மேலும் அறிய

அமானுஷ்யமா? கொல்லப்பட்ட மனைவி உயிரோடு வந்ததால் பரபரப்பு.. ஜெயிலில் இருந்த கணவருக்கு ஷாக்

கர்நாடகாவில் கொலை வழக்கு ஒன்றில் பயங்கர திருப்பமாக 4 ஆண்டுகளுக்கு முன்பு கொல்லப்பட்ட பெண், உயிரோடு வந்துள்ளார். செய்யாக கொலைக்காக 18 மாதங்களுக்கும் மேலாக அவரது கணவர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

கர்நாடகாவில் கணவரால் கொல்லப்பட்ட மனைவி உயிரோடு வந்த சம்பவம் அனைவரையும் வியப்படைய செய்துள்ளது. கொலை வழக்கு ஒன்றில் பயங்கர திருப்பமாக 4 ஆண்டுகளுக்கு முன்பு கொல்லப்பட்ட பெண், ஹோட்டலுக்கு உயிரோடு சென்றுள்ளார். இதையடுத்து, கொலை வழக்கின் விசாரணையில் குளறுபடிகள் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.

கொல்லப்பட்ட மனைவி உயிரோடு வந்தது எப்படி?

குடகு மாவட்டம் குஷால்நகரை சேர்ந்தவர் மல்லிகா. இவர் காணாமல் போனதாக 4 ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் சுரேஷ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், இந்த வழக்கில் பயங்கர திருப்பமாக  பெட்டதரபுராவில் மனித எலும்புக்கூடுகளை போலீசார் கண்டெடுத்தனர்.

எந்த வித அடிப்படை ஆதாரங்களும் இன்றி, அவை மல்லிகாவின் எலும்புக்கூடுகள் என காவல்துறை உறுதிசெய்து, கணவர் சுரேஷ்தான் கொலை செய்தார் என்ற முடிவுக்கு வந்தது. பின்னர், அவர் கைது செய்யப்பட்டார். கொலைக் குற்றச்சாட்டில் 18 மாதங்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், இந்த கொலை வழக்கில் மற்றுமொரு திருப்பமாக மல்லிகா உயிரோடு இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி, வழக்கின் முக்கிய சாட்சியான சுரேஷின் நண்பர், மல்லிகாவை உயிரோடு பார்த்துள்ளார்.

அமானுஷ்யமா? காவல்துறை அஜாக்கிரதையா?

மடிகேரியில் உள்ள உணவகம் ஒன்றில் வேறொரு நபருடன் அவர் உணவு உண்பதை சுரேஷின் நணபர் பார்த்துள்ளார். இதுகுறித்து அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். சிறிது நேரத்திலேயே மல்லிகா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்த வழக்கை காவல்துறை கையாண்ட விதம் குறித்து ஆழ்ந்த கவலை கொண்ட நீதிமன்றம், ஏப்ரல் 17 ஆம் தேதிக்குள் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு காவல்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளது. டிஎன்ஏ சோதனை முடிவுகளை பெறுவதற்கு முன்பே குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது உட்பட வெளிப்படையாகவே பல குளறுபடிகள் நடந்திருப்பதை நீதிமன்றம் கண்டறிந்தது.

குறிப்பாக, காவல்துறை கண்டெடுத்த எலும்புக்கூடுகளையும் மல்லிகா குடும்பத்தினரின் டிஎன்ஏவையும் பொருத்தி பார்த்ததில் இரண்டும் வெவ்வேறு என பின்னர் தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக, வழக்கின் விசாரணை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து சுரேஷின் வழக்கறிஞர் கூறுகையில், "குஷால்நகரில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ், தனது மனைவி காணாமல் போனது குறித்து 2020 ஆம் ஆண்டு குஷால்நகர் கிராமப்புற காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதே நேரத்தில், பெட்டதரபுரா காவல் நிலைய எல்லைக்குள் ஒரு எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. ஒரு வருடம் கழித்து, தகாத உறவின் காரணமாக தனது மனைவியைக் கொன்றதாகக் கூறி, பெட்டதரபுரா போலீசார் சுரேஷை கைது செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இப்போது, ​​அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரித்தபோது, ​​அவர் வேறொருவரை மணந்ததை ஒப்புக்கொண்டுள்ளார். சுரேஷுக்கு என்ன நடந்தது என்று தனக்குத் தெரியாது என்று அவர் வாக்குமூலம் அளித்திருக்கிறார். மடிகேரியிலிருந்து 25-30 கி.மீ தொலைவில் உள்ள ஷெட்டிஹள்ளி என்ற கிராமத்தில் அவர் வசித்து வந்துள்ளார். ஆனால், அவரைக் கண்டுபிடிக்க போலீசார் எந்த முயற்சியும் எடுக்கவில்லை" என்றார்.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

