மேலும் அறிய

Tiruvannamalai Hijab: தேர்வு மையத்தில் ஹிஜாப் கழட்ட சொன்ன விவகாரம்.. மனு கொடுத்த பெண்.. கலெக்டர் சொன்னது என்ன..?

ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதி மறுத்த தனியார் பள்ளி மீதும் தாளாளர் மற்றும் முதல்வர் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியரிடம் மனு அளித்தனர்

திருவண்ணாமலை அடுத்த சோமாசிபாடி கிராமத்தில் அமைந்துள்ளது தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. இங்கு கடந்த ஞாயிறுக்கிழமை தமிழ்நாடு தக்ஷின் பாரத் ஹிந்தி பிரச்சார் சபா சார்பில் இந்தி தேர்வுகள் நடத்தப்பட்டது. இந்த தேர்வை எழுதுவதற்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து சுமார் 540 மாணவ- மாணவிகள் இந்த இந்தி தேர்வினை எழுத வந்திருந்தனர்.

இந்த தேர்விற்கு காலை திருவண்ணாமலை அடுத்த தனியார் பள்ளியில் அரபிக் ஆசிரியையாக பணிபுரியும் ஷபானா தேர்வு எழுத வந்துள்ளார். அனுமதி கடிதத்துடன் தேர்வு அறைக்குள் சென்ற ஷபானாவிற்கு கேள்வித்தாள் கொடுக்கப்பட்டு 10 நிமிடங்கள் தேர்வு எழுதிய ஷபானாவை தேர்வு அறை மேற்பார்வையாளர் ஹிஜாப் அணிந்து கொண்டு தேர்வை எழுதக்கூடாது என தெரிவித்துள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத ஷபானா, அதிர்ச்சியடைந்த நிலையில் ஹிஜாப் அணிந்து கொண்டுதான் தேர்வை எழுதுவேன் என்று தெரிவித்துள்ளார்.

 


Tiruvannamalai Hijab: தேர்வு மையத்தில் ஹிஜாப் கழட்ட சொன்ன விவகாரம்.. மனு கொடுத்த பெண்.. கலெக்டர் சொன்னது என்ன..?

 

அப்போது இருவருக்கும் தேர்வு அறையிலுள்ளே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து பள்ளி நிர்வாகம் ஷபானாவிடம் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதுவேன் என்று நீங்கள் சொன்னால் வெளியே சென்று விடுங்கள் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி ஷபானா ஹிஜாப் இஸ்லாமியர்களின் ஓர் அங்கம் என்றும், ஹிஜாப் அணிந்து கொண்டுதான் தேர்வை எழுதுவேன் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படாத ஷபானா ஹிஜாப் அணியாமல் தேர்வு எழுத மாட்டேன் என பள்ளி நிர்வாகத்திடம் கடிதம் ஒன்றை எழுதி கையொப்பம் இட்டு உள்ளார். இதனை அறிந்த எஸ்டிபிஐ மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை நகர டிஎஸ்பி குணசேகரன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவியிடம் பேச்சுவார்த்தை நடத்தி பள்ளி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

 

 


Tiruvannamalai Hijab: தேர்வு மையத்தில் ஹிஜாப் கழட்ட சொன்ன விவகாரம்.. மனு கொடுத்த பெண்.. கலெக்டர் சொன்னது என்ன..?

 

ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத வந்த மாணவியை தேர்வு எழுத விடாமல் மிரட்டும் பாணியில் பேசிய சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதனைத் தொடர்ந்து நேற்று மதியம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த ஷபானா மற்றும் அவரது உறவினர்கள் எஸ்டிபிஐ கட்சி, தமமுக கட்சியினர் என அனைவரும் ஒன்று கூடி ஆட்சியரிடம் பள்ளியின் தாளாளர் மீதும் பிரின்ஸ்பல் மீதும் ஹிந்தி பிரச்சார சபா செக்ரட்டரி மீதும் தக்க நடவடிக்கை எடுக்குமாறும் சம்பந்தப்பட்ட அண்ணாமலையார் மெட்ரிக் பள்ளியில் இதற்குப் பிறகு தேர்வு மையம் அமைக்க அனுமதி வழங்க கூடாது என புகார் மனுவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் முருகேஷ் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூலமாக உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததின் பெயரில் ஆட்சியரிடம் இருந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து ABP நாடு சார்பில் பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டபோது : ”தக்ஷின் பாரத் ஹிந்தி பிரச்சார் சபா இம்முறை வாய்மொழி உத்தரவாக ஹிஜாப் அணிய கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதே போன்று கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வின் பொழுது அதிக அளவு, மாணவர்கள் மூட்டை மூட்டையாக பிட் பேப்பர்கள் கொண்டு வந்திருந்தார்கள். இதை தடுப்பதற்காகவே, எங்கள் தரப்பிலிருந்து சற்று கடுமையாக நடந்து கொண்டோம்.

