மேலும் அறிய

Manipur Violence: அடங்காத மணிப்பூர் கலவரம்- மெய்தி சமூகத்தைச் சேர்ந்த 9 அமைப்புகளுக்கு தடை விதித்த மத்திய அரசு

Manipur Violence: மணிப்பூரில் கலவரத்தை தூண்டும் விதமாக செயல்படுவதாக கூறி மெய்தி சமூகத்தைச் சேர்ந்த, 9 அமைப்புகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

Manipur Violence: மணிப்பூரில் கலவரத்தை தூண்டி விடுவதாக 9 அமைப்புகளுக்கு, தலா 5 ஆண்டுகள் வீதம் மத்திய அரசு தடை விதித்துள்ளது.

மணிப்பூரில் 9 அமைப்புகளுக்கு தடை:

மெய்தி சமூகத்திற்கு ஆதரவாக செயல்படும் 9 தீவிரவாத அமைப்புகளுக்கு தடை விதித்து, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இவை பெரும்பாலும் மணிப்பூரை மையமாகும் செயல்படும் அமைப்புகளாகும். அதன்படி,  "மக்கள் விடுதலை இராணுவம் (PLA), புரட்சிகர மக்கள் முன்னணி (RPF),  ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி (UNLF)  மற்றும் அதன் ஆயுதப் பிரிவான மணிப்பூர் மக்கள் ராணுவம் (MPA)., சோசலிச ஒற்றுமைக்கான கூட்டணி (KYKL) காங்கிலீபாக் மக்கள் புரட்சிக் கட்சி (PREPAK) மற்றும் அதன் ஆயுதப் பிரிவு செம்படை, காங்கிலிபக் கம்யூனிஸ்ட் கட்சி (KCP) மற்றும் அதன் ஆயுதப் பிரிவு (சிவப்பு இராணுவம் என்று அழைக்கப்படுகிறது), காங்லீ யாயோல் கன்பா லுப் (KYKL), ஒருங்கிணைப்புக் குழு (CorCom) ) மற்றும் சோசலிச ஒற்றுமைக்கான கூட்டணி காங்லீபக் (ASUK)" ஆகிய 9 அமைப்புகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.  சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ்  இந்த அமைப்புகள் சட்டவிரோத சங்கங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஆயுதப் போராட்டத்தின் மூலம் சுதந்திர தேசத்தை நிறுவுதல் மற்றும் இந்தியாவிலிருந்து பிரிவினையைத் தூண்டுதல் போன்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்த அமைப்புகள் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சகம் சொல்வது என்ன?

உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ”மெய்தி தீவிரவாத அமைப்புகளை உடனடியாகக் கட்டுப்படுத்தவில்லை என்றால், பிரிவினைவாத, நாசகார, பயங்கரவாத மற்றும் வன்முறைச் செயல்களை அதிகரிக்கத் தங்களுக்கான ஆதரவாளர்களை திரட்டுவதற்கான பணியை மேற்கொள்வார்கள்.  சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, மெய்தி தீவிரவாத அமைப்புகளை 'சட்டவிரோத சங்கங்கள்' என்று அறிவிக்க வேண்டியது அவசியம்.  அதற்கேற்ப, துணைப்பிரிவு (3) க்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்துதல் அவசியம்.  மேற்படி சட்டத்தின் 3வது பிரிவின்படி, இந்தச் சட்டத்தின் 4வது பிரிவின் கீழ் செய்யப்படும் எந்த உத்தரவுக்கும் உட்பட்டு, குறிப்பிட்ட 9 அமைப்புகளுக்கும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்படுகிறது.

அவர்கள் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு விரோதமான சக்திகளுடன் கூட்டு சேர்ந்து தேசவிரோத நடவடிக்கைகளை பரப்புரை செய்வார்கள், பொதுமக்களைக் கொன்று, காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படை வீரர்களைக் குறிவைத்து, சர்வதேச எல்லைக்கு அப்பால் சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வாங்கக் கூடும். தங்களது சட்டவிரோத செயல்களுக்காக பொதுமக்களை மிரட்டி பணம் வசூலிப்பார்கள்” எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Crime: வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே ஜாக்கிரதை! பட்டப்பகலில் மிளகாய்ப்பொடி தூவி நகை பறிப்பு!
Crime: வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே ஜாக்கிரதை! பட்டப்பகலில் மிளகாய்ப்பொடி தூவி நகை பறிப்பு!
Vikaravandi by election 2024: அதிமுக இடைத்தேர்தல் புறக்கணிப்பு... களத்தில் தீவிரம் காட்டும் பாமக...
Vikaravandi by election 2024: அதிமுக இடைத்தேர்தல் புறக்கணிப்பு... களத்தில் தீவிரம் காட்டும் பாமக...
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
TN 12th Revaluation 2024: நாளை மறுநாள் வெளியாகும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மறுகூட்டல்‌, மறுமதிப்பீடு முடிவுகள்‌; காண்பது எப்படி?
TN 12th Revaluation 2024: நாளை மறுநாள் வெளியாகும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மறுகூட்டல்‌, மறுமதிப்பீடு முடிவுகள்‌; காண்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடிVikravandi PMK Candidate | விக்கிரவாண்டியில் அன்புமணி போட்டி!பரபரக்கும் தேர்தல் களம்Modi Meloni | மீண்டும் #MELODI! மெலோனியுடன் மோடி! வைரல் PHOTOS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crime: வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே ஜாக்கிரதை! பட்டப்பகலில் மிளகாய்ப்பொடி தூவி நகை பறிப்பு!
Crime: வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே ஜாக்கிரதை! பட்டப்பகலில் மிளகாய்ப்பொடி தூவி நகை பறிப்பு!
Vikaravandi by election 2024: அதிமுக இடைத்தேர்தல் புறக்கணிப்பு... களத்தில் தீவிரம் காட்டும் பாமக...
Vikaravandi by election 2024: அதிமுக இடைத்தேர்தல் புறக்கணிப்பு... களத்தில் தீவிரம் காட்டும் பாமக...
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
TN 12th Revaluation 2024: நாளை மறுநாள் வெளியாகும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மறுகூட்டல்‌, மறுமதிப்பீடு முடிவுகள்‌; காண்பது எப்படி?
TN 12th Revaluation 2024: நாளை மறுநாள் வெளியாகும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மறுகூட்டல்‌, மறுமதிப்பீடு முடிவுகள்‌; காண்பது எப்படி?
Breaking News LIVE: ஜூன் 22 வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
Breaking News LIVE: ஜூன் 22 வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
CM Stalin:
"ஏழைகளுக்கு எதிரான நீட் தேர்வை நிறுத்துக” - மத்திய அரசை வலியுறுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
RahulGandhi On EVM : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழிக்க சொன்ன மஸ்க்.. ஆதரவுக்கரம் நீட்டிய ராகுல் காந்தி
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழிக்க சொன்ன மஸ்க்.. ஆதரவுக்கரம் நீட்டிய ராகுல் காந்தி
New Fee Refund Policy: கல்லூரிகள் இந்த மாணவர்களுக்கெல்லாம் முழு கட்டணத்தையும் திருப்பித்தர வேண்டும்: யுஜிசி அதிரடி!
New Fee Refund Policy: கல்லூரிகள் இந்த மாணவர்களுக்கெல்லாம் முழு கட்டணத்தையும் திருப்பித்தர வேண்டும்: யுஜிசி அதிரடி!
Embed widget