MK Stalin Slams EPS: “சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணியா.?“ இபிஎஸ்-க்கு முதல்வர் கேள்வி
“சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணியா.?“ இபிஎஸ்-க்கு முதல்வர் கேள்வி
New Labour Codes: இனி ஒரே வருடத்தில் க்ராட்சுவிட்டி, WFH தாராளம், ஊதியம் ஏராளம் - புதிய தொழிலாளர் சட்டங்கள் பற்றி தெரியுமா?
New Labour Codes: இனி ஒரே வருடத்தில் க்ராட்சுவிட்டி, WFH தாராளம், ஊதியம் ஏராளம் - புதிய தொழிலாளர் சட்டங்கள் பற்றி தெரியுமா?
டிசம்பர் 1ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.! குஷியில் மாணவர்கள்
டிசம்பர் 1ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.! குஷியில் மாணவர்கள்
Tenkasi Bus Accident: தென்காசியில் கோர விபத்து.. 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்.. 6 பேர் பலி!
Tenkasi Bus Accident: தென்காசியில் கோர விபத்து.. 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்.. 6 பேர் பலி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Weather Report | இன்னும் 24 மணி நேரத்தில்..மீண்டும் வெள்ள அபாயம்?வெதர்மேன் கொடுத்த UPDATE
Smriti Mandhana Marriage Postponed | தந்தைக்கு மாரடைப்பு!நின்றுபோன ஸ்மிருதி திருமணம்|Palash Muchchal
விஜய்க்கு NO CHANCE! ”திமுகவுடன் தான் கூட்டணி” ஆட்டத்தை ஆரம்பித்த ராகுல்
இறைநிலை அடைந்த AR ரஹ்மான் SUFISM என்றால் என்ன? ஆன்மிகம், இசை SUFI பயணம் | AR Rahman Sufi Concert
பொம்மை முதல்வர் நிதிஷ்குமார்?முக்கிய துறைகளை தூக்கிய பாஜக பரபரக்கும் பீகார் அரசியல் | Nitish kumar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin Slams EPS: “சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணியா.?“ இபிஎஸ்-க்கு முதல்வர் கேள்வி
“சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணியா.?“ இபிஎஸ்-க்கு முதல்வர் கேள்வி
New Labour Codes: இனி ஒரே வருடத்தில் க்ராட்சுவிட்டி, WFH தாராளம், ஊதியம் ஏராளம் - புதிய தொழிலாளர் சட்டங்கள் பற்றி தெரியுமா?
New Labour Codes: இனி ஒரே வருடத்தில் க்ராட்சுவிட்டி, WFH தாராளம், ஊதியம் ஏராளம் - புதிய தொழிலாளர் சட்டங்கள் பற்றி தெரியுமா?
டிசம்பர் 1ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.! குஷியில் மாணவர்கள்
டிசம்பர் 1ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.! குஷியில் மாணவர்கள்
Tenkasi Bus Accident: தென்காசியில் கோர விபத்து.. 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்.. 6 பேர் பலி!
Tenkasi Bus Accident: தென்காசியில் கோர விபத்து.. 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்.. 6 பேர் பலி!
Trump Vs Zelensky: கெடு விதித்த ட்ரம்ப்; கூலாக பதிலளித்த ஜெலன்ஸ்கி; திட்டத்தை திருத்திய அமெரிக்கா - நடப்பது என்ன.?
கெடு விதித்த ட்ரம்ப்; கூலாக பதிலளித்த ஜெலன்ஸ்கி; திட்டத்தை திருத்திய அமெரிக்கா - நடப்பது என்ன.?
தோல்வி தந்த சோகம்! மாணவர் விபரீத முடிவு..அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்
தோல்வி தந்த சோகம்! மாணவர் விபரீத முடிவு..அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்
kia Upcoming Cars: பீஸ்ட் மோடில் கியா.. ஹைப்ரிட், இன்ஜின், மின்சார எடிஷன் - அடுத்தடுத்து 3 எஸ்யுவிக்கள், எகிறும் டிமேண்ட்
kia Upcoming Cars: பீஸ்ட் மோடில் கியா.. ஹைப்ரிட், இன்ஜின், மின்சார எடிஷன் - அடுத்தடுத்து 3 எஸ்யுவிக்கள், எகிறும் டிமேண்ட்
PM Modi G20: ”ஏம்பா முன்னாடியே சொல்ல மாட்டியா” மோடியை கலாய்த்த தென்னாப்ரிக்கா அதிபர் - வீடியோ வைரல்
PM Modi G20: ”ஏம்பா முன்னாடியே சொல்ல மாட்டியா” மோடியை கலாய்த்த தென்னாப்ரிக்கா அதிபர் - வீடியோ வைரல்
Embed widget