மேலும் அறிய

மிரட்டல் விடுத்த காலிஸ்தான் தீவிரவாதி பன்னுன்.. ஸ்கெட்ச் போடும் என்ஐஏ

ஏர் இந்தியா விமானத்தில் பயணிப்பவர்களுக்கு மிரட்டல் விடுத்த பன்னுனுக்கு எதிராக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வழக்கு பதிவு செய்துள்ளது.

சிக்கியர்களுக்கு தனி நாடு கோரும் காலிஸ்தானி ஆதரவாளர்கள், இந்தியாவுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, சமீப காலமாக காலிஸ்தானி அதரவாளர்கள் செய்யும் செயல் இந்திய அரசை கோபத்தில் ஆழ்த்தியது.

அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ, இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஆகிய நகரங்களில் அமைந்துள்ள இந்திய தூதரகங்களை காலிஸ்தானி ஆதரவாளர்கள் சேதப்படுத்திய சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

மிரட்டல் விடுத்த காலிஸ்தான் ஆதரவாளர் பன்னுன்:

இப்படிப்பட்ட சூழலில், இந்திய அரசால் தடை செய்யப்பட்ட சீக்கியர்களுக்கான நீதி( எஸ்.எப்.ஜே) என்ற காலிஸ்தான் அமைப்பின் தலைவரான குர்பத்வந்த்சிங் பன்னுன், ஏர் இந்தியா விமானத்தின் பயணிகளுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்தார்.
  
அதில், “சீக்கிய சமுதாயத்தினர் ஏர் இந்தியாவில் பயணம் செய்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். உலகம் முழுவதும் நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக, ஏர் இந்தியவை இயக்க அனுமதிக்க மாட்டோம். நவம்பர் 19ஆம் தேதி முதல் ஏர் இந்தியா சேவைகளை பயன்படுத்த வேண்டாம் என்று சீக்கிய சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அறிவுறுத்துகிறோம். ஏனெனில் இது உங்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்”

மேலும் அவர் விடுத்துள்ள எச்சரிக்கையில் இந்திரா காந்தி விமான நிலையம் மூடப்பட வேண்டும் என்றும் எச்சரித்தார். இதை தொடர்ந்து, ஏர் இந்தியா விமானம் இயங்கும் அனைத்து நாடுகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, பாதுகாப்பு படையினரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

ஸ்கெட்ச் போடும் தேசிய புலனாய்வு முகமை:

நிஜ்ஜார் கொலை வழக்கு இந்தியாவுக்கும் கனடாவுக்கு ஏற்கனவே பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளதால், பன்னுன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை பதற்றத்தை மேலும் தூண்டியது. 

இந்த நிலையில், மிரட்டல் விடுத்த பன்னுனுக்கு எதிராக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வழக்கு பதிவு செய்துள்ளது. இந்திய தண்டனை சட்டம் மற்றும் உபா சட்டத்தின் கீழ் என்ஐஏ வழக்கு பதிவு செய்துள்ளது. 

கடந்த 2019ஆம் ஆண்டு முதலே என்ஐஏவின் கண்காணிப்பு வளையத்தில் பன்னுன் இருந்து வருகிறார். கடந்த செப்டம்பரில், சண்டிகரில் உள்ள அமிர்தசரஸில் உள்ள அவரது வீடு மற்றும் நிலத்தை என்ஐஏ பறிமுதல் செய்தது. கடந்த 2021ஆம் ஆண்டு, பிப்ரவரி 3ஆம் தேதி, என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தால் பன்னுனுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டன. தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

இதையும் படிக்க: Uttarkhand Tunnel Collapse: சுரங்கப்பாதையில் தவிக்கும் 40 தொழிலாளர்கள்! 3வது முறையாக முதலமைச்சருக்கு போன் போட்ட பிரதமர்!                                                           

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | Crime

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
GG vs UPW, WPL 2025: முதல் வெற்றியை பெற போவது யார்? குஜராத் vs யு.பி பலப்பரீட்சை.. மைதானம் எப்படி? முழு விவரம்!
GG vs UPW, WPL 2025: முதல் வெற்றியை பெற போவது யார்? குஜராத் vs யு.பி பலப்பரீட்சை.. மைதானம் எப்படி? முழு விவரம்!
பாஜகவோ, திமுகவோ.. ஃபாசிச அணுகுமுறையை யாராக இருந்தாலும் எதிர்ப்போம்: விஜய் சூளுரை!
பாஜகவோ, திமுகவோ.. ஃபாசிச அணுகுமுறையை யாராக இருந்தாலும் எதிர்ப்போம்: விஜய் சூளுரை!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.