மேலும் அறிய

Crime : அடிக்கடி சண்டை...பண பிரச்னை.. கட்டில் பாக்ஸில் காதலி உடலை மறைத்த கொடூரம்..

ஷ்ரத்தா கொலை வழக்கு பாணியில் நாட்டின் மற்ற பகுதிகளில் நடந்த சம்பவங்கள் சமூகத்தில் உள்ள பிரச்னைகளை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கொடூர குற்ற செயல்கள் அதிகரித்திருப்பது மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், டெல்லியில் அரங்கேறிய கொலை சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த பெண் ஷ்ரத்தாவை அவரது காதலன் ஆப்தாப் பூனாவாலாவே கொலை செய்து, அவரின் உடலை 35 பாகங்களாக வெட்டி காட்டில் எறிந்ததார். இதையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

இருவரும் அடிக்கடி சண்டை போட்டு கொண்டதாகவும், அவர்களுக்கிடையே பண பிரச்னை காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்தது.

ஒரே பாணியல் தொடரும் கொலைகள்:

ஷ்ரத்தா கொலை வழக்கு பாணியில் நாட்டின் மற்ற பகுதிகளில் நடந்த சம்பவங்கள் சமூகத்தில் உள்ள பிரச்னைகளை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. அந்த வதையில், மும்பை அருகே நடந்த லிவ்-இன் பார்ட்னர் கொலைக்கும் ஷ்ரத்தா கொலைக்கும் பல ஒற்றுமைகள் இருப்பது தெரிய வந்துள்ளது.

மும்பையில் 37 வயது பெண் மேகா என்பவர், தனது காதலன் ஹர்திக்குடன் லிவ் இன் ரிலேசன்ஷிப்பில் இருந்துள்ளார். மும்பை அருகே வீட்டை வாடகை எடுத்து தங்கியுள்ளனர். ஹர்திக் வேலையில்லாமல் இருந்துள்ளார்.

மேகா ஒரு செவிலியர். வீட்டுச் செலவுகளை பார்த்து வந்துள்ளார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதுவே, கொலையில் முடிந்தது.

அவரது உடலை வாடகை வீட்டில் உள்ள படுக்கையின் கீழே மறைத்து வைத்துள்ளார். மேகாவைக் கொன்ற பிறகு, ஹர்திக் சில வீட்டுப் பொருட்களை விற்றுவிட்டு பணத்துடன் தப்பினார். அவர் ரயிலில் தப்பிச் செல்வதாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் அவரது இருப்பிடத்தை கண்காணித்து, ரயில்வே போலீசார் அவரை மத்திய பிரதேச மாநிலம் நாக்டாவில் கைது செய்தனர்.

மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்த ஹர்திக்கும், மேகாவும் கடந்த 6 மாதங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்தனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வாடகை வீட்டில் குடியேறினர். இவர்களுக்கு அடிக்கடி தகராறு ஏற்படுவதாக அக்கம்பக்கத்தினரும் புகார் கூறினர்.

டெல்லி கொலை:

ஷ்ரத்தா, மும்பை கொலை வழக்கை போன்று, டெல்லியில் இளம்பெண் ஒருவரை அவருடன் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த காதலனே கேபிள் வயரை வைத்து கழுத்தை நெரித்து கொலை செய்ததும் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஷ்ரத்தா கொலை வழக்கைப் போன்று, 24 வயதான சாஹில் கெலாட், தனது காதலியைக் கொலை செய்து அதை மறைக்க முயன்றதாகக் கைது செய்யப்பட்டுள்ளார். காதலி நிக்கி யாதவை வாக்குவாதத்திற்குப் பிறகு கொலை செய்துள்ளார். மேலும், தன்னுடைய குடும்பத்தினருக்கு சொந்தமான உணவகத்தில் உள்ள குளிர்சாதன பெட்டியில் உடலை மறைத்து வைக்க முடிவு செய்திருக்கிறார்.

இதில், தற்போது வெளியான அதிர்ச்சி தகவலின்படி, கொலை நடந்த அதே நாளில் சாஹில் கெலாட், வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget