மேலும் அறிய

Puneeth Rajkumar | புனித்ராஜ்குமாருக்கு சிகிச்சையளித்த டாக்டருக்கு இப்படி ஒரு சிக்கலா? போலீஸ் பாதுகாப்பு!

மறைந்த கர்நாடக சூப்பர் ஸ்டார் புனித்ராஜ்குமாரின் குடும்ப மருத்தவர் ரமணராவிற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

கன்னட திரையுலகின் சூப்பர்ஸ்டராக கொடிகட்டிப் பறந்தவர் ராஜ்குமார். இவரது மகன்களில் ஒருவரான புனித்ராஜ்குமாரும் தற்போதைய கன்னட சூப்பர்ஸ்டாராக வலம் வந்தவர். கர்நாடகாவில் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்ட புனித்ராஜ்குமார் கடந்த மாதம் 29-ந் தேதி யாரும் எதிர்பாராத வகையில் திடீரென மரணம் அடைந்தார். அவரது மரணச் செய்தி இந்திய திரையுலகையே அதிர்ச்சியடைய வைத்தது. கர்நாடகாவில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

அதேசமயத்தில், புனித் ராஜ்குமாரின் மரணத்திற்கு அவரது குடும்ப மருத்துவர் அலட்சியமாக செயல்பட்டதே காரணம் என்று அவரது ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் குற்றம் சாட்டினர். இதையடுத்து, அவரது குடும்ப மருத்துவர் ரமணராவ் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்ததையடுத்து, அவருக்கு கர்நாடக போலீசார் பாதுகாப்பு அளித்துள்ளனர்.


Puneeth Rajkumar | புனித்ராஜ்குமாருக்கு சிகிச்சையளித்த டாக்டருக்கு இப்படி ஒரு சிக்கலா? போலீஸ் பாதுகாப்பு!

முன்னதாக, புனித்ராஜ்குமார் உடற்பயிற்சிக் கூடத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் தனது மனைவி அஸ்வினியுடன் இணைந்து தங்களது குடும்ப மருத்துவரான ரமணராவை நேரில் சென்று சிகிச்சைக்காக சந்தித்துள்ளார். புனித்ராஜ்குமாரை அவர் மேற்கொண்ட பரிசோதனையின்போது, புனித்ராஜ்குமாருக்கு ரத்த அழுத்தமும், இதயத்துடிப்பும் சீராக இருந்துள்ளது.நெ்சு வலியும், மூச்சுத்திணறலும் இல்லாமல் இருந்துள்ளது. ஆனால், புனித்திற்கு தொடர்ந்து வியர்த்துக் கொண்டே இருந்துள்ளது.

உடற்பயிற்சி செய்த காரணத்தால் வியர்த்துக் கொண்டே இருக்கலாம் என்றும், சோர்வாக இருப்பதாகவும் புனித் மருத்துவரிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக புனித்ராஜ்குமாருக்கு ஈ.சி.ஜி. பரிசோதனையை மருத்துவர்கள் மேற்கொண்டுள்ளனர். அந்த பரிசோதனயைில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதை புனித்ராஜ்குமாரிடம் தெரிவிக்காமல் அவரது மனைவி அஸ்வினியிடம் ரமணராவ் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, புனித்ராஜ்குமார் கடைசியாக அனுமதிக்கப்பட்ட விக்ரம் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்க ரமணராவ் தகவல் தெரிவித்துள்ளார். புனித்ராஜ்குமார் மாரடடைப்பு ஏற்பட்ட தகவல் தெரியாததாலும், ரத்த அழுத்தமும், இதயதுடிப்பும் சீராகவே இருந்ததாலும் அவரே நடந்து சென்று தனது காரில் ஏறி அமர்ந்துள்ளார்.


Puneeth Rajkumar | புனித்ராஜ்குமாருக்கு சிகிச்சையளித்த டாக்டருக்கு இப்படி ஒரு சிக்கலா? போலீஸ் பாதுகாப்பு!

இதயத்தின் அழுத்தத்தைக் குறைப்பதற்காக காரின் உள்ளேயே அவரை படுத்துக்கொள்ளுமாறு மருத்துவர் ரமணராவ் அறிவுறுத்தியுள்ளார். கார் விக்ரம் மருத்துவமனையை 5 நிமிடங்களில் அடைந்தாலும், புனித்ராஜன்குமார் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழந்த காலை 11.20 மணி வரை அவருக்கு ரத்து அழுத்தமும், இதயத்துடிப்பும் சீராகவே இருந்துள்ளது.