' தக்ஷின் பாரத் ஹிந்தி பிரச்சார் சபா ' சார்பில் கூட எங்களுடைய நடவடிக்கைக்கு பாராட்டுக்கள் தெரிவித்திருந்தனர் .

இருந்தும் அந்தப் பெண்மணி இடம் நாங்கள், கூடுதல் நேரம் ஒதுக்கி தருகிறோம். இரண்டு தாள் பேப்பர்களையும் எழுதி விட்டுச் செல்லுங்கள் என கூறினோம் ஆனால் அவர்கள் மறுத்து விட்டார்கள்.” என தெரிவித்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Watch Video: இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
Dhanush :  நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்.. தனுஷ் அதிரடி..
Dhanush : நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்.. தனுஷ் அதிரடி..
Lok Sabha Election 2024 LIVE: மோடியை விவாதத்துக்கு அழைத்த ராகுல்.. குறுக்கில் வந்த பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா
Lok Sabha Election 2024 LIVE: மோடியை விவாதத்துக்கு அழைத்த ராகுல்.. குறுக்கில் வந்த பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா
Savukku Sankar: சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Ramdoss : மோடியின் சர்ச்சை பேச்சு எஸ்கேப்பான ராமதாஸ் முஸ்லீம் குறித்து பேசியது சரியா?Pondichery : பாண்டிச்சேரியில் 1 நாள்...150 ரூபாய் PACKAGE இத்தனை இடங்களா?Felix Gerald Arrest :  கணவரை தேடிய மனைவி போலீஸ் வேனில் Felix திடீர் திருப்பம்KPY Bala :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Watch Video: இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
Dhanush :  நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்.. தனுஷ் அதிரடி..
Dhanush : நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்.. தனுஷ் அதிரடி..
Lok Sabha Election 2024 LIVE: மோடியை விவாதத்துக்கு அழைத்த ராகுல்.. குறுக்கில் வந்த பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா
Lok Sabha Election 2024 LIVE: மோடியை விவாதத்துக்கு அழைத்த ராகுல்.. குறுக்கில் வந்த பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா
Savukku Sankar: சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
CBSE Class 10th Result: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியீடு; 93.6% தேர்ச்சி- காண்பது எப்படி?
CBSE Class 10th Result: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியீடு; 93.6% தேர்ச்சி- காண்பது எப்படி?
Box Office Prediction : இந்த ஆண்டு ரூ.100 கோடி வசூலை எடுக்கப்போகும் முதல் தமிழ் படம் எது?
இந்த ஆண்டு ரூ.100 கோடி வசூலை எடுக்கப்போகும் முதல் தமிழ் படம் எது?
Andhra Assembly Election: பளார்! வரிசையில் நிற்காத எம்.எல்.ஏ.வுக்கு கன்னத்திலே அறை விட்ட வாக்காளர் - நீங்களே பாருங்க
Andhra Assembly Election: பளார்! வரிசையில் நிற்காத எம்.எல்.ஏ.வுக்கு கன்னத்திலே அறை விட்ட வாக்காளர் - நீங்களே பாருங்க
North Korea Rules: ரெட் லிப்ஸ்டிக், நீல கலர் ஜீன்ஸ் போட்டால் வழக்கு - வடகொரியாவில் எதற்கெல்லாம் தடை தெரியுமா?
ரெட் லிப்ஸ்டிக், நீல கலர் ஜீன்ஸ் போட்டால் வழக்கு - வடகொரியாவில் எதற்கெல்லாம் தடை தெரியுமா?
Embed widget