மேலும் அறிய

இனி ஒரு நாளைக்கு 14 மணி நேரம் வேலை செய்யனுமா? ஐடி ஊழியர்களுக்கு ஆப்பு வைக்கும் கர்நாடக அரசு!

ஐடி ஊழியர்களை வேலை நேரத்தை ஒரு நாளைக்கு 14 மணி நேரமாக உயர்த்த கர்நாடக அரசு திட்டமிட்டு வருகிறது. ஆனால், உடல்நலத்தில் இது பாதிப்பை ஏற்படுத்தும் என தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

கன்னடர்ளுக்கு தனியார் நிறுவனங்களில் ஒடஒதுக்கீடு வழங்கும் வகையில் கர்நாடக காங்கிரஸ் அரசு கொண்டு வந்த மசோதா பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அம்மாநில அரசு கொண்டு வந்துள்ள மற்றொரு மசோதா பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

உயர்த்தப்படுகிறதா ஐடி ஊழியர்களின் வேலை நேரம்? தகவல் தொழில்நுட்பத்துறை ஊழியர்களுக்கான வேலை நேரத்தை ஒரு நாளைக்கு 14 மணி நேரமாக உயர்த்த கர்நாடக அரசு திட்டமிட்டு வருகிறது. பணி நேரத்தை உயர்த்தும் வகையில் கர்நாடக கடைகள் மற்றும் வணிக ஸ்தாபன சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.

இது தொடர்பாக கருத்துகளை கேட்க கர்நாடக தொழில்துறை அமைச்சகம் சார்பில் ஆலோசனை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், கர்நாடக தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் எஸ். லாட், தொழிலாளர் துறை, தகவல் தொழில்நுட்பத்துறை, உயிரி தொழில்நுட்பத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். 

அதோடு, தொழில்துறையை சேர்ந்த பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர். சட்டத்திருத்தம் தொடர்பாக அவர்களிடம் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்திருத்தம் அமலுக்கு வரும்பட்சத்தில், ஐடி ஊழியர்களின் வேலை நேரம் வாரத்திற்கு 70 மணிநேரமாக உயர்த்தப்படும்.

தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு: நாட்டின் தகவல் தொழில்நுட்பத்துறையின் மையமாக உள்ள கர்நாடக தலைநகர் பெங்களூருவில் இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சித்தராமையா தலைமையிலான அரசு, இதுதொடர்பாக இன்னும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

ஆனால், இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள கர்நாடக மாநில ஐடி ஊழியர்கள் சங்கம், "14 மணி நேர வேலை நாளை இந்த சட்டத்திருத்தம் இயல்பாக்க முயற்சிக்கிறது. தற்போதுள்ள சட்டம், கூடுதல் நேரம் உட்பட ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 10 மணிநேரம் மட்டுமே வேலை செய்ய அனுமதிக்கிறது.

தற்போது கொண்டு வரப்பட்டுள்ள சட்டத்திருத்ததில் இது திரும்ப பெறப்பட உள்ளது. இது ஐடி நிறுவனங்களுக்கு தினசரி வேலை நேரத்தை காலவரையின்றி நீட்டிக்க உதவும். இந்த சட்டத்திருத்தம், கடந்த 10 ஆண்டுகளில் தொழிலாளர் வர்க்கத்தின் மீது தொடுக்கப்பட்ட மிகப்பெரிய தாக்குதல்.

தற்போது இருக்கும் மூன்று-ஷிப்ட் முறைக்கு பதிலாக இரண்டு-ஷிப்ட் முறைக்கு நிறுவனங்கள் செல்ல இது அனுமதிக்கும். இதனால், மூன்றில் ஒரு பங்கு பணியாளர்கள் தங்கள் வேலையில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்.

வேலை நேரத்தை உயர்த்துவதால் தொழிலாளர்கள் உடல் ரீதியாக பாதிக்கப்படுவார்கள் என்பதையே பல ஆய்வறிக்கைகள் குறிப்பிடுகின்றன" என குறிப்பிட்டுள்ளது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
ABP Premium

வீடியோ

ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
New Kia Seltos: லாஸ்ட் பால்ல சிக்ஸ்.. அப்டேடட், அப்க்ரேடட் கியா செல்டோஸ் அறிமுகம் - விலை எவ்ளோ?
New Kia Seltos: லாஸ்ட் பால்ல சிக்ஸ்.. அப்டேடட், அப்க்ரேடட் கியா செல்டோஸ் அறிமுகம் - விலை எவ்ளோ?
படிப்பிற்குப் பணம் ஒரு தடையல்ல! பிரதம மந்திரி 'யாசஸ்வி' கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இதுவே கடைசி சான்ஸ் !
படிப்பிற்குப் பணம் ஒரு தடையல்ல! பிரதம மந்திரி 'யாசஸ்வி' கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இதுவே கடைசி சான்ஸ் !
வாச்சாத்தி வன்கொடுமை: கதையை முடிக்கச் சொன்னதே செங்கோட்டையன்தான் - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பகீர்
வாச்சாத்தி வன்கொடுமை: கதையை முடிக்கச் சொன்னதே செங்கோட்டையன்தான் - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பகீர்
Car Sale: மாருதியை பின்னுக்கு தள்ளி டாடா முதலிடம்.. ஆனால் மொத்த லிஸ்டில் யாரு கெத்து? நவம்பர் கார் விற்பனை
Car Sale: மாருதியை பின்னுக்கு தள்ளி டாடா முதலிடம்.. ஆனால் மொத்த லிஸ்டில் யாரு கெத்து? நவம்பர் கார் விற்பனை
Embed widget