மேலும் அறிய

உலக சுகாதார மையத்தின் நம்பர்கள் நம்பகத்தன்மையற்றவை: கொரோனா இறப்பு குறித்து இந்தியா

நாட்டில் கொரோனா வைரஸ் தொடர்பான இறப்புகள் குறித்து உலக சுகாதார அமைப்பு (WHO) பகிர்ந்துள்ள புள்ளிவிவரங்களுக்கு இந்தியா இன்று தனது கடுமையான ஆட்சேபத்தைப் பதிவு செய்துள்ளது.


நாட்டில் கொரோனா வைரஸ் தொடர்பான இறப்புகள் குறித்து உலக சுகாதார அமைப்பு (WHO) பகிர்ந்துள்ள புள்ளிவிவரங்களுக்கு இந்தியா இன்று தனது கடுமையான ஆட்சேபத்தைப் பதிவு செய்துள்ளது. ஜனவரி 1, 2020 மற்றும் டிசம்பர் 31, 2021க்கு இடையில் இந்தியாவில் 4.7 மில்லியன் எண்ணிக்கையில் அதிகமான கோவிட் இறப்புகள் பதிவாகியுள்ளன என்று உலக சுகாதாரம் தெரிவித்திருந்தது. இந்த கொரோனா உலகளவில் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட உயிரிழப்புகளை விட மூன்று மடங்கு அதிகமான உயிர்களைக் கொன்றது. அதாவது மொத்தம் சுமார் 14.9 மில்லியன் உயிர்ப்பலிகள்.

உலக சுகாதார மையம் தனது அறிக்கையை வெளியிட்ட சில காலத்திலேயே,மத்திய அரசு ஒரு அறிக்கையை வெளியிட்டது அதில், அதிகப்படியான இறப்பு மதிப்பீட்டைக் கணக்கிடுவதற்கான கணித மாதிரியின் உண்மையான தரவுகளின் இருப்பைக் கருத்தில் கொண்டு அதைப் பயன்படுத்துவதற்கு தனது ஆட்சேபத்தை பதிவு செய்துள்ளது. மேலும் பயன்படுத்தப்பட்ட மாதிரிகளின் செல்லுபடியாகும் தன்மை மற்றும் உறுதித் தன்மை மற்றும் தரவு சேகரிப்பு முறை ஆகியவை கேள்விக்குரியவையாக உள்ளது என்று அது கூறியுள்ளது.

அந்த அறிக்கையில் இந்த மாடலிங் பயிற்சியின் செயல்முறை, வழிமுறை மற்றும் விளைவுகளுக்கு இந்தியா ஆட்சேபனை தெரிவித்த போதிலும், உலக சுகாதார மையம் இந்தியாவின் கவலைகளை போதுமான அளவு கவனிக்காமல் அதிகப்படியான இறப்பு மதிப்பீடுகளை வெளியிட்டது. இந்தியாவின் ரெஜிஸ்ட்ரார் ஜெனரல் (RGI) மூலம் சிவில் பதிவு அமைப்பு (CRS) இந்த அறிக்கையை வெளியிட்டது. மேலும் இந்தியாவிற்கான அதிகப்படியான இறப்பு எண்ணிக்கையைக் கணிக்க கணித மாதிரிகள் பயன்படுத்தப்படக்கூடாது. "இந்தியாவில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவு மிகவும் வலுவானது மற்றும் பல தசாப்தங்கள் பழமையான சட்டப்பூர்வ சட்ட கட்டமைப்பால் அது நிர்வகிக்கப்படுகிறது அது கேள்விக்குறியவை அல்ல" என்று சிவில் பதிவு அமைப்பு அந்த அறிக்கையில் கூறியுள்ளது.  இந்தியாவில் மே 3 ஆம் தேதி நிலவரப்படி அதிகாரப்பூர்வமான கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்தோர் எண்ணிக்கை 5,22,676 ஆகும்.

தனது உறுப்பு நாடுகளை அடுக்கு I மற்றும் II என வகைகளாகப் பிரிக்க உலக சுகாதார மையம் பயன்படுத்தும் அளவுகோல்களில் உள்ள முரண்பாடுகள் மற்றும் இந்தியாவை அந்த அடுக்குகளில் இரண்டாவது வகைக்குள் வைப்பதற்கான காரணங்களை அது சுட்டிக்காட்டுவதாக அரசு கூறியுள்ளது.

திறம்பட மற்றும் உறுதியான சட்ட அமைப்பு மூலம் சேகரிக்கப்பட்ட இறப்புத் தரவுகளின் துல்லியத்தன்மையைக் கருத்தில் கொண்டு, இந்தியா இரண்டாம் நிலை நாடுகளில் இடம்பெறத் தகுதியற்றது என்ற காரணத்தை இந்தியா முன்வைத்துள்ளது. உலக சுகாதார மையம் இன்றுவரை இந்தியாவின் இந்த  வாதத்திற்கு பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

ஒரே இளைஞரைத் திருமணம் செய்துகொண்ட 3 சகோதரிகள்! வைரலாகும் விசித்திரச் சம்பவம்!
ஒரே இளைஞரைத் திருமணம் செய்துகொண்ட 3 சகோதரிகள்! வைரலாகும் விசித்திரச் சம்பவம்!
SC On CJP: மாணவர்கள் மீது தாக்குதல்..! உச்சநீதிமன்றத்தில் நடந்த வாதம் - தலைமை நீதிபதியின் கருத்து என்ன?
மாணவர்கள் மீது தாக்குதல்..! உச்சநீதிமன்றத்தில் நடந்த வாதம் - தலைமை நீதிபதியின் கருத்து என்ன?
போலீஸ் வாகனத்தை வழிமறித்த இளம்பெண் யார்? நாடு முழுவதும் பேசப்படும் ரியா அஹிரின் பின்னணி!
போலீஸ் வாகனத்தை வழிமறித்த இளம்பெண் யார்? நாடு முழுவதும் பேசப்படும் ரியா அஹிரின் பின்னணி!
ரயில்வேயில் புதிய புரட்சி: TTE-க்களுக்கு பாடி கேமரா - முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி!
ரயில்வேயில் புதிய புரட்சி: TTE-க்களுக்கு பாடி கேமரா - முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
கோயில்களில் கொடிமரம் அமைக்கனுமா? அறநிலையத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்னென்ன?
கோயில்களில் கொடிமரம் அமைக்கனுமா? அறநிலையத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்னென்ன?
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
Trump Tariff on India: போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
Samsung Silicon-Carbon Battery: சாம்சங் பிரியர்களுக்கு குட் நியூஸ்.! சிலிகான்-கார்பன் பேட்டரியுடன் வரும் கேலக்ஸி Z சீரிஸ்; என்ன சிறப்பு.?
சாம்சங் பிரியர்களுக்கு குட் நியூஸ்.! சிலிகான்-கார்பன் பேட்டரியுடன் வரும் கேலக்ஸி Z சீரிஸ்; என்ன சிறப்பு.?
iPhone 17 Price Hike: மக்களே.! ஐபோன் 17 வாங்குற ஐடியா இருந்தா உடனே போங்க; ஆகஸ்ட்ல எக்கச்சக்கமா விலை ஏறப்போகுது.!
மக்களே.! ஐபோன் 17 வாங்குற ஐடியா இருந்தா உடனே போங்க; ஆகஸ்ட்ல எக்கச்சக்கமா விலை ஏறப்போகுது.!
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
Embed widget