'கொரோனா வைரஸ் எல்லாம் இல்லை; கங்காசாகர் மேளாவிற்கு பக்தர்கள் வருவார்கள்': கபில் முனி கோயில் தலைமை பூசாரி
கொரோனா வைரஸ் எல்லாம் இல்லை எனவும் கங்காசாகர் மேளாவிற்கு பக்தர்கள் கண்டிப்பாக வருவார்கள் எனவும் கபில் முனி கோயில் தலைமை பூசாரி கியான் தாஸ் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா அச்சத்தை கிளப்பியுள்ள நிலையில், கொரோனா வைரஸ் எல்லாம் இல்லை எனவும் கங்காசாகர் மேளாவிற்கு பக்தர்கள் கண்டிப்பாக வருவார்கள் எனவும் கபில் முனி கோயில் தலைமை பூசாரி கியான் தாஸ் தெரிவித்துள்ளார்.
கொரோனாவின் பிடியிலிருந்து வெளியே வந்த உலகம் தற்போது ஒமிக்ரானின் பிடியில் சிக்க ஆரம்பித்திருக்கிறது. தென் ஆப்பிரிக்காவில் முதல்முறையாக கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸானது தற்போது 70க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்த சூழலில் ஒமிக்ரான் தொற்று டெல்டா வைரஸைவிட 70 மடங்கு அதிகம் பரவும் என ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒமிக்ரானை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒமிக்ரானில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 653ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே பிரதமர் மோடி, கொரோனா தயார்நிலை குறித்து ஆய்வு செய்வதற்கான உயர்நிலைக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். பெருந்தொற்றுக்கு எதிரான போர் இன்னும் நிறைவடையவில்லை என்பதால் அனைவரும் விழிப்புடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இந்தியாவின் மிகப்பெரிய திருவிழாவான கும்பமேளா பற்றி கேள்விப்பட்டிருப்போம். அதேபோன்றுதான் கங்காசாகர் மேளாவும். மேற்கு வங்காளத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் கபில் முனி கோயில் அமைந்துள்ளது. பொங்கல் பண்டிகையை போன்று வட மாநிலங்களில் மகர சங்கராந்தி விழா பிரபலம். மேற்கு வங்க மாநிலத்தில் இந்த விழாவையொட்டி, கங்கா சாகர் தீவுக்கு உலகத்தில் உள்ள ஏராளமான பகதர்கள் வருகை புரிந்து புனித நீராடுவது வழக்கம்.
இமயமலையில் உற்பத்தியாகும் கங்கை பல்வேறு மாநிலங்கள் வழியாகச் சென்று வங்கக் கடலில் சங்கமிக்கிறது. கங்கை நதி சங்கமிக்கும் முகத்துவாரம் கங்கா சாகர் என்றழைக்கப்படுகிறது. இந்த தீவுக்கு வந்து பக்தர்கள் புனித நீராடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக எந்த விழாக்களும் இங்கு நடைபெறவில்லை.
இந்நிலையில் அங்கு இருக்கும் கபில் முனி கோயில் தலைமை பூசாரியாக இருக்கும் கியான் தாஸ், கொரோனா வைரஸ் எல்லாம் இல்லை எனவும் கங்காசாகர் மேளாவிற்கு பக்தர்கள் கண்டிப்பாக வருவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “கொரோனா வைரஸ் எல்லாம் இல்லை. இந்த மத தலத்திற்கு வருவதை மக்கள் நிறுத்திக்கொள்ள மாட்டார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தலால் எந்த விழாக்களும் இங்கு நடைபெறவில்லை. கங்கா சாகர் மேளாவிற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த முறை கங்கா சாகர் மேளாவிற்கு பக்தர்கள் கண்டிப்பாக வருவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
and tablets