மேலும் அறிய

மங்களூரு வெடிப்பு சம்பவம்.. ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு.. வழக்கில் புதிய திருப்புமுனை

காவல்துறை இன்று பகிர்ந்துள்ள தகவல் வழக்கில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் மங்களூரில் சனிக்கிழமை நிகழ்ந்த ஆட்டோரிக்சா வெடிப்பு சம்பவம் நாட்டையே உலுக்கி வருகிறது. இந்த சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ள ஷரீக், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பிற்காக செயல்பட்டுள்ளார் என கர்நாடக காவல்துறை இன்று பகீர் தகவலை பகிர்ந்துள்ளது.

காவல்துறை இன்று பகிர்ந்துள்ள தகவல் வழக்கில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. டார்க் வெப் மூலம் அவரை பயங்கரவாதிகள் கையாண்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விரிவாக பேசியுள்ள கர்நாடக காவல்துறை தலைவர் அலோக் குமார், "ஷரீக், பலரால் இயக்கப்பட்டுள்ளார். குறிப்பாக, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கீழ் இயங்கி வந்த அல் ஹிந்த் பயங்கரவாத அமைப்பிற்காகவும் அவர் செயல்பட்டுள்ளார்.

அவருக்கு பயங்கி அளித்தவர் அராபத் அலி. இவர், இரண்டு வழக்குகளில் தேடப்பட்டு வருகிறார். அல் ஹிந்த் வழக்கில் முக்கிய குற்றம்சாட்டப்பட்டவரான முசாவிர் ஹுசைன் என்பவருடனும் ஷரீக் தொடர்பில் இருந்துள்ளார்.

ஷரீக்கை முக்கியமாக இயக்கி இருப்பவர் அப்துல் மதின் தாஹா. இன்னும், 2, 3 பேர் அவருடன் இணைந்து பணியாற்றி உள்ளார். ஆனால், அவர்கள் யார் என அடையாளம் காணப்படவில்லை.

கர்நாடகாவில் அவர் வசித்து வந்த மங்களூரு உள்ளிட்ட ஐந்து இடங்களில் காவல்துறை சோதனை செய்து வருகிறது. மங்களூருவில் அவர் வசித்து வந்த வீட்டில் வெடுகுண்டை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. 

விசாரணை செய்வதற்காக நாங்கள் ஐந்து வெவ்வேறு குழுக்களை உருவாக்கியுள்ளோம். அவர்கள், தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி நகரில் 4 இடங்களிலும், மங்களூருவில் ஒரு இடத்திலும் இன்று காலை சோதனை நடத்தப்பட்டது.

நேற்று இரண்டு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. எனவே, ஏழு இடங்களில் சோதனை செய்து சில மின்னணு சாதனங்களை பறிமுதல் செய்துள்ளோம்" என்றார்.

கோவை குண்டுவெடிப்புக்கும் மங்களூரு ஆட்டோ வெடிப்புக்கும் என்ன தொடர்பு?

கோவையில் பொய்யான பெயரில் ஷரீக் சிம்கார்டை வாங்கி இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்தது அவரின் மொபைல் சிக்னல் வழியாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அவரது கூட்டாளிகளைக் கண்டறிய ஹரீக்கின் மொபைல் ஆராயப்பட்டு வருகிறது. 

வெடித்து சிதறல்:

முன்னதாக, இந்த வெடிப்பு சம்பவம் குறித்து தகவல் வெளியிட்ட கர்நாடக டிஜிபி, "இது விபத்து இல்லை. பெரும் சேதாரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் நடத்தப்பட்ட தீவிரவாதச் செயல். இந்த சம்பவம் குறித்து கர்நாடக காவல் துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது" என பதிவிட்டிருந்தார். வெடிந்த ஆட்டோரிக்ஷாவில் பேட்டரிகளுடன் எரிந்த பிரஷர் குக்கர் இருந்துள்ளது. அது தற்போது மீட்கப்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget