மேலும் அறிய

`குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது இரக்கம் கொண்டது!’ - உள்துறை அமைச்சகம் அறிக்கை!

குடியுரிமை திருத்தச் சட்டம் இரக்கம் கொண்டதாகவும், மேம்பட்டதாகவும் இருப்பதாகவும், எந்த ஒரு இந்தியக் குடிமகனும் இதனால் குடியுரிமையை இழக்க மாட்டார்கள் எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. 

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் விதிமுறைகளுக்கான அறிவிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளியிடப்படாத நிலையில், மத்திய அரசு இந்தச் சட்டத்தை இரக்கம் கொண்ட ஒன்றாகவும், மேம்பட்டதாகவும் இருப்பதாகவும், எந்த ஒரு இந்தியக் குடிமகனும் இதனால் குடியுரிமையை இழக்க மாட்டார்கள் எனவும் கூறியுள்ளது. 

மத்திய உள்துறை அமைச்சகத்தின் தற்போதைய ஆண்டு அறிக்கையின் படி, `குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது குறிப்பிட்ட சில நாடுகளில் இருந்து வரும் குறிப்பிட்ட சில சமூகங்களைச் சேர்ந்த மக்களுக்குக் குறிப்பிட்ட நாள் குறிப்போடு சற்றே ஆசுவாசத்தை வழங்குவதற்காக துல்லியமாக உருவாக்கப்பட்டிருக்கும் சட்டம். இது இரக்கம் கொண்டதும், மேம்பட்டதும் ஆகும்’ எனக் கூறப்பட்டுள்ளது. 

மேலும், `குடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியக் குடிமக்களுக்குப் பொருந்தாது. மேலும், இது எந்த இந்தியக் குடிமகனின் உரிமைகளையும் நீக்கிவிடாது. குடியுரிமை சட்டம் 1955-ன் படி தற்போது உள்ள விதிமுறைகள் எதுவும் மாற்றப்படாது. எந்த நாட்டையும், எந்த மதத்தைச் சேர்ந்த எவரும் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றி, பதிவு செய்வதன் மூலமாக இந்தியக் குடியுரிமை பெற முடியும்’ எனவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

`குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது இரக்கம் கொண்டது!’ - உள்துறை அமைச்சகம் அறிக்கை!

கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் 12 அன்று, குடியுரிமை திருத்தச் சட்டம் அறிவிக்கப்பட்டு, ஆப்கானிஸ்தான், வங்காள தேசம், பாகிஸ்தான் முதலான நாடுகளில் இருந்து குடியேற வரும் இந்து, சீக்கிய, பௌத்த, சமண, பார்சி, கிறித்துவ மதங்களைச் சேர்ந்தோருக்குக் குடியுரிமை வழங்கும் சட்டமாக கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி 10 முதல் அமலுக்கு வந்தது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் வெடித்தன. இந்தியாவில் வாழும் முஸ்லிம்களின் குடியுரிமையை இந்தச் சட்டம் பறிக்கக்கூடும் என அச்சம் எழுந்ததால் இந்தப் போராட்டங்கள் நடைபெற்றன. 

இந்தச் சட்டத்தின் விதிமுறைகள் பற்றிய அறிவிப்பு இன்னும் வெளிவராத நிலையில், இந்தச் சட்டம் முழுமையாக அமலுக்கு வராமல் உள்ளது. 

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆண்டு அறிக்கையின் மூலம், வட கிழக்குப் பகுதிகளில் அரசியலமைப்புச் சட்டத்தின் ஆறாவது அட்டவணையின் படி பாதுகாக்கப்படும் பகுதிகளில் இந்தச் சட்டம் அமல்படுத்தப்படாது எனவும், இந்தப் பகுதிகளில் வாழும் பழங்குடி மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் எனவும் சுட்டிக் காட்டியுள்ளது. 

`குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது இரக்கம் கொண்டது!’ - உள்துறை அமைச்சகம் அறிக்கை!

இவை மட்டுமின்றி, இந்த அறிக்கையில் கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்றின் போது, இந்தியாவுக்கு சுமார் 32.7 லட்சம் வெளிநாட்டுப் பயணிகள் வந்துள்ளதாகக் கூறியுள்ளது. இவர்களுள் அதிக பயணிகள் அமெரிக்காவில் இருந்து வந்துள்ளனர். 61 ஆயிரம் பயணிகள் அமெரிக்காவில் இருந்து வந்துள்ள நிலையில், அடுத்தடுத்த இடங்களில் 37 ஆயிரம் பயணிகளோடு வங்காள தேசம், 33 ஆயிரம் பயணிகளோடு பிரிட்டன், 13 ஆயிரம் பயணிகளோடு கனடா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்Vikravandi By Election | ’’வராதீங்க ஸ்டாலின்’’தடுக்கும் அமைச்சர்கள்..விக்கிரவாண்டியில் பரபரப்புMayors Resign | ஆட்டம் காட்டிய மேயர்கள்..அடக்கி ஆளும் ஸ்டாலின்!களையெடுப்பு ஆரம்பமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி
அப்போலோ மருத்துவமனையில் இருந்து எல்.கே. அத்வானி டிஸ்சார்ஜ்!
Embed widget