மேலும் அறிய

Manju Warrier : மஞ்சு வாரியருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய மத்திய அரசு.. காரணம் இதுதான்..

சரியான நேரத்தில் வருமான வரி மற்றும் ஜி.எஸ்.டி வரிகளை செலுத்தியதிற்காக மத்திய வருமான வரித்துறையிடம் பாராட்டுச் சான்றிதழைப் பெற்றுள்ளனர் நடிகை மஞ்சு வாரியர் , நடிகர் மோகன்லால்.

சரியான நேரத்தில் வருமான வரி மற்றும் ஜி.எஸ்.டி  வரிகளை செலுத்தியதிற்காக மத்திய வருமான வரித்துறையிடம் பாராட்டுச் சான்றிதழை நடிகை மஞ்சு வாரியர் , நடிகர் மோகன்லால் பெற்றுள்ளனர் .  

மலையாள சினிமாவின் முக்கிய நடிகையாக தனது கம்-பேக்க்குப் பிறகு இருப்பவர் நடிகை மஞ்சு வாரியர்.  மலையாளத்தில் ஹவ் வோல்ட் ஆர் யூ படத்தின் மூலம் தனது கம்பேக் மூலம் தனது சினிமா ராஜ்ஜியத்தினை யாருமே நினைத்துப் பார்க்காத வகையில் நிறுவியவர்.  அண்மையில் தமிழில் அசுரன் திரைப்பட்டத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்திருப்பார். இவருக்கு சமீபத்தில் மத்திய  வருமான வரித்துறை ஜி.எஸ்.டி மற்றும் செலுத்த வேண்டிய வரிக் கணக்குகளை சரியாக செலுத்தியுள்ளதாக பாராட்டுச் சான்றிதழை வழங்கியுள்ளது. 

மத்திய நிதி அமைச்சகம் சரியான நேரத்தில், செலுத்த வேண்டிய  தங்களது வரிகளை சரியாக செலுத்துபவர்களைப் பாராட்டி  சான்றிதழ்களை வழங்குவது வழக்கம். அவ்வகையில் பிரபலங்களும் அவ்வப்போது இச்சான்றிதழ்களைப் பெறுவதும் வழக்கம். இந்த முறை மலையாள நடிகை மஞ்சு வாரியர் மற்றும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஆகியோர் சரியான நேரத்தில் உரிய வரியினை செலுத்தியுள்ளனர். தங்களது கடமையினைச் சரியாக செய்துள்ள இவர்களைப் பாராட்டி மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ், செயல்படும் மத்திய வருமான வரித்துறை சான்றிதழ்களை வழங்கியுள்ளது. 

மோகன்லால் & சச்சினுக்கும் பாராட்டு

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், தனக்கு வழங்கப்பட்ட பாராட்டுச் சான்றிதாழை புகைப்படமெடுத்து தனது அதிகாரப் பூர்வ ச்மூக வலைதளமான டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அந்த டிவிட்டர் பதிவோடு, ”நான் சரியான நேரத்தில் வரி கட்டியதற்காக தனக்கு  சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. என்னுடைய கடமைச் செய்ததிற்குப் பாராட்டியுள்ள நிதி அமைச்சகத்திற்கு நன்றி. இந்தியனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். ஜெய் ஹிந்த்”  இவ்வாறு அந்த பதிவில் நடிகர் மோகன்லால்  தெரிவித்துள்ளார்.கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் தெண்டுல்கருக்கும், சரியான நேரத்தில் வரி செலுத்தியதிற்காக மத்திய நிதி அமைச்சகம் பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை  அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
Embed widget