மேலும் அறிய

இனி ஒரு நாளைக்கு 14 மணி நேரம் வேலை செய்யனுமா? ஐடி ஊழியர்களுக்கு ஆப்பு வைக்கும் கர்நாடக அரசு!

ஐடி ஊழியர்களை வேலை நேரத்தை ஒரு நாளைக்கு 14 மணி நேரமாக உயர்த்த கர்நாடக அரசு திட்டமிட்டு வருகிறது. ஆனால், உடல்நலத்தில் இது பாதிப்பை ஏற்படுத்தும் என தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

கன்னடர்ளுக்கு தனியார் நிறுவனங்களில் ஒடஒதுக்கீடு வழங்கும் வகையில் கர்நாடக காங்கிரஸ் அரசு கொண்டு வந்த மசோதா பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அம்மாநில அரசு கொண்டு வந்துள்ள மற்றொரு மசோதா பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

உயர்த்தப்படுகிறதா ஐடி ஊழியர்களின் வேலை நேரம்? தகவல் தொழில்நுட்பத்துறை ஊழியர்களுக்கான வேலை நேரத்தை ஒரு நாளைக்கு 14 மணி நேரமாக உயர்த்த கர்நாடக அரசு திட்டமிட்டு வருகிறது. பணி நேரத்தை உயர்த்தும் வகையில் கர்நாடக கடைகள் மற்றும் வணிக ஸ்தாபன சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.

இது தொடர்பாக கருத்துகளை கேட்க கர்நாடக தொழில்துறை அமைச்சகம் சார்பில் ஆலோசனை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், கர்நாடக தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் எஸ். லாட், தொழிலாளர் துறை, தகவல் தொழில்நுட்பத்துறை, உயிரி தொழில்நுட்பத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். 

அதோடு, தொழில்துறையை சேர்ந்த பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர். சட்டத்திருத்தம் தொடர்பாக அவர்களிடம் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்திருத்தம் அமலுக்கு வரும்பட்சத்தில், ஐடி ஊழியர்களின் வேலை நேரம் வாரத்திற்கு 70 மணிநேரமாக உயர்த்தப்படும்.

தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு: நாட்டின் தகவல் தொழில்நுட்பத்துறையின் மையமாக உள்ள கர்நாடக தலைநகர் பெங்களூருவில் இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சித்தராமையா தலைமையிலான அரசு, இதுதொடர்பாக இன்னும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

ஆனால், இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள கர்நாடக மாநில ஐடி ஊழியர்கள் சங்கம், "14 மணி நேர வேலை நாளை இந்த சட்டத்திருத்தம் இயல்பாக்க முயற்சிக்கிறது. தற்போதுள்ள சட்டம், கூடுதல் நேரம் உட்பட ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 10 மணிநேரம் மட்டுமே வேலை செய்ய அனுமதிக்கிறது.

தற்போது கொண்டு வரப்பட்டுள்ள சட்டத்திருத்ததில் இது திரும்ப பெறப்பட உள்ளது. இது ஐடி நிறுவனங்களுக்கு தினசரி வேலை நேரத்தை காலவரையின்றி நீட்டிக்க உதவும். இந்த சட்டத்திருத்தம், கடந்த 10 ஆண்டுகளில் தொழிலாளர் வர்க்கத்தின் மீது தொடுக்கப்பட்ட மிகப்பெரிய தாக்குதல்.

தற்போது இருக்கும் மூன்று-ஷிப்ட் முறைக்கு பதிலாக இரண்டு-ஷிப்ட் முறைக்கு நிறுவனங்கள் செல்ல இது அனுமதிக்கும். இதனால், மூன்றில் ஒரு பங்கு பணியாளர்கள் தங்கள் வேலையில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்.

வேலை நேரத்தை உயர்த்துவதால் தொழிலாளர்கள் உடல் ரீதியாக பாதிக்கப்படுவார்கள் என்பதையே பல ஆய்வறிக்கைகள் குறிப்பிடுகின்றன" என குறிப்பிட்டுள்ளது.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Job Fair: கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Embed widget