கேரள உயர்நீதிமன்றம் அதிரடி! AI கருவிகள் தீர்ப்புகளில் பயன்படுத்த தடை! நீதித்துறையில் புதிய திருப்பம்?
கேரளாவில் உள்ள நீதிமன்றம், வழக்கு விசாரணையின்போது உத்தரவுகளை பிறப்பிக்க ஏஐ கருவிகளை பயன்படுத்த வேண்டாம் என கேரளா உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
தற்போதுள்ள தொழில்நுட்ப வளர்ச்சி உலகில், ஏஐ போன்றவற்றின் ஆதிக்கம் அதிகரிக்க தொடங்கிவிட்டது. ஏஐ இன்றைய நவீன உலகில் உள்கட்டமைப்பு முதல் மருத்துவ துறை வரை என பல்வேறு துறைகளில் சாதனை செய்து வருகிறது. இந்த நிலையில் வழக்கு தொடர்பான உத்தரவுகளை பிறப்பிக்க ஏஐ போன்றவற்றை பயன்படுத்த கூடாது என்று கேரளா உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
நாட்டின் நீதித்துறையில் முதன்முறையாக, கேரளா உயர்நீதிமன்றம் ஒரு முக்கியமான வழிகாட்டு உத்தரவை வெளியிட்டு, நீதிமன்ற உத்தர்வுகளை வெளியிடும் போது செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்தக்கூடாது என்று தெளிவாக அறிவித்துள்ளது. இந்த உத்தரவில், ஏஐ கருவிகள் வழக்குகளின் தீர்ப்புகள் மற்றும் தீர்மானங்களை எடுக்க பயன்படுத்தப்படக்கூடாது என்றும், அது தனிப்பட்டத் தகவல்கள் மற்றும் தரவுப் பாதுகாப்பு ஆகியவற்றை பாதிக்கக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நீதித்துறையிலும் தொழில்நுட்ப வளர்ச்சியிலும் சமநிலை தேவை என்பதைக் கண்காணிக்கும் முக்கிய முன்னோடியான நீதிமன்ற உத்தரவுகள், தீர்ப்புகள் போன்றவை ஏஐ கருவிகள் மூலம் உருவாக்கப்படக்கூடாது.
இது நீதிபதியின் நேரடி பொறுப்பாகும். சாட் ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவு கருவிகளை உபயோகித்துத் தீர்மானம் எடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. இவை தவறான தகவல்களை அளிக்கக்கூடும் என்பதோடு, தரவுப் பாதுகாப்பையும் பாதிக்கக்கூடும். ஏஐ கருவிகளை பயன்படுத்த வேண்டுமானால், அது மாநில நீதித்துறை அங்கீகரித்த கருவியாக இருக்க வேண்டும். அத்துடன், அந்தக் கருவிகளைப் பயன்படுத்துவதற்கான சிறப்பு பயிற்சி பெறப்பட்டிருக்க வேண்டும்.நீதிமன்றங்கள் மற்றும் அதன் கீழுள்ள அதிகாரிகள் ஏஐ கருவிகளைப் பயன்படுத்தும் முன், ஹை கோர்ட் அல்லது ஜுடிஷியல் அகாடமி நடத்திய பயிற்சி முகாம்களில் கலந்து கொண்டு பயிற்சி பெற வேண்டும்.
ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட ஏஐ கருவியில் தொழில்நுட்ப சிக்கல்கள் உள்ளதெனக் கருதினால், அதனை உயர் கோர்ட் தகவல் தொழில்நுட்ப பிரிவிடம் தெரிவிக்க வேண்டும். ஏஐ கருவிகள் வழங்கும் தீர்வுகள், சட்ட மேற்கோள்கள், தகவல் ஆதாரங்கள் அனைத்தும் நீதிமன்ற அதிகாரிகள் மிக கவனமாக பரிசீலிக்க வேண்டும். ஏனெனில், அவை நேர்மையானதல்லாமல் இருந்தால், நீதிமன்றத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகும்.ஏஐ பயன்படுத்தியதாலோ, அவை தவறான தகவல்களை அளித்ததாலோ, எந்த ஒரு முடிவும் நீதிபதியின் பொறுப்பிலிருந்து விலக முடியாது. அவர்களே தீர்ப்புகளின் உள்ளடக்கங்களுக்கு முழுமையாக பொறுப்பாளிகள் ஆக இருக்க வேண்டும்.
இந்த உத்தரவு இந்திய நீதித்துறையின் எதிர்கால வளர்ச்சிக்கு ஒரு முக்கிய கட்டமாக அமைந்துள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியை வரவேற்கும் அதே சமயம், மனிதனின் நீதிச் செயல்முறைக்கு அத்தியாவசியமான நுண்ணறிவையும், பொறுப்பையும் புறக்கணிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அண்மையில் கூட சாட் ஜிபிடி செயலி உதவியுடன் அமெரிக்க பெண் ஒருவர் ரூ.10 லட்சம் கடனை துரிதமாக அடைத்தார். மேலும் மற்றொரு விஷயத்தில் மருத்துவர்களால் கண்டுப்பிடிக்க முடியாத நோயை, ஏஐ விரைவாக கண்டுப்பிடித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.





















