![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Unnatural Sex : அதிர்ச்சி.. இயற்கைக்கு மீறிய பாலியல் உறவு தப்பில்ல.. நீதிமன்றம் தள்ளுபடி செய்த வழக்கு..!
இந்த வழக்கில் திருமண விஷயத்தில் தன் மீது நெகட்டிவ் ஆன எண்ணத்தை உருவாக்கவே இயற்கைக்கு மாறான பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் கணவர் தெரிவித்தார்.
![Unnatural Sex : அதிர்ச்சி.. இயற்கைக்கு மீறிய பாலியல் உறவு தப்பில்ல.. நீதிமன்றம் தள்ளுபடி செய்த வழக்கு..! Madhya Pradesh high Court Bench Scraps Woman's Unnatural Sex Accusation Against Husband Unnatural Sex : அதிர்ச்சி.. இயற்கைக்கு மீறிய பாலியல் உறவு தப்பில்ல.. நீதிமன்றம் தள்ளுபடி செய்த வழக்கு..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/09/59dbd461e8d8d094a6a75a7eb70a3a111717910702166572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மத்தியப் பிரதேசத்தில் இயற்கைக்கு மீறிய பாலியல் உறவு தப்பில்லை எனக் கூறி உயர்நீதிமன்றம் வழக்கு ஒன்றை தள்ளுபடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் மன்சூர் மாவட்டத்தில் 40 வயதுமிக்க நபர் மீது அவர் மனைவி காவல்துறையில் ஒன்றை தொடுத்திருந்தார். 31 வயதான அப்பெண் ரூ.20 லட்சம் வரதட்சணை கேட்டு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சித்ரவதை செய்ததாகவும் தெரிவித்திருந்தார், அதுமட்டுமல்லாமல் தன்னுடைய கணவர் இயற்கைக்கு மாறான வழியில் உடலுறவு கொண்டதால் தனக்கு தொற்றுநோய் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
புகாரின் அடிப்படையில் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில், இந்த வழக்கு மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றத்தின் இந்தூர் பெஞ்ச் வழக்கானது நடைபெற்று வந்தது. வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என கணவர் குடும்பத்தினர் பதில் மனு தாக்கல் செய்தனர். மேலும் இந்த வழக்கில் திருமண விஷயத்தில் தன் மீது நெகட்டிவ் ஆன எண்ணத்தை உருவாக்கவேஇயற்கைக்கு மாறான பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். திருமண வாழ்க்கையின் போது கணவன் மனைவியுடன் உடலுறவு கொள்வது குற்றமாகாது எனவும் கணவர் தன்னுடைய மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கானது நீதிபதி பிரேம் நாராயண் சிங் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, 15 வயதுக்கு மேற்பட்ட பெண்களுடன் கணவர் உடலுறவில் ஈடுபடுவது பாலியல் வன்கொடுமை ஆகாது எனவும், இதில் அப்பெண்ணின் சம்மதம் முக்கியமற்றது எனவும் திடுக்கிடும் கருத்துகளை தெரிவித்தார். எனவே முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டது போல ஐபிசி சட்டப்பிரிவு 377 (இயற்கைக்கு மாறான செயல்), பிரிவு 294 (துஷ்பிரயோகம்) மற்றும் பிரிவு 506 (அச்சுறுத்தல்) ஆகியவற்றின் கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ரத்து செய்வதாக குறிப்பிட்டார்.
அதேசமயம் பிரிவு 498-ஏ (ஒரு பெண்ணை அவரது கணவர் அல்லது அவரது உறவினரால் கொடுமைப்படுத்துதல்) ரத்து செய்ய மறுத்து அதனடிப்படையில் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். உயர்நீதிமன்ற நீதிபதியின் இந்த தீர்ப்பு அம்மாநிலத்தில் மிகப்பெரிய அளவில் பேசுபொருளாகவும் மாறி, பலரும் தங்களுடைய எதிர்ப்பை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)