புனித்ராஜ்குமாருக்கு நீரிழிவு நோயோ, இதயநோயோ, உயர் ரத்த அழுத்தமோ எந்த வியாதியுமே இல்லை. ஆனால், திடீரென அவர் உயிரிழந்தது பலருக்கும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஒரு மாரடைப்பு ஏற்பட்ட நபரை முறையாக ஆம்புலன்சில் அனுமதித்து சிகிச்சை அளிக்காமல், காரிலே மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தியதால்தான் புனித்ராஜ்குமார் உயிரிழந்தார் என்று ரசிகர்கள் சமூகவலைதளங்களில் ஆதங்கமாக பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சமூக வலைதளங்களில் அவருக்கு கொலை மிரட்டல்களும் விடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நாளை தாயகத்தில் இந்திய கிரிக்கெட் அணி: பிரதமர் சந்திப்பு, பேரணி, பாராட்டு விழா: நிகழ்ச்சி நிரல்
நாளை தாயகத்தில் இந்திய கிரிக்கெட் அணி: பிரதமர் சந்திப்பு, பேரணி, பாராட்டு விழா: நிகழ்ச்சி நிரல்
மீண்டும் ஜார்க்கண்ட் முதலமைச்சராகும் ஹேமந்த் சோரன்.. சம்பாய் சோரன் அப்செட்டா?
மீண்டும் ஜார்க்கண்ட் முதலமைச்சராகும் ஹேமந்த் சோரன்.. சம்பாய் சோரன் அப்செட்டா?
India vs Pakistan: லாகூரில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி? - பாகிஸ்தானின் முடிவுக்கு ஓகே சொல்லுமா பிசிசிஐ!
India vs Pakistan: லாகூரில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி? - பாகிஸ்தானின் முடிவுக்கு ஓகே சொல்லுமா பிசிசிஐ!
Maharaja Box Office: பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த விஜய் சேதுபதியின் 'மகாராஜா'.. 100 கோடி வசூலை தாண்டியது!
பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த விஜய் சேதுபதியின் 'மகாராஜா'.. 100 கோடி வசூலை தாண்டியது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

World Records : 550 மாணவர்களுக்கு இலவச உடல் பரிசோதனை..ஸ்ரீ ராமச்சந்திரா குழுமம் உலக சாதனை!PMK vs DMK  : திமுக நிர்வாகி வீடுபுகுந்து வேட்டி சேலைகள் பறிமுதல்! பாமகவினர் அதிரடிBhole Baba Hathras Stampede  : 132 பேர் பலியும்.. மார்டன் சாமியாரும்..யார் இந்த போலே பாபா?Pawan kalyan salary  : ”எனக்கு சம்பளம் வேணாம்” பவன் கல்யாண் ட்விஸ்ட்! காரணம் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நாளை தாயகத்தில் இந்திய கிரிக்கெட் அணி: பிரதமர் சந்திப்பு, பேரணி, பாராட்டு விழா: நிகழ்ச்சி நிரல்
நாளை தாயகத்தில் இந்திய கிரிக்கெட் அணி: பிரதமர் சந்திப்பு, பேரணி, பாராட்டு விழா: நிகழ்ச்சி நிரல்
மீண்டும் ஜார்க்கண்ட் முதலமைச்சராகும் ஹேமந்த் சோரன்.. சம்பாய் சோரன் அப்செட்டா?
மீண்டும் ஜார்க்கண்ட் முதலமைச்சராகும் ஹேமந்த் சோரன்.. சம்பாய் சோரன் அப்செட்டா?
India vs Pakistan: லாகூரில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி? - பாகிஸ்தானின் முடிவுக்கு ஓகே சொல்லுமா பிசிசிஐ!
India vs Pakistan: லாகூரில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி? - பாகிஸ்தானின் முடிவுக்கு ஓகே சொல்லுமா பிசிசிஐ!
Maharaja Box Office: பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த விஜய் சேதுபதியின் 'மகாராஜா'.. 100 கோடி வசூலை தாண்டியது!
பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த விஜய் சேதுபதியின் 'மகாராஜா'.. 100 கோடி வசூலை தாண்டியது!
Shalini Ajith : ஷாலினிக்கு ஆபரேஷன்... அஜர்பைஜானில் இருந்து விரைந்து வந்த அஜித்... என்ன விஷயம்?
Shalini Ajith : ஷாலினிக்கு ஆபரேஷன்... அஜர்பைஜானில் இருந்து விரைந்து வந்த அஜித்... என்ன விஷயம்?
Kalki 2898 AD 6th day collection: 6ம் நாளில் வசூலில் கலக்கிய கல்கி 2898 AD படத்தின் 2ஆம் பாகம் எப்போது ரிலீஸ் தெரியுமா?
Kalki 2898 AD 6th day collection: 6ம் நாளில் வசூலில் கலக்கிய கல்கி 2898 AD படத்தின் 2ஆம் பாகம் எப்போது ரிலீஸ் தெரியுமா?
கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா.. திமுக தந்த அதிர்ச்சி.. பரபர பின்னணி!
கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா.. திமுக தந்த அதிர்ச்சி.. பரபர பின்னணி!
Zika virus:உஷார்! அதிவேகமாக பரவும் ஜிகா வைரஸ்: மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
Zika virus:உஷார்! அதிவேகமாக பரவும் ஜிகா வைரஸ்: மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
Embed widget