மேலும் அறிய

Viral video: ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட இளைஞர் உயிரிழப்பு.. நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ

உத்தரப் பிரதேச மாநிலம், ஷாஜகான்பூரில் திகார் ரயில் நிலையம் அருகே இளைஞர் ஒருவர் அடிபட்டு உயிரிழந்து கிடந்தார். அந்த இளைஞரை ஓடும் ரயிலில் இருந்து சக பயணியே தள்ளிவிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

உத்தரப் பிரதேச மாநிலம், ஷாஜகான்பூரில் திகார் ரயில் நிலையம் அருகே இளைஞர் ஒருவர் அடிபட்டு உயிரிழந்து கிடந்தார். அந்த இளைஞரை ஓடும் ரயிலில் இருந்து சக பயணியே தள்ளிவிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

அயோத்தியா-டெல்லி எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து இளைஞர் ஒருவர் சக பயணியால் கீழே தள்ளிவிடப்பட்டு உயிரிழந்தார். இந்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில்  வைரலாகி வருகிறது.

அயோத்தியாவில் இருந்து டெல்லி சென்றுகொண்டிந்த ரயிலில் அன்ரிசர்வ்டு பெட்டியில் சென்று கொண்டிருந்த இளைஞர் ஒருவரை சக பயணிகள் இருவர் கடுமையாக தாக்குகின்றனர். பின்னர், அதில் ஒரு பயணி மட்டும் அவரை வாயில் பகுதி அருகே தூக்கி வீசுகிறார். அந்த இளைஞர் செல்போனை திருடியதால் சக பயணிகள் இருவர் ஆத்திரமடைந்து அவரை தாக்கியதாக தெரிகிறது. கோபத்தின் உச்சகட்டத்தில் அந்த இளைஞரை தூக்கி வீசியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. தண்டவாளத்திற்கு அருகே இருந்த இரும்புக் கம்பத்தில் மோதி அவர் உயிரிழந்திருக்கிறார்.

இதுதொடர்பாக காவல் துறையினர் நரேந்திர குமார் என்பவரை கைது செய்து கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த வீடியோ நெஞ்சை பதபதைக்க வைக்கிறது.

இதனிடையே,

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னா மாவட்டத்தில் 17 வயது சிறுமியை அவரது தந்தையும், மாமாவும் அடித்தே கொலை செய்துள்ளனர். பின்பு ஆதாரங்களை அழிக்கும் முயற்சியாக அந்த சிறுமியின் உடலை எரித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

17 வயது சிறுமி

மகாராஷ்டிரா ஜல்னா பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, அதே பகுதியில் இருக்கும் அவரது உறவினர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து தனது பெற்றோருக்கு தெரிவித்தபோது அவர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்தனர். இதனால் அந்த சிறுமியின் குடும்பத்தினர் வேறொரு நபருடன் திருமணம் செய்ய முடிவு செய்தனர். 

இதனை அறிந்த அந்த சிறுமி வீட்டை விட்டு வெளியே செல்ல திட்டமிட்டார். அதன்படி கடந்த வாரம் தனது காதலனுடன் அந்த சிறுமி வீட்டைவிட்டு வெளியே சென்றார். சில நாட்கள் கழித்து அந்த சிறுமி இருக்கும் இடத்தை அவரது பெற்றோர்கள் கண்டுபிடித்தனர். பின்பு சிறுமியை பார்க்க அந்த இடத்திற்கு அவரது பெற்றோர் சென்றனர். காதலித்த நபருடனே திருமணம் செய்து வைப்பதாக சிறுமியிடம் அவரது தந்தை உறுதியளித்ததை  அடுத்து, சிறுமி மற்றும் அவரது காதலன் வீட்டிற்கு திரும்பினர். அனைவரின் முன்னிலையிலும் சத்தியம் செய்த தந்தை, ஜல்னா மாவட்டத்தில் இருக்கும் ஒரு மண்டபத்தில் திருமணம் ஏற்பாடு செய்தார். அந்த திருமணத்தில் இருவீட்டாரின் குடும்பத்தினரும் பங்கேற்றனர்.

வரதட்சணையால் மோதல்

இதனை தொடர்ந்து, இருவீட்டாருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.  வரதட்சணை கொடுப்பது தொடர்பாக இருவீட்டாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் நடைபெறவிருந்த திருமணம் நின்றுவிட்டது. இதனால் தனது குடும்பத்திற்கு அவமானம் என்று நினைத்து மண்டபத்தில் இருந்து சிறுமியை அழைத்து சென்றுள்ளனர்.

கொடூர கொலை 

திருமணம் கடைசி நேரத்தில் நின்றதால் தனது குடும்பத்திற்கு அவமானம் என்று நினைத்து அந்த சிறுமியை அவரது தந்தை மற்றும்மாமா கடுமையாக அடித்துள்ளனர். இதனை அடுத்து, கடும் கோபத்தில் இருந்து தந்தை சிறுமியின் கழுத்தை வீட்டின் பக்கத்தில் இருக்கும் மரத்தில் தூக்குப் போட வைத்துள்ளார்.

இந்த சம்பவம் யாருக்கும் தெரியாமல் இருப்பதற்காக சிறுமியின் உடலை ஏரித்துள்ளனர். இதற்கிடையே தனது காதலி மாயமானதாக நினைத்து அவரது காதலன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீசாரின் தீவிர விசாரணைக்கு பிறகு உயிரிழந்த சிறுமியின் தந்தை மற்றும் மாமா கைது செய்யப்பட்டனர். 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
Seeman Vs EPS: “ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
“ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
Embed widget