கேரளாவில் சோகம்: திருச்சூர் பூரம் விழாவுக்காக பட்டாசு தயாரித்தபோது வெடிவிபத்து - 13 பேர் உயிரிழப்பு
திருச்சூர் பூரம் பண்டிகைக்காக தலப்பள்ளி தாலுக்காவில் உள்ள முண்டத்திக்கோட்டில் அமைக்கப்பட்டிருந்த பட்டாசு சேமிப்புக் கிடங்கில் இன்று(21-04-26) மதியம் திடீர் வெடி விபத்து ஏற்ப்பட்டது.

கேரளா மாநிலம் திருச்சூர் பூரத்தில் பட்டாசு கிடங்கில் ஏற்ப்பட்ட வெடி விபத்தில் சிக்கி 13பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
கேரளாவின் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் பண்டிகைக்காக தலப்பள்ளி தாலுக்காவில் உள்ள முண்டத்திக்கோட்டில் அமைக்கப்பட்டிருந்த பட்டாசு சேமிப்புக் கிடங்கில் இன்று(21-04-26) மதியம் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது. 13 பேர் உயிரிழந்தனர் மற்றும் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஐந்து சடலங்கள் மீட்கப்பட்டதாகவும், மேலும் மூன்று உடல்களின் அடையாளம் தெரியாத பாகங்கள் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டதாகவும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், காயமடைந்தவர்களில் ஐந்து பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். திருச்சூர் பூரம் பண்டிகைக்காக அந்த கிடங்கில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்ட வந்தன.
புகழ்பெற்ற திருவிழாவை ஏற்பாடு செய்யும் இரண்டு முக்கிய குழுக்களில் ஒன்றான திருவாம்பாடி தேவஸ்வத்திற்காக, அந்தப் பிரிவு பட்டாசுகளைத் தயாரித்துக் கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் அந்த ஆலையைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஆவர். அருகிலுள்ள பகுதிகளிலிருந்து தீயணைப்பு அதிகாரிகளும் ஆம்புலன்ஸ் குழுவினரும் விரைந்து வந்து, காயமடைந்தவர்களை திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அவசரமாகக் கொண்டு சென்றனர்.
இது குறித்து தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் "மாலை 3.35 மணியளவில் வெடிப்புச் சம்பவம் குறித்து எங்களுக்குத் தகவல் கிடைத்தது. பட்டாசு தயாரிக்கும் பிரிவு, அறுவடைக்குப் பிறகு காய்ந்திருந்த ஒரு நெல் வயலில் அமைந்திருந்தது. கடுமையான கோடை வெப்பம் இந்தச் சம்பவத்தை மேலும் மோசமாக்கியிருக்கலாம்," என்று வடக்கஞ்சேரி தீயணைப்பு நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். "வடக்கஞ்சேரி, குன்னம்குளம் மற்றும் திருச்சூர் தீயணைப்புப் பிரிவுகள், உள்ளூர் காவல்துறையுடன் இணைந்து மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்தன," என்றும் அவர் மேலும் கூறினார்.
சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ், திருச்சூர் மருத்துவக் கல்லூரி மட்டுமின்றி திருச்சூர் பொது மருத்துவமனையிலும் ஏற்பாடுகளைச் செய்ய உத்தரவிட்டுள்ளார். மேலும், அருகிலுள்ள மருத்துவமனைகள் நிலைமையைச் சமாளிக்கத் தயாராக இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
தீ பெரும்பாலும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுவிட்டதாகவும், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வேறு எந்த வெடிப்புச் சம்பவங்களும் பதிவாகவில்லை என்றும், இருப்பினும் காயமடைந்தவர்களில் பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர் என்றும் திருச்சூர் மாநகராட்சி மேயர் நிஜி ஜஸ்டின் தெரிவித்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்






















