![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Man Chops Off Finger: மோடி அரசுக்கு ஓட்டு போட்டுட்டேன், விரலை வெட்டி உள்துறை அமைச்சருக்கு அனுப்பிய நபர்.. என்ன பிரச்னை?
சகோதரரின் தற்கொலை வழக்கை காவல்துறை விரைந்து விசாரிக்கவில்லை என, புனேவை சேர்ந்த நபர் விரலை வெட்டி உள்துறை அமைச்சருக்கு அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![Man Chops Off Finger: மோடி அரசுக்கு ஓட்டு போட்டுட்டேன், விரலை வெட்டி உள்துறை அமைச்சருக்கு அனுப்பிய நபர்.. என்ன பிரச்னை? man chops off finger on camera to protest against police inaction in brothers suicide case, four arrested Man Chops Off Finger: மோடி அரசுக்கு ஓட்டு போட்டுட்டேன், விரலை வெட்டி உள்துறை அமைச்சருக்கு அனுப்பிய நபர்.. என்ன பிரச்னை?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/19/610b49d7c47088725547d85d1258dea71692431811723732_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சகோதரரின் தற்கொலை வழக்கை காவல்துறை விரைந்து விசாரிக்கவில்லை என, புனேவை சேர்ந்த நபர் விரலை வெட்டி உள்துறை அமைச்சருக்கு அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை:
மராட்டிய மாநிலம் மும்பையின் உல்ஹாஸ்நகரில் நந்தகுமார் நானாவரே என்பவர் முகாம் எண்.4ல் உள்ள அஷாலேபாடா பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் நந்தகுமார் மற்றும் அவரது மனைவி ஊர்மிலா ஆகியோர் கடந்த 1ம் தேதி தற்கொலை செய்து கொண்டனர். அதற்கு முன்பு அவர்கள் தங்களது மொபைல் போனில் வீடியோ ஒன்றை பதிவு செய்து இருந்தார். அதில், சதாரா மாவட்டம் பால்தான் தாலுகாவைச் சேர்ந்த சங்ராம் நிகால்ஜே, ரஞ்சித்சிங் நாயக் நிம்பல்கர், வழக்கறிஞர் தியானேஷ்வர் தேஷ்முக், நிதின் தேஷ்முக் உள்ளிட்டோர் தங்களுக்கு தொல்லை கொடுத்ததாகவும், அதனால் தான் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்வதாகவும் குறிப்பிட்டு இருந்தனர். இதுதொடர்பாக 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் யாருமே கைது செய்யப்படாமல் இருந்தனர்.
விசாரிக்க கோரிக்கை:
இதையடுத்து, இந்த வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்க கோரி நந்தகுமாரின் சகோதரர் தனஞ்சய் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கோரிக்கை வைத்து வந்தார்0. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. உரிய ஆதாரங்கள் இருந்தும் காவல்துறையினரும் விசாரணையை முன்னெடுக்கவில்லை, குற்றவாளிகளை கைது செய்யவில்லை என குற்றம்சாட்டி வந்தார்.
விரலை பார்சல் செய்து அனுப்பினார்:
இந்நிலையில், காவல்துறையினரின் மெத்தனபோக்கால் ஆத்திரமடைந்த நந்தகுமாரின் சகோதரர் தனஞ்சய், தனது ஒரு விரலை வெட்டி அதை வீடியோ எடுத்து மாநில உள்துறை அமைச்சருக்கு அனுப்பி உள்ளார். இதுதொடர்பான வீடியோ ஒன்றில், தனது விரலை கையில் இருந்து துண்டாக்கிக் கொண்டதோடு, பிரதமர் மோடியின் அரசுக்கு வாக்களித்த விரலை வெட்டி மாநில உள்துறை அமைச்சர் தேவேந்திர பட்னாவிசுக்கு பரிசாக அனுப்புவதாக குறிப்பிட்டுள்ளார். அதோடு, இந்த விவகாரத்தில் மகாராஷ்டிர மாநில அமைச்சர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதால் விசாரணை மந்தமாக நடப்பதாக குற்றம்சாட்டியதோடு, எனது அண்ணன் குடும்பத்தினரின் மரணத்திற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வாரந்தோறும் தனது உடலின் ஒவ்வொரு பாகத்தையும் வெட்டி அனுப்பி வைப்பதாகவும் வீடியோவில் கூறி உள்ளார்.
4 பேர் கைது:
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் குவிந்தன. இதனிடையே, மீட்கப்பட்ட தனஞ்செய் புனேயில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே, தனஞ்செயினின் சகோதரர் மற்றும் அவரது மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக, வழக்கில் தொடர்புடைய 4 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)