மேலும் அறிய

Karnataka Election Result: சித்தராமையாவா..? டி.கே.சிவக்குமாரா..? முதலமைச்சர் பதவிக்கு காங்கிரசின் ப்ளான் இதுதான்..!

தேர்தலில் வெற்றிபெற அரும்பாடுபட்ட காங்கிரஸ் மாநில தலைவர் டி. கே. சிவக்குமார் மற்றும் சித்தராமையா இடையே முதலமைச்சர் பதவியை கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது. 

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் பாஜக அரசுக்கு நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு காங்கிரஸ் கட்சி மரண அடி கொடுத்துள்ளது. இதனால், அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். கடந்த மே 10ஆம் தேதி, கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. 

அடுத்த முதலமைச்சர் யார்?

இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், 132 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளில், எந்த கட்சியும் பெற்றிராத மிக பெரிய வெற்றியை காங்கிரஸ் பதிவு செய்திருந்தாலும் அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

அடுத்த முதலமைச்சர் யார் என்ற விவகாரத்தில் உட்கட்சியிலே கடுமையான மோதல் நிலவி வருகிறது. குறிப்பாக தேர்தலில் வெற்றிபெற அரும்பாடுபட்ட காங்கிரஸ் மாநில தலைவர் டி. கே. சிவக்குமார் மற்றும் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. 

சித்தராமையா:

75 வயதான சித்தராமையா, 1983ஆம் ஆண்டு, சாமுண்டேஸ்வரி தொகுதியில் முதல் முறையாக வெற்றி பெற்றார். பின்னர், மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியில் முக்கிய பதவிகளை வகித்தார். 2013ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றியை தொடர்ந்து, முதலமைச்சரானார். 

இந்தி எதிர்ப்பு, மாநில சுயாட்சி, கர்நாடகத்திற்கு தனி கொடி என பாஜகவுக்கு எதிராக கடுமையாக அரசியல் செய்தவர். கடந்த 2018 சட்டப்பேரவை தேர்தலில், பாதாமி, சாமுண்டேஸ்வரி ஆகிய இரண்டு தொகுதிகளில் சித்தராமையா போட்டியிட்டார். அதில், அவர் பாதாமியில் மட்டுமே வெற்றி பெற்றார். இந்த தேர்தலில், தனது பாரம்பரியமான வருணா தொகுதியில் களம் கண்டு வெற்றிபெற்றுள்ளார்.

டி. கே. சிவகுமார்:

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கட்சியின் விசுவாசியாகவும், காந்தி குடும்பம் விசுவாசிகளுக்கு ஆதரவானவர் என்றும் அறியப்படுகிறார். அவர் முதலமைச்சராக பதவி உயர இதுவே சிறந்த வாய்ப்பாக கருதப்படுகிறது. கனகபுரா தொகுதியில் இருந்து 8 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த இவர், காங்கிரஸ் கட்சியினரிடையே பலமான ஆதரவை பெற்றுள்ளார். 

அவர் மாநிலத்தின் பணக்கார அரசியல்வாதிகளில் ஒருவராக பார்க்கப்படும் சூழலில்,  கட்சிக்கான நிதி திரட்டுவதிலும் இவரே முக்கிய பங்காற்றுகிறார். சிவக்குமார் மீது சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறையால் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  பணமோசடி மற்றும் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் சுமார் 104 நாட்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார். 

காங்கிரஸ் கட்சியின் ஃபார்முலா:

அடுத்த முதலமைச்சர் யார் என்பதில் தொடர் குழுப்பம் நீடித்து வரும் நிலையில், சித்தராமையாவை முதல் இரண்டரை ஆண்டுகளுக்கும் அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு டி.கே.சிவக்குமாரை முதலமைச்சராக்கவும் காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுதான், தன்னுடைய கடைசி தேர்தல் என சித்தராமையா அறிவித்துவிட்டதால் அவருக்கு முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படலாம் என காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

அதேபோல, பொதுத் தேர்தலின்போது, கர்நாடகம் மட்டும் இன்றி தென்னிந்தியா முழுவதும் தேர்தல் வியூகம் அமைக்க டி.கே.சிவக்குமார், காங்கிரஸ் கட்சிக்கு அதிகம் தேவைப்படுவதால், தேர்தலுக்கு பிறகு, இரண்டரை ஆண்டுகளுக்கு அவருக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

கேப் டிரைவருக்கு 100 ஆண்டு ஓட்ட தடை.. ரேபிடோவின் அநியாயம்.. கொதிக்கும் நெட்டிசன்கள் - நடந்தது என்ன?
கேப் டிரைவருக்கு 100 ஆண்டு ஓட்ட தடை.. ரேபிடோவின் அநியாயம்.. கொதிக்கும் நெட்டிசன்கள் - நடந்தது என்ன?
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
"எஸ்.ஐ மேலேயே கைய வச்சியா?" - பளார் விட்ட தஞ்சை இளைஞரின் கதி என்ன? என்னென்ன பிரிவுகளில் கேஸ்?
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
Embed widget