மேலும் அறிய

Watch Video: புர்கா அணிந்து சாலையில் சென்றவர் திடீரென வெடிகுண்டு வீச்சு.. ஜம்மு, காஷ்மீரில் அதிர்ச்சி..

புர்கா அணிந்தவர் சிஆர்பிஎஃப் முகாமில் பாதுகாப்புப் பணியாளர்களை நோக்கி கையெறி குண்டுகளை வீசினார்.

ஜம்மு-காஷ்மீரில் சிஆர்பிஎஃப் முகாமில் புர்கா அணிந்த ஒருவர் வெடிகுண்டு வீசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சோபூர் நகரில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சிஆர்பிஎஃப்) பாதுகாப்பு முகாம் மீது பர்தா அணிந்த ஒருவர் நேற்று வெடிகுண்டு வீசுவது கேமராவில் சிக்கியது. அந்த வீடியோவில், அந்த நபர் நடுரோட்டில் நின்று தனது பையில் இருந்த வெடிகுண்டை எடுத்து அவசர அவசரமாக சிஆர்பிஎஃப் பதுங்கு குழியில் வீசுவதைக் காணலாம்.

அப்போது, சாலையில் ஒன்றிரண்டு பேரும், இரு சக்கர வாகனங்களும் சென்று கொண்டிருந்தன. வெடிகுண்டை வீசிய உடனேயே, அவர் அந்த இடத்தை விட்டு ஓடுவதைக் காணலாம். இந்த சம்பவத்தின் வீடியோவை ANI செய்தி நிறுவனம் பகிர்ந்துள்ளது.  

புர்கா அணிந்தவர் சிஆர்பிஎஃப் முகாமில் பாதுகாப்புப் பணியாளர்களை நோக்கி கையெறி குண்டுகளை வீசினார். இந்த தாக்குதலில் போலீசார் ஒருவர் மற்றும்  சிஆர்பிஎஃப் வீரர் காயமடைந்தனர்.

அப்பகுதி உடனடியாக சுற்றி வளைக்கப்பட்டு, தாக்குதல் நடத்திய நபரை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. தாக்குதல் நடத்தியவரை அடையாளம் காண பாதுகாப்பு அதிகாரிகள் சிசிடிவி காட்சிகளை ஸ்கேன் செய்தனர். தாக்குதல் நடத்தியவரின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை.

தாக்குதல் நடத்திய நபரை கண்டுபிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

“சோபூரில் உள்ள சிஆர்பிஎஃப் பதுங்கு குழி மீது நேற்று வெடிகுண்டு வீசிய பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் விரைவில் கைது செய்யப்படுவார்” என்று காஷ்மீர் ஐஜிபி விஜய் குமார் கூறினார்.

கடந்த 10 நாட்களில் பள்ளத்தாக்கில் உள்ள சிஆர்பிஎஃப் முகாம் மீது கையெறி குண்டு வீசப்பட்ட இரண்டாவது சம்பவம் இதுவாகும். முன்னதாக மார்ச் 19 ஆம் தேதி சிஆர்பிஎஃப் பாபாபோரா முகாம் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசினர. அதில் வீரர் ஒருவர் காயமடைந்தார். பயங்கரவாதக் குற்றச் செயலில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
Nalla Neram Today Sep 30: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Rasi Palan Today, Sept 30:  தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்:  உங்கள் ராசிக்கான பலன்
RasiPalan: தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்: உங்கள் ராசிக்கான பலன்
Vanniarasu:
Vanniarasu: "திராவிட மாடல் அரசு என அமைச்சரவை மாற்றத்தின் மூலம் நிரூபித்துள்ளனர்" - வன்னியரசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
Nalla Neram Today Sep 30: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Rasi Palan Today, Sept 30:  தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்:  உங்கள் ராசிக்கான பலன்
RasiPalan: தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்: உங்கள் ராசிக்கான பலன்
Vanniarasu:
Vanniarasu: "திராவிட மாடல் அரசு என அமைச்சரவை மாற்றத்தின் மூலம் நிரூபித்துள்ளனர்" - வன்னியரசு
தொடரும் கட்டப்பஞ்சாயத்துகள் ; ஊரை விட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம் - தாக்குதலுக்கு ஆளான அவலம்...!  
மயிலாடுதுறை அருகே ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து விட்டை சுற்றி வேலி அமைத்த அவலம்.
ஒரே ஒரு போன் கால், அரசு மருத்துவமனைக்கு விரைந்த ஆட்சியர்; இதுதான் விஷயம்..!
வலியால் துடித்த கர்ப்பிணி, தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்து ஆட்சியர் எடுத்த நடவடிக்கை.
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
Embed widget