மேலும் அறிய

Rajat Sharma : காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக பத்திரிகையாளர் ரஜத் சர்மா வழக்கு - டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பு என்ன?

Journalist Rajat Sharma: மூத்த பத்திரிகையாளர் ரஜத் சர்மா காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக, தொடர்ந்த அவதூறு வழக்கின் தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Journalist Rajat Sharma: காங்கிரஸ் தலைவர்கள் ஜெயராம் ரமேஷ் உள்ளிட்டோர் தன் மீது அவதூறு பரப்புவதாக, மூத்த பத்திரிகையாளர் ரஜத் சர்மா டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக வழக்கு:

மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் நடைபெற்ற நேரலை நிகழ்ச்சியின் போது, முத்த பத்திரிகையாளரான ரஜத் சர்மா தவறான வார்த்தைகளை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் ராகினி நாயக், ஜெய்ராம் ரமேஷ் மற்றும் பவன் கேரா ஆகியோர் குற்றம்சாட்டி இருந்தனர். இந்நிலையில், குறிப்பிட்ட தலைவர்கள் தனக்கு எதிராக அவதூறு பரப்புவதாக, டெல்லி உயர்நிதிமன்றத்தில் ரஜத் சர்மா அவதூறு வழக்கு தொடர்ந்தார். அதில், காங்கிரஸ் தலைவர்கள் தன் மீது குற்றச்சாட்டுகளை கூறுவதை தடுக்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து இருந்தார்.

ரஜத் சர்மா கோரிக்கை:

தன் மீது அவதூறு பரப்பும் வகையில் உள்ள வீடியோக்களை டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து உடனடியாக நீக்கவும் இடைக்கால உத்தரவில் அறிவுறுத்த வேண்டும் என, ரஜத் சர்மா கோரிக்கை விடுத்தார். இந்நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் தன் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை தடுக்கக் கோரிய, அவரது இடைக்கால மனு மீதான உத்தரவை நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா அமர்வு வெள்ளிக்கிழமை ஒத்திவைத்தது. லோக்சபா தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்ட ஜூன் 4 அன்று சர்மா தன்னை தொலைக்காட்சியில் தவறாகப் பேசியதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ராகினி நாயக் குற்றம் சாட்டினார். ஜெய்ராம் ரமேஷ் மற்றும் கேரா X இல் இந்த பிரச்சினையில் கருத்துகளை தெரிவித்திருந்தனர்.

வழக்கு தொடர்பான வாதம்:

வழக்கு தொடர்பான விசாரணையின் போது, ரஜத் சர்மா சார்பில் மூத்த வழக்கறிஞர் மணீந்தர் சிங் ஆஜராகி, மூத்த பத்திரிகையாளர் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தவில்லை என்று தெரிவித்தார். தொடர்ந்து, ”சர்மா மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை மற்றும் உருவாக்கப்பட்டவை. இந்த நிகழ்ச்சி ஜூன் 4 ஆம் தேதி நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. அப்போது காங்கிரஸ் தலைவர்களால் எந்தப் பிரச்சினையும் எழுப்பப்படவில்லை. ஆனால் ஆறு நாட்களுக்குப் பிறகு, இந்த விவகாரம் முன்னுக்குக் கொண்டுவரப்பட்டது. ட்வீட்கள் மற்றும் அவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் தனது கட்சிக்காரரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக உள்ளன” என மணீந்தர் சிங் வாதிட்டார்.

நேரலையில் நடந்தது என்ன?

ஜூன் 11 அன்று, காங்கிரஸ் கட்சி தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ரஜத் சர்மா பதிலளித்தார். இதுதொடர்பான அவரது அறிக்கையில், ” காங்கிரஸ் முன்வைக்கும் இந்த குற்றச்சாட்டுகள் பத்திரிகையாளர் என்ற தனது பெயரையும் நற்பெயரையும் கொச்சைப்படுத்தும் சதி” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
"பதஞ்சலி உணவு பூங்கா.. விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்" தேவேந்திர பட்னாவிஸ் புகழாரம்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EX MLA Kathiravan: ”EX MLA கிட்டயே கட்டணமா?” போலீசாருடன் வாக்குவாதம் காரை குறுக்கே நிறுத்தி சண்டைPrashant Kishor On Vijay: விஜய்க்கு 15% - 20% வாக்கு? TWIST கொடுத்த PK! குழப்பத்தில் தவெகPetrol Bunk Scam: ”நீங்க போடுறது பெட்ரோல்லா” வெளுத்துவாங்கிய டாக்டர் BUNK-ல் முற்றிய தகறாறுலேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
"பதஞ்சலி உணவு பூங்கா.. விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்" தேவேந்திர பட்னாவிஸ் புகழாரம்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
அப்பா இந்து.. அம்மா முஸ்லிம்..கிறஸ்துமஸில் பிறந்த பிரபலம்! யாரு அந்த ஹீரோயின்?
அப்பா இந்து.. அம்மா முஸ்லிம்..கிறஸ்துமஸில் பிறந்த பிரபலம்! யாரு அந்த ஹீரோயின்?
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
Pakistan Train Hijack: ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
Embed widget