மேலும் அறிய

BJP Minister: அமைச்சரின் பதவியையே பறித்த படுகொலை - லஞ்சம், தட்டி கேட்ட ஊராட்சி மன்ற தலைவருக்கு நேர்ந்த கொடூரம்

BJP Minister: மகாராஷ்டிராவில் பாஜக அரசில் அங்கம் வகித்த அமைச்சர் தனஞ்ஜெய் முண்டா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

BJP Minister: அமைச்சர் தனஞ்ஜெய் முண்டேவை பதவியை ராஜினாமா செய்யுமாறு மகாராஷ்டிர முதல்வர் ஃபட்னாவிஸ் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

அமைச்சர் ராஜினாமா..

மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், தேசியவாத காங்கிரஸ் அமைச்சர் தனஞ்ஜெய் முண்டேவை ராஜினாமா செய்யுமாறு கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியானது. அதனடிப்படையில், தனஞ்ஜெய் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். உணவு மற்றும் சிவில் விநியோகத் துறைகளை அவர் கவனித்து வந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த டிசம்பர் மாதம் பீட் மாவட்டத்தில் ஒரு ஊராட்சி தலைவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக அவரது நெருங்கிய உதவியாளர் வால்மிக் கரட் கைது செய்யப்பட்டதை அடுத்து, தனஞ்ஜெய் முண்டே ராஜினாமா செய்துள்ளார். பீட் மாவட்டத்தில் உள்ள பார்லியைச் சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வான இவர், பீட்டின் பொறுப்பு அமைச்சராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடந்தது என்ன?

சந்தோஷ் தேஷ்முக் எனப்படும் ஊராட்சி தலைவரின் கொடூர கொலை வழக்கின் குற்றப்பத்திரிகையில் இருந்து புதிய படங்கள் வெளிவந்த ஒரு நாள் கழித்து, கொலையின் காட்டுமிராண்டித்தனத்தைக் காட்டும் வகையில், இந்த முடிவு எடுக்கப்பட்டது. முன்னதாக குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் முண்டேவின் பெயர் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர் இந்தக் கொடூரமான கொலையின் மூளையாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் காரட்டுடன் நெருங்கிய தொடர்புடையவர் என்பதால் அவருக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

கொலை விவரங்கள்:

பீட்டில் உள்ள மசாஜோக் கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவர் தேஷ்முக், கடந்த ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி கடத்தப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். மாவட்டத்தில் உள்ள ஒரு எரிசக்தி நிறுவனத்தை குறிவைத்து மிரட்டி பணம் பறிக்கும் முயற்சிகளைத் தடுக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக இது நடந்ததாகக் கூறப்படுகிறது.

பிப்ரவரி 27 ஆம் தேதி, தேஷ்முக்கின் கொலை மற்றும் தொடர்புடைய இரண்டு வழக்குகள் தொடர்பாக பி்ட் மாவட்ட நீதிமன்றத்தில் 1,200 பக்கங்களுக்கு மேல் விரிவான குற்றப்பத்திரிகையை மாநில குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) சமர்ப்பித்தது.

பீட்டில் உள்ள கெஜ் காவல் நிலையம், ஊராட்சி மன்ற தலைவர் கொலை, அவாடா நிறுவனத்திடமிருந்து மிரட்டி பணம் பறிக்க முயற்சித்தல் மற்றும் நிறுவனத்தின் பாதுகாவலர் மீதான தாக்குதல் ஆகிய மூன்று தனித்தனி வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மீது அதிகாரிகள் கடுமையான மகாராஷ்டிரா ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கட்டுப்பாட்டுச் சட்டத்தை (MCOCA) அமல்படுத்தியுள்ளனர். இதுதொடர்பாக, இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Top 10 News Headlines: ராகுலை சாடிய திமுக.. தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. 11 மணி வரை இன்று!
Top 10 News Headlines: ராகுலை சாடிய திமுக.. தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. 11 மணி வரை இன்று!
சபரிமலை தங்க முறைகேடு வழக்கு: எஸ்ஐடி அறிக்கைக்கு பிறகே அடுத்த முடிவு! கேரள அரசு.
சபரிமலை தங்க முறைகேடு வழக்கு: எஸ்ஐடி அறிக்கைக்கு பிறகே அடுத்த முடிவு! கேரள அரசு.
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
Top 10 Headlines: அண்ணாமலையின் ராஜினாமா ஏற்பு.. வெள்ளை அறிக்கை வெளியிட்ட கேரளா.. 11 மணி வரை இன்று!
Top 10 Headlines: அண்ணாமலையின் ராஜினாமா ஏற்பு.. வெள்ளை அறிக்கை வெளியிட்ட கேரளா.. 11 மணி வரை இன்று!

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
TVK: உள்ளாட்சி தேர்தல்தான் அடுத்த டார்கெட்! அதிமுக மாஜிக்களை வைத்து அஸ்திவாரம் போடும் தவெக!
TVK: உள்ளாட்சி தேர்தல்தான் அடுத்த டார்கெட்! அதிமுக மாஜிக்களை வைத்து அஸ்திவாரம் போடும் தவெக!
MK Stalin: விரைவில் தவெக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி.. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு!
MK Stalin: விரைவில் தவெக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி.. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு!
Rahul Gandhi: விஜயுடன் கூட்டணி.. தன் தலையில் மண்ணை அள்ளிப்போட்ட ராகுல்.. திமுக கடும் விமர்சனம்!
Rahul Gandhi: விஜயுடன் கூட்டணி.. தன் தலையில் மண்ணை அள்ளிப்போட்ட ராகுல்.. திமுக கடும் விமர்சனம்!
'கூகுள் பண்ணி பாருடா தற்குறி' .. தவெகவினரை விளாசிய எம்.எல்.அப்துல்லா.. நடந்தது என்ன?
'கூகுள் பண்ணி பாருடா தற்குறி' .. தவெகவினரை விளாசிய எம்.எல்.அப்துல்லா.. நடந்தது என்ன?
Tasmac: பாட்டிலுக்கு பத்து ரூபா.. இன்னும் 10 நாட்களில் தீர்வு.. டாஸ்மாக் ஊழியர் சொன்ன தகவல்!
Tasmac: பாட்டிலுக்கு பத்து ரூபா.. இன்னும் 10 நாட்களில் தீர்வு.. டாஸ்மாக் ஊழியர் சொன்ன தகவல்!
Thirumavalavan: கூட்டணியில் திமுக இல்லாதது வருத்தம் தான்.. ஓபனாக சொன்ன திருமாவளவன்!
Thirumavalavan: கூட்டணியில் திமுக இல்லாதது வருத்தம் தான்.. ஓபனாக சொன்ன திருமாவளவன்!
Embed widget