மேலும் அறிய

`குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது இரக்கம் கொண்டது!’ - உள்துறை அமைச்சகம் அறிக்கை!

குடியுரிமை திருத்தச் சட்டம் இரக்கம் கொண்டதாகவும், மேம்பட்டதாகவும் இருப்பதாகவும், எந்த ஒரு இந்தியக் குடிமகனும் இதனால் குடியுரிமையை இழக்க மாட்டார்கள் எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. 

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் விதிமுறைகளுக்கான அறிவிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளியிடப்படாத நிலையில், மத்திய அரசு இந்தச் சட்டத்தை இரக்கம் கொண்ட ஒன்றாகவும், மேம்பட்டதாகவும் இருப்பதாகவும், எந்த ஒரு இந்தியக் குடிமகனும் இதனால் குடியுரிமையை இழக்க மாட்டார்கள் எனவும் கூறியுள்ளது. 

மத்திய உள்துறை அமைச்சகத்தின் தற்போதைய ஆண்டு அறிக்கையின் படி, `குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது குறிப்பிட்ட சில நாடுகளில் இருந்து வரும் குறிப்பிட்ட சில சமூகங்களைச் சேர்ந்த மக்களுக்குக் குறிப்பிட்ட நாள் குறிப்போடு சற்றே ஆசுவாசத்தை வழங்குவதற்காக துல்லியமாக உருவாக்கப்பட்டிருக்கும் சட்டம். இது இரக்கம் கொண்டதும், மேம்பட்டதும் ஆகும்’ எனக் கூறப்பட்டுள்ளது. 

மேலும், `குடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியக் குடிமக்களுக்குப் பொருந்தாது. மேலும், இது எந்த இந்தியக் குடிமகனின் உரிமைகளையும் நீக்கிவிடாது. குடியுரிமை சட்டம் 1955-ன் படி தற்போது உள்ள விதிமுறைகள் எதுவும் மாற்றப்படாது. எந்த நாட்டையும், எந்த மதத்தைச் சேர்ந்த எவரும் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றி, பதிவு செய்வதன் மூலமாக இந்தியக் குடியுரிமை பெற முடியும்’ எனவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

`குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது இரக்கம் கொண்டது!’ - உள்துறை அமைச்சகம் அறிக்கை!

கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் 12 அன்று, குடியுரிமை திருத்தச் சட்டம் அறிவிக்கப்பட்டு, ஆப்கானிஸ்தான், வங்காள தேசம், பாகிஸ்தான் முதலான நாடுகளில் இருந்து குடியேற வரும் இந்து, சீக்கிய, பௌத்த, சமண, பார்சி, கிறித்துவ மதங்களைச் சேர்ந்தோருக்குக் குடியுரிமை வழங்கும் சட்டமாக கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி 10 முதல் அமலுக்கு வந்தது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் வெடித்தன. இந்தியாவில் வாழும் முஸ்லிம்களின் குடியுரிமையை இந்தச் சட்டம் பறிக்கக்கூடும் என அச்சம் எழுந்ததால் இந்தப் போராட்டங்கள் நடைபெற்றன. 

இந்தச் சட்டத்தின் விதிமுறைகள் பற்றிய அறிவிப்பு இன்னும் வெளிவராத நிலையில், இந்தச் சட்டம் முழுமையாக அமலுக்கு வராமல் உள்ளது. 

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆண்டு அறிக்கையின் மூலம், வட கிழக்குப் பகுதிகளில் அரசியலமைப்புச் சட்டத்தின் ஆறாவது அட்டவணையின் படி பாதுகாக்கப்படும் பகுதிகளில் இந்தச் சட்டம் அமல்படுத்தப்படாது எனவும், இந்தப் பகுதிகளில் வாழும் பழங்குடி மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் எனவும் சுட்டிக் காட்டியுள்ளது. 

`குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது இரக்கம் கொண்டது!’ - உள்துறை அமைச்சகம் அறிக்கை!

இவை மட்டுமின்றி, இந்த அறிக்கையில் கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்றின் போது, இந்தியாவுக்கு சுமார் 32.7 லட்சம் வெளிநாட்டுப் பயணிகள் வந்துள்ளதாகக் கூறியுள்ளது. இவர்களுள் அதிக பயணிகள் அமெரிக்காவில் இருந்து வந்துள்ளனர். 61 ஆயிரம் பயணிகள் அமெரிக்காவில் இருந்து வந்துள்ள நிலையில், அடுத்தடுத்த இடங்களில் 37 ஆயிரம் பயணிகளோடு வங்காள தேசம், 33 ஆயிரம் பயணிகளோடு பிரிட்டன், 13 ஆயிரம் பயணிகளோடு கனடா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. 

தலைப்பு செய்திகள்

Top 10 News Headlines: ராகுலை சாடிய திமுக.. தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. 11 மணி வரை இன்று!
Top 10 News Headlines: ராகுலை சாடிய திமுக.. தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. 11 மணி வரை இன்று!
சபரிமலை தங்க முறைகேடு வழக்கு: எஸ்ஐடி அறிக்கைக்கு பிறகே அடுத்த முடிவு! கேரள அரசு.
சபரிமலை தங்க முறைகேடு வழக்கு: எஸ்ஐடி அறிக்கைக்கு பிறகே அடுத்த முடிவு! கேரள அரசு.
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
Top 10 Headlines: அண்ணாமலையின் ராஜினாமா ஏற்பு.. வெள்ளை அறிக்கை வெளியிட்ட கேரளா.. 11 மணி வரை இன்று!
Top 10 Headlines: அண்ணாமலையின் ராஜினாமா ஏற்பு.. வெள்ளை அறிக்கை வெளியிட்ட கேரளா.. 11 மணி வரை இன்று!

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: ‘அவங்க அட்டாக் பண்ணா, நாங்க சும்மா இருப்போமா.?‘ - வளைகுடா அமெரிக்க தளங்களை பதம் பார்த்த ஈரான்
‘அவங்க அட்டாக் பண்ணா, நாங்க சும்மா இருப்போமா.?‘ - வளைகுடா அமெரிக்க தளங்களை பதம் பார்த்த ஈரான்
Putin Backs India: “இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்தா எதிர்விளைவுகள ஏற்படுத்தும்“ - US-க்கு புதின் மறைமுக எச்சரிக்கை
“இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்தா எதிர்விளைவுகள ஏற்படுத்தும்“ - US-க்கு புதின் மறைமுக எச்சரிக்கை
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
TVK: உள்ளாட்சி தேர்தல்தான் அடுத்த டார்கெட்! அதிமுக மாஜிக்களை வைத்து அஸ்திவாரம் போடும் தவெக!
TVK: உள்ளாட்சி தேர்தல்தான் அடுத்த டார்கெட்! அதிமுக மாஜிக்களை வைத்து அஸ்திவாரம் போடும் தவெக!
Affordable 7-Seater Cars: உங்க குடும்பம் பெருசா.? 7 சீட்டர் கார் வாங்கணுமா.? ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் சிறந்த கார்கள் லிஸ்ட்
உங்க குடும்பம் பெருசா.? 7 சீட்டர் கார் வாங்கணுமா.? ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் சிறந்த கார்கள் லிஸ்ட்
டாடா EV காருக்கு ரூ.1.45 லட்சம் மெகா தள்ளுபடி: செம சேஃப்டி, ரேஞ்ச், இறுதி விலை- இதோ விவரம்!
டாடா EV காருக்கு ரூ.1.45 லட்சம் மெகா தள்ளுபடி: செம சேஃப்டி, ரேஞ்ச், இறுதி விலை- இதோ விவரம்!
India Team Squad: இந்திய டி20 புது கேப்டன் ஸ்ரேயாஸ்! அறிமுக வீரராக களமிறங்கும் சுட்டிப்பையன் சூர்யவன்ஷி - டீமே மாஸா இருக்கே
India Team Squad: இந்திய டி20 புது கேப்டன் ஸ்ரேயாஸ்! அறிமுக வீரராக களமிறங்கும் சுட்டிப்பையன் சூர்யவன்ஷி - டீமே மாஸா இருக்கே
Embed widget