படுவார்கள் “ என்று அவர் அறிவித்தார்.

நிர்மலா சீதாராமனின் அறிவிப்பில் குறிப்பிட்டு எந்த ரயில்சேவைகள் பற்றியும் அறிவிப்புகள் இல்லை. புதியதாக அமைய உள்ள 100 ரயில் முனையங்கள், வந்தே பாரத் ரயில்கள் குறித்து ரயில்வே துறை விரிவாக விளக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நிதிநிலை அறிக்கை தாக்கலின்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆத்மநிர்பர் பாரதத்தை அடைவதற்கான உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டம் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது என்றார். ரயில்களின் பயணிகள் கட்டணம் குறைப்பு, சலுகை உள்ளிட்டவை குறித்து எந்தவித அறிவிப்புகளும் வெளியாகவில்லை.

நாட்டில் ரயில்வே துறைக்கு என்று தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்த நிலையில், மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு நாட்டின் நிதிநிலை அறிக்கையுடன் இணைந்தே ரயில்வே பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

முன்னணி IT நிறுவனங்களில் வேலை வேண்டுமா? இந்த 4 திறன்களை இப்போதே கற்றுக்கொள்ளுங்கள்!
முன்னணி IT நிறுவனங்களில் வேலை வேண்டுமா? இந்த 4 திறன்களை இப்போதே கற்றுக்கொள்ளுங்கள்!
ஏர்டெல் ரீசார்ஜ் விலை உயர்வு: ரூ.299 பிளான் நீக்கம், புதிய குறைந்தபட்ச கட்டணம்! விபரம் இதோ..
ஏர்டெல் ரீசார்ஜ் விலை உயர்வு: ரூ.299 பிளான் நீக்கம், புதிய குறைந்தபட்ச கட்டணம்! விபரம் இதோ..
Bofors Case: நாட்டையே உலுக்கிய 40 ஆண்டு கால வழக்கு..! முடித்துவைத்த உச்சநீதி மன்றம் - தீர்ப்பு என்ன?
நாட்டையே உலுக்கிய 40 ஆண்டு கால வழக்கு..! முடித்துவைத்த உச்சநீதி மன்றம் - தீர்ப்பு என்ன?
Social Media: 2 மணி நேரம் தான் டைம்..! சமூக வலைதளங்களுக்கு கெடு விதித்த மத்திய அரசு - காரணம் என்ன?
2 மணி நேரம் தான் டைம்..! சமூக வலைதளங்களுக்கு கெடு விதித்த மத்திய அரசு - காரணம் என்ன?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Trump on Iran War: என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Embed widget