மேலும் அறிய

Meat and Liquor : இறைச்சி..மதுபானத்தை அதிகம் எடுத்துக்கொள்ளும் மாநிலம் இதுதான்.. இதுதான் டாப்.. வெளியான ரிப்போர்ட்...!

தேசிய சுகாதார ஆய்வின்படி, நாட்டில் மற்ற மாநிலங்களில் மதுபானம் அருந்துபவர்களை விட தெலங்கானாவாசிகள் அதிக மது அருந்துகின்றனர்.

வடக்கு மற்றும் மேற்கில் உள்ள மாநிலங்களை காட்டிலும் தென் மாநிலங்களில் இறைச்சியை உட்கொள்வது அதிகமாக உள்ளது. உணர்வுகளை புண்படுத்துவதாகக் கூறி அசைவம் சாப்பிடுவதற்கு பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. 

நவராத்திரியின்போது இறைச்சி கடைகளை மூட தெற்கு டெல்லி மேயர் முடிவெடுத்ததில் இருந்து, ராம நவமியின்போது கேன்டீன் மெனுவில் சிக்கம் இடம்பெற்றுள்ளதாகக் கூறி சில மாணவர்கள் போராட்டம் நடத்தியவதில் இருந்து, கர்நாடகாவில் மதிய உணவு திட்டத்தில் முட்டைகளை வைப்பது தொடர்பாக எழுந்த விவாதம் வரை அசைவம் சாப்பிடுவது என்பது தொடர் விவாத பொருளை கிளப்பி வருகிறது.

இந்நிலையில், இறைச்சி மற்றும் மதுபானத்தை அதிகம் எடுத்து கொள்ளும் மாநிலங்களின் பட்டியலில் தெலங்கானா முதலிடத்தில் இருப்பது தற்போது வெளியாகியுள்ள ஆய்வறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.

தெலங்கானா மாநில செம்மறி ஆடு மேம்பாட்டு கூட்டுறவு கூட்டமைப்பு லிமிடெட், மாநில அரசுக்கு சமர்பித்த ஆய்வறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானாவில் தேசிய ஆண்டு தனிநபர் இறைச்சி நுகர்வு 21.7 கிலோவாக உள்ளது. அதாவது, தெலங்கானாவில் உள்ள ஒரு நபர், ஒரு ஆண்டுக்கு, சராசரியாக   21.7 கிலோ இறைச்சியை உட்கொள்கிறார். மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தால் மது அருந்துதல் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

தெலங்கானாவில் மதுபானம் அருந்துபவர்களின் எண்ணிக்கை தேசிய சராசரியான 17.3 சதவீதத்தை விட அதிகமாக உள்ளது. நாடு முழுவதும் அசைவ உணவு உண்பவர்களின் எண்ணிக்கையில் தெலங்கானாவே முதலிடத்தில் உள்ளது. 

இறைச்சி உட்கொள்ளுதல் தொடர்பான ஆய்வறிக்கை

மேலும், செம்மறி ஆடுகளின் இறைச்சிக்கான தேவை வேகமாக அதிகரித்து வருவதால், ஒரு கிலோ இறைச்சியின் விலை ரூ. 800 முதல் ரூ. 1,000 ஆக அதிகரித்துள்ளது என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானாவில் வசிப்பவர் ஒரு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை உணவுடன் இறைச்சியை உண்கின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளில் மாநிலத்தில் செம்மறி ஆடுகளின் இறைச்சி உற்பத்தி மற்றும் விற்பனை 9.75 லட்சம் டன்னாக பதிவாகியுள்ளது.

சமீபத்திய ஆய்வின்படி, சர்வதேச சந்தையில் 1 கிலோ அளவுள்ள செம்மறி ஆடு இறைச்சியின் விலை ரூ.600 முதல் ரூ.700 வரை விற்கப்படுகிறது. தெலங்கானாவில் உள்ள சில்லறை சந்தைகளில் 1 கிலோ செம்மறி ஆட்டின் இறைச்சி 1,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

மதுபானம் உட்கொள்ளுதல் தொடர்பான ஆய்வறிக்கை

மது அருந்துவதைப் பொறுத்தவரை, தெலங்கானா மாநிலத்தின் மக்கள் தொகையில் 19 சதவீதம் பேர் மது அருந்துவதாக சமீபத்திய கணக்கெடுப்பு கூறுகிறது. இது தேசிய சராசரியான 17.3 சதவீதத்தை விட அதிகம் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

தேசிய சுகாதார ஆய்வின்படி, நாட்டில் மற்ற மாநிலங்களில் மதுபானம் அருந்துபவர்களை விட தெலங்கானாவாசிகள் அதிக மது அருந்துகின்றனர். மற்ற மாநிலங்களைப் பொறுத்தவரை, அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசம், மொத்த மக்கள் தொகையில் 17.3 சதவீதம் பேர், 65 லட்சத்துக்கும் அதிகமான ஆந்திரவாசிகள் மதுபானம் அருந்தும் மக்கள் தொகையாக உள்ளது.

 

தலைப்பு செய்திகள்

Independence day 2026: 80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
Students Protest : தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
Embed widget