மேலும் அறிய

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு; மஹுவா மொய்த்ரா விவகாரத்தில் மெளனம் கலைத்த மம்தா பானர்ஜி!

இந்த விவகாரம் சர்ச்சையாக வெடித்ததில் இருந்தே திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி, அமைதி காத்து வந்தார். இந்த நிலையில், முதல்முறையாக இதுகுறித்து பேசியுள்ளார்.

பாஜகவுக்கு எதிராகவும் அதானி குழுமம் தொடர்பாகவும் நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்புவதற்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு தேசிய அளவில் தொடர் பரபரப்பை கிளப்பி வருகிறது. மொய்த்ரா, தன்னிடம் லஞ்சம் பெற்று கொண்டு நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பியதாக மக்களவை நெறிமுறைகள் குழுவுக்கு தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனி கடிதம் எழுதினார்.

மோடிக்கு எதிராக கேள்விகளை எழுப்ப லஞ்சம் பெற்றாரா மொய்த்ரா?

இந்த விவகாரத்தில் மொய்த்ராவுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் என பாஜக எம்பி நிஷிகாந்த் துபே, மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதினார். இது தொடர்பான ஆதாரங்களை நிஷிகாந்த் துபேவிடம் அளித்த மொய்த்ராவின் முன்னாள் காதலரும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான ஜெய் ஆனந்த் தேஹாத்ராய், மொய்த்ராவுக்கு எதிராக சிபிஐயிடம் புகார் அளித்தார். 

இரு தரப்பையும் அழைத்து, மக்களவை நெறிமுறைகள் குழு, விசாரணை நடத்தியது. இறுதியில், மக்களவையில் இருந்து மொய்த்ராவை சஸ்பெண்ட் செய்ய நெறிமுறைகள் குழு பரிந்துரைத்தது. மொய்த்ரா தரப்பில் விளக்கம் அளிக்க போதுமான நேரம் ஒதுக்கப்படவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தின.

இந்த விவகாரம் சர்ச்சையாக வெடித்ததில் இருந்தே திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி, அமைதி காத்து வந்தார். இந்த நிலையில், முதல்முறையாக இதுகுறித்து பேசியுள்ளார்.

"மொய்த்ராவை வெளியேற்ற சதி திட்டம்"

கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மொய்த்ராவுக்கு ஆதரவாக பேசிய அவர், "மொய்த்ராவை மக்களவையில் இருந்து வெளியேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், இது 2024 பொதுத் தேர்தலுக்கு முன் அவருக்கு உதவும். தற்போது எதிர்க்கட்சி தலைவர்களை குறிவைக்கும் மத்திய விசாரணை அமைப்புகள் 2024 தேர்தலுக்கு பின் பாஜகவை குறிவைக்கும். மத்தியில் உள்ள அரசுக்கு இன்னும் மூன்று மாதம்தான் உள்ளது" என்றார்.

இந்த விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெரும்பாலான மூத்த தலைவர்களும் அமைதி காத்து வந்தனர். ஆனால், கடந்த நவம்பர் 9ஆம் தேதி, மொய்த்ராவுக்கு ஆதரவாக பேசிய கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி, "நெறிமுறைக் குழுவின் அறிக்கையை நான் படித்ததிலிருந்து, அவர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். 

ஆனால், மொய்த்ராவுக்கு எதிராக உங்களிடம் எதுவும் இல்லை என்றால் அது விசாரணைக்கு உட்பட்டது என்றால், ஏன் அவரை சஸ்பெண்ட் செய்ய  பரிந்துரைக்க வேண்டும்? மொய்த்ரா, தன் போர்களை தன்னந்தனியாக எதிர்த்துப் போராடும் அளவுக்குத் திறமையானவர் என்று நான் உணர்கிறேன். நான்கு வருடங்களாக என்னையும் (பா.ஜ.க.) பலிகடா ஆக்குகிறார்கள். அது அவர்களின் வழக்கமான நடைமுறை" என்றார்.                                                     

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
Sundar Pichai: ‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
Pakistan Vs India: 'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
Embed widget