மேலும் அறிய

LPG தட்டுப்பாடு: சிலிண்டர் முன்பதிவில் மாற்றம்? உண்மை என்ன? மத்திய அரசின் பரபரப்பு விளக்கம்!

வாடிக்கையாளர்களுக்கு 20 நாட்களுக்கு ஒரு முறை சிலிண்டர் முன்பதிவு செய்யலாம் என இருந்த இந்த விதிமுறை தற்போது 45 நாட்களாக நீட்டிக்கப்பட்டிருக்கிறது என்றும் தகவல்கள் கூறப்படுகிறது.

இந்தியாவில் தொடர்ந்து 4ஆவது வாரமாக LPG தட்டுப்பாடு நீடிக்கிறது. இந்தியா தனக்கு தேவையான LPG-யில் 60 சதவீதத்தை வளைகுடா நாடுகளில் இருந்து தான் கொள்முதல் செய்கிறது. வளைகுடா நாடுகளில் வாங்கப்படக்கூடிய LPG , கப்பல்கள் வழியாக இந்தியாவுக்கு கொண்டுவரப்படுகிறது.


LPG தட்டுப்பாடு: சிலிண்டர் முன்பதிவில் மாற்றம்? உண்மை என்ன? மத்திய அரசின் பரபரப்பு விளக்கம்!

போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு LPG கொண்டுவரப்படவில்லை. இது இந்தியாவில் கடுமையான LPG தட்டுப்பாட்டை ஏற்படுத்தி இருக்கிறது. முதல் கட்டமாக எண்ணெய் நிறுவனங்கள் வணிக சிலிண்டர் வினியோகத்தை முற்றிலுமாக நிறுத்தி வைத்தன, அதேபோல நிறுவனங்கள் , ஆலைகளுக்கு வழங்கி வந்த LPG வினியோகத்தையும் நிறுத்தி வைத்திருக்கின்றன. வீட்டு உபயோக பயன்பாட்டு சிலிண்டர் டெலிவரிக்கு தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது. எனவே தற்போதைக்கு கையிருப்பு இருக்கக்கூடிய LPG மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளிடமிருந்து கொண்டு வரப்படக்கூடிய LPG ஆகியவற்றை கொண்டு இண்டேன், ஹெச்பி, பாரத் கேஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் வீட்டு உபயோக சிலிண்டர் டெலிவரிக்கு தான் முன்னுரிமை கொடுத்து வருகின்றன. இதற்கிடையே வீட்டு உபயோக சிலிண்டர் முன்பதிவு விதிமுறைகளில் அவ்வப்போது மாற்றம் அறிவிக்கப்பட்ட வண்ணம் இருக்கிறது.

மார்ச் 7ஆம் தேதி மத்திய அரசு, சிலிண்டர் முன்பதிவு கால இடைவெளியை 21 நாட்களில் இருந்து 25 நாட்களாக நீடித்தது. நகர்ப்புறங்களுக்கு 25 நாட்களும் கிராமப்புறங்களுக்கு 45 நாட்களும் இடைவெளி என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நிலைமையை சரி செய்ய சிலிண்டர் முன்பதிவில் மேலும் ஒரு மாற்றம் வந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இரண்டு சிலிண்டர் இணைப்பு கொண்ட வீடுகளில் இதற்கு முன்பு 25 நாட்களுக்கு ஒரு முறை சிலிண்டர் முன்பதிவு செய்யலாம் என்ற விதி இருந்தது அதனை தற்போது 35 நாட்களாக நீட்டித்து அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது என தகவல் பரவியது. நீங்கள் ஒரு சிலிண்டரை புக் செய்து டெலிவரி பெற்று விட்டீர்கள் அதிலிருந்து 35 நாட்கள் கழித்து தான் உங்களால் புதிதாக மற்றொரு சிலிண்டர் புக் செய்யவே முடியும்.

குறிப்பாக பிரதமர் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்களுக்கு 20 நாட்களுக்கு ஒரு முறை சிலிண்டர் முன்பதிவு செய்யலாம் என இருந்த இந்த விதிமுறை தற்போது 45 நாட்களாக நீட்டிக்கப்பட்டிருக்கிறது என்றும் தகவல்கள் கூறப்படுகிறது. அதாவது உஜ்வாலா திட்டத்தில் கேஸ் இணைப்பு பெற்றவர்கள் 45 நாட்களுக்கு ஒரு முறை தான் சிலிண்டர் முன்பதிவு செய்ய முடியும் என சொல்லப்பட்டது.


LPG தட்டுப்பாடு: சிலிண்டர் முன்பதிவில் மாற்றம்? உண்மை என்ன? மத்திய அரசின் பரபரப்பு விளக்கம்!

LPG தட்டுப்பாடு நீடிக்கும் நிலையில் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சீரான முறையில் LPG விநியோகம் செய்யப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு இப்படி ஒரு நடவடிக்கை எடுப்பதாக தகவல் வெளிவந்தது. இந்நிலையில் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் சிலிண்டர் முன்பதிவு விதிமுறையில் எந்த மாற்றமும் கொண்டு வரப்படவில்லை என விளக்கம் தந்துள்ளது.

