மேலும் அறிய

கேரளா: அசுத்தமான நீர், உணவால் பரவும் புதிய வகை தொற்று - அச்சத்தில் மக்கள்

கேரள மாநிலத்தில் புதிய வகை தொற்று உருவாகியுள்ளது. இந்த வகை தொற்று வேகமாகப் பரவி வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கேரள மாநிலத்தில் புதிய வகை தொற்று உருவாகியுள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது. ஏற்கனவே, கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் இன்னும் முழுமையாக முடிவுக்கு வராத நிலையில், தற்போது புதிய வகை தொற்றை கேரள மக்கள் எதிர்கொண்டுள்ளனர்.

கேரளாவின் கோழிகோட்டில் மேலும் இருவருக்கு ஷிகெல்லா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. 
அசுத்தமான நீர் மற்றும் உணவால் பரவும் ஷிகெல்லா தொற்று தொடர்ந்து கேரளாவை அச்சுறுத்தி வருகிறது. 

காரச்சேரி பகுதியை சேர்ந்த 9 வயது சிறுவனுக்கு அண்மையில் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து சிறுவனுடன் தொடர்பில் இருந்த பலருக்கும் சோதனை செய்யப்பட்டது. இதில் மேலும் இரண்டு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்று பரவி வருவதால், அங்கு நோய்த் தடுப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தி உள்ளது.

கேரள மாநிலத்தில் வெஸ்ட் நைல் வைரஸ் கடந்த மே மாதம் வேகமாகப் பரவியது. 2019ஆம் ஆண்டில் மலப்புரம் மாவட்டத்தில் ஆறு வயது சிறுவன் முதன்முதலாக வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தான். இந்த வைரஸ் முதன்முதலாக 2006ஆம் ஆண்டில் ஆழப்புழாவில் பதிவானது. பின்னர், 2011ஆம் ஆண்டில் எர்ணாகுளத்தில் பதிவானது.

இதைத் தொடர்ந்து, கேரளாவில் விழிஞ்சம் பகுதியில் 2 பேருக்கு நோரோ வைரஸ் பாதிப்பு கடந்த ஜூன் மாதம் உறுதி செய்யப்பட்டது. நோரோ வைரஸ் காரணமாக குழந்தைகளும் பாதிக்கப்பட்டனர்.
நிஃபா, கொரோனா, ஜிகா, தக்காளிக் காய்ச்சல் என கேரளாவில் அடுத்தடுத்து வைரஸ் தாக்குதல்கள் ஏற்பட்டு வந்தன.

இந்நிலையில், ஷிகெல்லா எனும் புதிய வகை தொற்றின் தாக்குதல் ஏற்பட்டு வருகிறது. ஷிகெல்லா, என்டோரோபாக்டர் பாக்டீரியா வகையை சேர்ந்தது. இது, மனிதர்களின் குடலில் வசிக்கக் கூடியது. குடலில் பாதிப்பை ஏற்படுத்துவதால், வயிற்றுப்போக்கு,வயிற்று வலி மற்றும் காய்ச்சல் போன்றவை ஏற்படக்கூடும்.

இந்த பாக்டீரியா எளிதில் பரவக்கூடியது என்றும், சிறிய அளவிலான பாக்டீரியா எண்ணிக்கை இருந்தாலே உடல்நலக்குறைவு ஏற்படும் என அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) கூறுகிறது. இது உணவு மற்றும் நீரினால் பரவும் நோய்த்தொற்று ஆகும். சரியாக கழுவாத பழங்கள், காய்கறிகள் போன்ற அசுத்தமான உணவை உட்கொள்ளும் போது எளிதில் பரவக்கூடியது.

எப்படி தற்காத்துக் கொள்வது?

உதாரணமாக, உணவைத் தயாரிக்கும் ஒருவர் கழிப்பறை சென்ற பின்னர் கைகளை சரியாக கழுவாத பட்சத்தில், நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட உணவு மற்றும் தண்ணீர் வழியாக அது மற்றவர்களுக்கும் பரவ வாய்ப்புண்டு. அசுத்தமான நீரில் நீந்தினாலும் அல்லது குளித்தாலும் தொற்று ஏற்படலாம்.

உணவு உண்பதற்கு முன்னும் பின்னும் கைகளை நன்றாகக் கழுவ வேண்டும். கழிவறை சென்றுவிட்டு வந்த பிறகு, கைகளை கழுவ வேண்டும். நீங்கள் குடிக்கும் தண்ணீர் சுத்தமாகவும், பழங்கள் மற்றும் காய்கறிகள் புதியதாகவும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பால், கோழி மற்றும் மீன் போன்ற பொருட்கள் எளிதில் பாதிக்கப்படலாம். அவற்றை சரியான வெப்பநிலையில் வைத்து சமைக்க வேண்டும் என டாக்டர் சிங் கூறினார்.

இவ்வாறாக ஷிபெல்லா தொற்று பாதிப்பு ஏற்படாமல் நம்மை நாம் காப்பற்றிக் கொள்ள முடியும்.

 

தலைப்பு செய்திகள்

இந்தியா கூட்டணி கூட்டத்திலேயே காங்கிரஸை பொளந்த திருமாவளவன்; விழிபிதுங்கிய ராகுல் - நடந்தது என்ன?
இந்தியா கூட்டணி கூட்டத்திலேயே காங்கிரஸை பொளந்த திருமாவளவன்; விழிபிதுங்கிய ராகுல் - நடந்தது என்ன?
Train Ticket Booking: மாற்றம் பெறும் டிக்கெட் முன்பதிவு.. ரயில் பயணிகளுக்கு இனிப்பான செய்தி!
Train Ticket Booking: மாற்றம் பெறும் டிக்கெட் முன்பதிவு.. ரயில் பயணிகளுக்கு இனிப்பான செய்தி!
Top 10 News Headlines: வட இந்தியாவில் சூரிய வெடிப்பு.. யூட்யூபர் மாரிதாஸ் கைது.. 11 மணி வரை நடந்தது என்ன?
Top 10 News Headlines: வட இந்தியாவில் சூரிய வெடிப்பு.. யூட்யூபர் மாரிதாஸ் கைது.. 11 மணி வரை நடந்தது என்ன?
Musk on India Birth Rate: இந்தியாவின் பிறப்பு விகிதம் குறைவு.! 10 ஆண்டுகளில் வரலாறு காணாத சரிவு; எலான் மஸ்க் கவலை
இந்தியாவின் பிறப்பு விகிதம் குறைவு.! 10 ஆண்டுகளில் வரலாறு காணாத சரிவு; எலான் மஸ்க் கவலை

வீடியோ

Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
Masoud Pezeshkian: 'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
Minister Nirmal Kumar: மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
Trump Warns Israel Iran: “இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
“இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூன் 9-ம் தேதி(09.06.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? பாருங்க
சென்னை மக்களே.! ஜூன் 9-ம் தேதி(09.06.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? பாருங்க
Seeman on Maridhas Arrest : ’அதிகார திமிரின் உச்சம்' மாரிதாஸூக்காக பொங்கி எழுந்த சீமான்..!
’அதிகார திமிரின் உச்சம் – அரசியல் பழிவாங்கல்’ மாரிதாஸூக்காக பொங்கி எழுந்த சீமான்..!
Anbumani: திருவான்மியூர்- உத்தண்டி உயர்மட்ட பால ஒப்பந்தம் ரத்து? சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுக- அன்புமணி
Anbumani: திருவான்மியூர்- உத்தண்டி உயர்மட்ட பால ஒப்பந்தம் ரத்து? சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுக- அன்புமணி
Embed widget