மேலும் அறிய

தீயாய் சந்தேகம்.. கணவர் வெறிச்செயல்.. குழந்தையை பெற்றெடுத்த பெண்ணுக்கு நடந்த கொடூரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்புதான், குழந்தை பிறந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் குழந்தையை பெற்றெடுத்த பெண் மீது சந்தேகப்பட்டு, அவரை அவரது கணவரே கொலை செய்த சம்பவம் அம்மாநிலத்தை உலுக்கியுள்ளது. கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்புதான், குழந்தை பிறந்துள்ளது. அந்த பெண்ணுக்கு வேறொருவருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்ட கணவர் இந்த வெறிச்செயலை செய்திருப்பதாக காவல்துறை தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள், மூன்று பேரை கைது செய்துள்ளனர். இதுகுறித்து விரிவாக பேசிய காவல்துறை தரப்பு, "கணவரான டி. கிஷோர், காவல்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். தற்கொலை செய்துகொள்ளும் முயற்சியில் ஈடுபடுவதற்கு முன்பு, தனது மனைவி பிரதீபாவை அவர் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் கொடூரம்:

ஹோஸ்கோட் தாலுகாவில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்த பிரதிபாவுக்கு அக்டோபர் 28ஆம் தேதி, ஆண் குழந்தை பிறந்தது.
கிஷோர், சாமராஜநகர் நகரில் வசித்து வந்துள்ளார். கணினி அறிவியலில் பட்டம் பெற்ற பிரதீபாவுக்கும், கோலார் மாவட்டம் வீரபுரத்தைச் சேர்ந்த 32 வயதான கிஷோருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை மாலை கிஷோருக்கும் பிரதிபாவுக்கும் தொலைபேசியில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளான பிரதிபா, கதறி கதறி அழுதுள்ளார். அழைப்பைத் துண்டிக்கச் சொன்ன அவரது தாயார், சிறிது காலம் கிஷோரிடம் பேச வேண்டாம் என்று பிரதிபாவுக்கு அறிவுரை கூறினார்.

திங்கள்கிழமை, பிரதீபா தனது போனை பார்த்த போது, ​​150 மிஸ்டு கால்கள் இருந்துள்ளது. பின்னர், கிஷோர் தனது மாமியார் வீட்டிற்கு வந்து, பூட்டிய அறைக்குள் தனது மனைவியை அடைத்து வைத்து கொலை செய்துள்ளார். அப்போது, பிரதீபாவின் தாயார் மேல்மாடியில் இருந்துள்ளார். கிஷோர் தப்பிக்கும் முன், தனது மாமியாரிடம் தான்தான் கொலை செய்தேன் என சொல்லிவிட்டு ஓடியுள்ளார்" என தெரிவித்துள்ளது.

நடந்தது என்ன?

கொலை செய்யப்பட்ட பெண்ணின் தந்தை, இதுதொடர்பாக பேசுகையில், "எனது மருமகன் ஒரு சைக்கோ. எங்கள் மகளை அவருக்குத் திருமணம் செய்து வைத்தோம். நல்லவர் என்று நினைத்தோம். இப்போது, குற்றவாளியாக மாறியுள்ளார். எங்களுக்கு நீதி வேண்டும். அவர் தண்டிக்கப்பட வேண்டும். என் மகளுக்கு நேர்ந்தது இன்னொரு பெண்ணுக்கு நடக்கக் கூடாது" என்றார்.

பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் இந்த கொடூரம் அரங்கேறி வருகிறது. சமீபத்தில், ஷ்ரத்தா கொலை வழக்கு நாம் எப்படிப்பட்ட சமூகத்தில் இருக்கிறோம் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியது. 

ஷர்த்தா கொலை வழக்கின் அதிர்ச்சி அடங்குவதற்குள்ளேயே உத்தரப் பிரதேசத்திலும் மேற்குவங்கத்திலும் அதே போன்ற கொலை கொடூரம் சம்பவங்கள் அரங்கேறின. பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் பெரும்பாலும் அவர்களுக்கு தெரிந்தவர்களாலேயே நடத்தப்படுவதாக அதிர்ச்சி அறிக்கைகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

ஒவ்வொரு 11 நிமிடங்களுக்கும் நன்கு தெரிந்த ஒருவராலேயோ அல்லது குடும்ப உறுப்பினர் ஒருவராலேயோ ஒரு பெண்/சிறுமி கொல்லப்படுகிறார் என ஐநா செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
ABP Premium

வீடியோ

TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
TATA Sierra Bookings: மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
TATA Sierra Dealership: டாடா சியரா டீலர்ஷிப்பை பெறுவது எப்படி.? அதுல எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் தெரியுமா?
டாடா சியரா டீலர்ஷிப்பை பெறுவது எப்படி.? அதுல எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் தெரியுமா?
Embed widget