மேலும் அறிய

Yogi Adityanath: ”ஒழுக்கம்னா என்ன?.. இந்துக்கள்ட்ட இருந்து கத்துக்கங்க” - உ.பி., CM யோகி அட்வைஸ்

Yogi Adityanath: ஒழுக்கம் என்றால் என்ன என்பதை இந்துக்களிடம் இருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும் என, உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தியுள்ளார்.

Yogi Adityanath: ரம்ஜான் தினத்தன்று சாலைகளில் தொழுகை நடத்தக்கூடாது என்ற தனது அரசின் உத்தரவு சரியே என, உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

யோகி ஆதித்யநாத் நேர்காணல்

உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பொது மக்களுக்கான சாலைகளில் தொழுகை நடத்துவதைத் தடை செய்யும் தனது அரசின் முடிவை ஆதரித்து, பிரயாக்ராஜில் நடந்த மகா கும்பமேளாவை மத ஒழுக்கம் மற்றும் ஒழுங்கான நடத்தைக்கு ஒரு எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்டுள்ளார்.

யோகி ஆதித்யநாத் அட்வைஸ்:

தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பிரத்யேக நேர்காணலில், வன்முறை, துன்புறுத்தல் அல்லது சீர்குலைவு போன்ற சம்பவங்கள் எதுவுமே இல்லாமல் 66 கோடி பக்தர்கள் மகா கும்பமேளாவில் கலந்து கொண்டதாக  உத்தரபிரதேச முதலமைச்சர் எடுத்துரைத்தார். அதன்படி, " சாலைகளில் தொழுகை செய்வதை தடை செய்தத் குறித்து பேசுபவர்கள் பேசலாம். ஆனால், சாலைகள் நடைபயிற்சிக்கானவை. இந்துக்களிடமிருந்து ஒழுக்கத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

66 கோடி மக்கள் பிரயாக்ராஜுக்கு வந்தனர்... எங்கும் கொள்ளை இல்லை, எங்கும் தீ வைப்பு இல்லை, எங்கும் துன்புறுத்தல் இல்லை, எங்கும் நாசவேலை இல்லை, எங்கும் கடத்தல் இல்லை, இது ஒழுக்கம், இது மத ஒழுக்கம். அவர்கள் பயபக்தியுடன் வந்தார்கள், 'மகாகும்பமேளாவில் பங்கேற்றனர். பின்னர் தங்கள் இலக்கை நோக்கி நகர்ந்தனர். திருவிழாக்கள் மற்றும் கொண்டாட்டங்கள் அல்லது இதுபோன்ற ஏதேனும் நிகழ்வுகள் ஆணவத்திற்கான ஒரு ஊடகமாக மாறக்கூடாது. நீங்கள் வசதியை விரும்பினால், அந்த ஒழுக்கத்தையும் பின்பற்ற கற்றுக்கொள்ளுங்கள்” என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார்.

பலத்த பாதுகாப்புடன் ரம்ஜான் தொழுகை

வன்முறை சம்பவங்களை தடுக்க உத்தரபிரதேசம் முழுவதும் ரம்ஜான் தொழுகை மிகவும் பாதுகாப்புடன் நடத்தப்பட்டது.  AI அடிப்படையிலான ட்ரோன் கண்காணிப்பு மற்றும் சமூக ஊடக கண்காணிப்பு ஆகியவை அடங்கும். இதற்கு மத்தியில் மீரட்டில் ஏற்பட்ட ஒரு சிறிய மோதலில் சிலர் காயமடைந்தனர். மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். 

மகாகும்பமேளாவில் குற்றங்களே இல்லையா?

மகாகும்பமேளாவில் எந்தவித குற்றச் சம்பவங்களும் அரங்கேறவில்லை என, மாநில சட்டமன்றத்திலேயே முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். ஆனால், மகா கும்பமேளாவின்போது மொபைல், செயின் மற்றும் பணப்பறிப்பு நிகழ்ந்ததாக தாராகஞ்ச் மற்றும் கும்பமேளா கோத்வாளி காவல் நிலையங்களில் 300-க்கும் அதிகமான வழக்குகள் பதிவாகியுள்ளன.  சில இருசக்கர வாகன திருட்டுகளும் அதில் அடங்கும். மகாகும்பமேளாவில் டிஜிட்டர் மோசடிகளும் நடந்ததாக வழக்குகள் பதிவாகியுள்ளன. இதுபோக டெல்லியை சேர்ந்த ஒருவர் தனது மனைவியை, கும்பமேளாவிற்கு அழைத்துச் சென்று கழுத்தை அறுத்து கொன்ற சம்பவமும் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
சபரிமலை: கனமழைக்கு மத்தியிலும் ஆவணி, ஓணம் பூஜைகளுக்கு முன்பதிவு துவக்கம்!
சபரிமலை: கனமழைக்கு மத்தியிலும் ஆவணி, ஓணம் பூஜைகளுக்கு முன்பதிவு துவக்கம்!
விலை உயர்வு காலத்தில் 5 கிலோ குட்டி சிலிண்டர்: எளிதான சமையல் தீர்வு!
விலை உயர்வு காலத்தில் 5 கிலோ குட்டி சிலிண்டர்: எளிதான சமையல் தீர்வு!
டிவிஎஸ், ஹோண்டாவை ஓவர்டேக் செய்ததா ஹீரோ? ஜூலை மாத விற்பனை அறிக்கையில் வெளியான உண்மை!
டிவிஎஸ், ஹோண்டாவை ஓவர்டேக் செய்ததா ஹீரோ? ஜூலை மாத விற்பனை அறிக்கையில் வெளியான உண்மை!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
Ather Konarc Electric Scooter: 120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Tasmac liquor online : மதுப்பிரியர்களுக்கு ஜாலி.! இன்று முதல் ஆன்லைனிலேயே மதுபானம் ஆர்டர் செய்யலாம்.? விளக்க வீடியோ இதோ..
மதுப்பிரியர்களுக்கு ஜாலி.! இன்று முதல் ஆன்லைனிலேயே மதுபானம் ஆர்டர் செய்யலாம்- எப்படி தெரியுமா.?
Embed widget