மேலும் அறிய

`குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது இரக்கம் கொண்டது!’ - உள்துறை அமைச்சகம் அறிக்கை!

குடியுரிமை திருத்தச் சட்டம் இரக்கம் கொண்டதாகவும், மேம்பட்டதாகவும் இருப்பதாகவும், எந்த ஒரு இந்தியக் குடிமகனும் இதனால் குடியுரிமையை இழக்க மாட்டார்கள் எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. 

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் விதிமுறைகளுக்கான அறிவிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளியிடப்படாத நிலையில், மத்திய அரசு இந்தச் சட்டத்தை இரக்கம் கொண்ட ஒன்றாகவும், மேம்பட்டதாகவும் இருப்பதாகவும், எந்த ஒரு இந்தியக் குடிமகனும் இதனால் குடியுரிமையை இழக்க மாட்டார்கள் எனவும் கூறியுள்ளது. 

மத்திய உள்துறை அமைச்சகத்தின் தற்போதைய ஆண்டு அறிக்கையின் படி, `குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது குறிப்பிட்ட சில நாடுகளில் இருந்து வரும் குறிப்பிட்ட சில சமூகங்களைச் சேர்ந்த மக்களுக்குக் குறிப்பிட்ட நாள் குறிப்போடு சற்றே ஆசுவாசத்தை வழங்குவதற்காக துல்லியமாக உருவாக்கப்பட்டிருக்கும் சட்டம். இது இரக்கம் கொண்டதும், மேம்பட்டதும் ஆகும்’ எனக் கூறப்பட்டுள்ளது. 

மேலும், `குடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியக் குடிமக்களுக்குப் பொருந்தாது. மேலும், இது எந்த இந்தியக் குடிமகனின் உரிமைகளையும் நீக்கிவிடாது. குடியுரிமை சட்டம் 1955-ன் படி தற்போது உள்ள விதிமுறைகள் எதுவும் மாற்றப்படாது. எந்த நாட்டையும், எந்த மதத்தைச் சேர்ந்த எவரும் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றி, பதிவு செய்வதன் மூலமாக இந்தியக் குடியுரிமை பெற முடியும்’ எனவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

`குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது இரக்கம் கொண்டது!’ - உள்துறை அமைச்சகம் அறிக்கை!

கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் 12 அன்று, குடியுரிமை திருத்தச் சட்டம் அறிவிக்கப்பட்டு, ஆப்கானிஸ்தான், வங்காள தேசம், பாகிஸ்தான் முதலான நாடுகளில் இருந்து குடியேற வரும் இந்து, சீக்கிய, பௌத்த, சமண, பார்சி, கிறித்துவ மதங்களைச் சேர்ந்தோருக்குக் குடியுரிமை வழங்கும் சட்டமாக கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி 10 முதல் அமலுக்கு வந்தது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் வெடித்தன. இந்தியாவில் வாழும் முஸ்லிம்களின் குடியுரிமையை இந்தச் சட்டம் பறிக்கக்கூடும் என அச்சம் எழுந்ததால் இந்தப் போராட்டங்கள் நடைபெற்றன. 

இந்தச் சட்டத்தின் விதிமுறைகள் பற்றிய அறிவிப்பு இன்னும் வெளிவராத நிலையில், இந்தச் சட்டம் முழுமையாக அமலுக்கு வராமல் உள்ளது. 

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆண்டு அறிக்கையின் மூலம், வட கிழக்குப் பகுதிகளில் அரசியலமைப்புச் சட்டத்தின் ஆறாவது அட்டவணையின் படி பாதுகாக்கப்படும் பகுதிகளில் இந்தச் சட்டம் அமல்படுத்தப்படாது எனவும், இந்தப் பகுதிகளில் வாழும் பழங்குடி மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் எனவும் சுட்டிக் காட்டியுள்ளது. 

`குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது இரக்கம் கொண்டது!’ - உள்துறை அமைச்சகம் அறிக்கை!

இவை மட்டுமின்றி, இந்த அறிக்கையில் கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்றின் போது, இந்தியாவுக்கு சுமார் 32.7 லட்சம் வெளிநாட்டுப் பயணிகள் வந்துள்ளதாகக் கூறியுள்ளது. இவர்களுள் அதிக பயணிகள் அமெரிக்காவில் இருந்து வந்துள்ளனர். 61 ஆயிரம் பயணிகள் அமெரிக்காவில் இருந்து வந்துள்ள நிலையில், அடுத்தடுத்த இடங்களில் 37 ஆயிரம் பயணிகளோடு வங்காள தேசம், 33 ஆயிரம் பயணிகளோடு பிரிட்டன், 13 ஆயிரம் பயணிகளோடு கனடா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
India Squad: சூர்யகுமார் முதல் சாம்சன் வரை.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி இதுதான் - முக்கிய வீரருக்கு கல்தா!
India Squad: சூர்யகுமார் முதல் சாம்சன் வரை.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி இதுதான் - முக்கிய வீரருக்கு கல்தா!
SIR Chennai Spl. Camp: சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
Imran Khan in Trouble: பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
Ather Budget Scooter EL01: ஓலா-க்கு போட்டியாக மலிவு விலை இ-ஸ்கூட்டரை களமிறக்கும் ஏதர்; எப்போது அறிமுகம்.? அம்சங்கள் என்ன.?
ஓலா-க்கு போட்டியாக மலிவு விலை இ-ஸ்கூட்டரை களமிறக்கும் ஏதர்; எப்போது அறிமுகம்.? அம்சங்கள் என்ன.?
Embed widget