தற்போது நகர்ப்புறங்களில் சிலிண்டர் முன்பதிவுக்கான இடைவெளி காலம் 25 நாட்கள், கிராமங்களுக்கு 45 நாட்கள். அதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என தெரிவித்துள்ள மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம், பேனிக் புக்கிங் செய்ய வேண்டாம் என மக்களை கேட்டு கொண்டுள்ளது. நாட்டில் போதுமான அளவு LPG கையிருப்பு இருப்பதால் மக்கள் பதற்றம் கொள்ள வேண்டாம் என கேட்டு கொண்டுள்ளது. ஆனால் பாரத் கேஸ் வாடிக்கையாளர்கள் 30 நாட்களுக்கு ஒருமுறை தான் சிலிண்டர் முன்பதிவு செய்ய முடியும் என தங்களுடைய செயலியிலேயே காட்டுவதாக கூறுகின்றனர். இன்னும் பல நகரங்களிலும் முன்பதிவு செய்து 10 நாட்களுக்கு மேல் ஆகியும் சிலிண்டர் டெலிவரி கிடைக்கவில்லை குடோனில் வந்து எடுத்து செல்லும்படி விநியோகஸ்தர்கள் கூறுவதாக வாடிக்கையாளர் புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

அடுத்த இடி.. காஸ்ட்லியாகும் ரயில் பயணம்- ஜூன் 1 முதல் உணவு, குளிர்பானங்கள் விலை உயர்வு
அடுத்த இடி.. காஸ்ட்லியாகும் ரயில் பயணம்- ஜூன் 1 முதல் உணவு, குளிர்பானங்கள் விலை உயர்வு
உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பின், கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீடுகளில் ED ரெய்டு..
உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பின், கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீடுகளில் ED ரெய்டு..
Top 10 Headlines: இந்தியாவில் எபோலா தொற்று? .. உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை.. 11 மணி வரை நடந்தது என்ன?
Top 10 Headlines: இந்தியாவில் எபோலா தொற்று? .. உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை.. 11 மணி வரை நடந்தது என்ன?
Karnataka CM: முதலமைச்சர் பதவிக்கு பாய், பாய்..! ஈடுகட்ட கட்சி தலைவர், மகனுக்கு அமைச்சர் பதவி - காங்., டிக் அடிக்குமா?
முதலமைச்சர் பதவிக்கு பாய், பாய்..! ஈடுகட்ட கட்சி தலைவர், மகனுக்கு அமைச்சர் பதவி - காங்., டிக் அடிக்குமா?
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்கு புதிய DGP UPSC ஓகே சொன்ன 3 பேர்! விஜய்யின் CHOICE யார்?
தவெகவில் குவியும் அதிமுகவினர்
”இன்னைக்கு வரை தான் TIME
”என்னை காதலிக்க மாட்டியா” பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்! பகீர் CCTV காட்சி
அருண் IPS-க்கு புது பதவி! CM விஜய் MASTERPLAN! கடுப்பாகும் தவெகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அடுத்த இடி.. காஸ்ட்லியாகும் ரயில் பயணம்- ஜூன் 1 முதல் உணவு, குளிர்பானங்கள் விலை உயர்வு
அடுத்த இடி.. காஸ்ட்லியாகும் ரயில் பயணம்- ஜூன் 1 முதல் உணவு, குளிர்பானங்கள் விலை உயர்வு
பல்கலை. வேந்தராக முதல்வர் இருக்க வேண்டியதில்லையா? காங்கிரஸ் அமைச்சர் கருத்து- விசிக கண்டனம்!
பல்கலை. வேந்தராக முதல்வர் இருக்க வேண்டியதில்லையா? காங்கிரஸ் அமைச்சர் கருத்து- விசிக கண்டனம்!
US Iran War: மறுபடியும் போர் வெடிச்சுடும் போலயே.! அமெரிக்க தாக்குதலுக்கு ஈரான் பதிலடி; மீண்டும் பதற்றம்
மறுபடியும் போர் வெடிச்சுடும் போலயே.! அமெரிக்க தாக்குதலுக்கு ஈரான் பதிலடி; மீண்டும் பதற்றம்
பள்ளி மாணவர்களுக்கு பழைய முட்டையா? அலட்சியத்தை ஏற்க முடியாது- ஆவேசமான அண்ணாமலை!
பள்ளி மாணவர்களுக்கு பழைய முட்டையா? அலட்சியத்தை ஏற்க முடியாது- ஆவேசமான அண்ணாமலை!
Karnataka CM: முதலமைச்சர் பதவிக்கு பாய், பாய்..! ஈடுகட்ட கட்சி தலைவர், மகனுக்கு அமைச்சர் பதவி - காங்., டிக் அடிக்குமா?
முதலமைச்சர் பதவிக்கு பாய், பாய்..! ஈடுகட்ட கட்சி தலைவர், மகனுக்கு அமைச்சர் பதவி - காங்., டிக் அடிக்குமா?
அரசு பள்ளிகளில் 50ஆயிரம்+ காலியிடங்கள்: தகுதித்தேர்வில் வென்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்க கோரிக்கை
அரசு பள்ளிகளில் 50ஆயிரம்+ காலியிடங்கள்: தகுதித்தேர்வில் வென்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்க கோரிக்கை
Royal Enfield Bullet 650: இன்னும் கெத்தா, இன்னும் பவரா.! அதே ராயல் லுக்குடன்.! என்ஃபீல்ட் புல்லட் 650 வெளியீடு எப்போ.?
இன்னும் கெத்தா, இன்னும் பவரா.! ராயல் என்ஃபீல்ட் புல்லட் 650 வெளியீடு எப்போ.?
ADMK: ”ரெட்டைக் கதிரே” இனி நமக்குள் பிரிவில்லை - எடப்பாடியின் தலைமையின் கீழ் இணைந்த வேலுமணி - அதிமுக
ADMK: ”ரெட்டைக் கதிரே” இனி நமக்குள் பிரிவில்லை - எடப்பாடியின் தலைமையின் கீழ் இணைந்த வேலுமணி - அதிமுக
Embed widget