மேலும் அறிய

உடலும் உயிரும் நாட்டுக்கே.. இந்தியாவிற்காக வீரமரணம் அடைந்த இந்திய வீரர்கள் இத்தனை ஆயிரமா?

India Pakistan Tension: இந்தியா இதுவரை பங்கேற்ற போர்களில் மட்டும் இதுவரை 13 ஆயிரத்து 140 வீரர்கள் தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர்.

India Pakistan Tension: இந்தியா - பாகிஸ்தான் மோதல் இரு நாட்டு மக்கள் மத்தியிலும் பெரும் வேதனையையும், அச்சத்தையும் உண்டாக்கியுள்ளது. தற்போது இந்த தாக்குதல் தற்காலிகமாக நடத்தப்பட்டிருந்தாலும் இந்தியா - பாகிஸ்தான் மோதல் என்பது இன்று, நேற்றல்ல பாகிஸ்தான் நாடு உருவாகியது முதலே தொடங்கிவிட்டது. 

தீவிரவாதிகள் தாக்குதல், எல்லை பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தியாவிற்கும் - பாகிஸ்தானுக்கும் சுதந்திரம் அடைந்தது முதலே மோதல் நடைபெற்று வந்துள்ளது. அப்போது எல்லாம் இந்தியாவிற்காக இந்திய ராணுவ வீரர்கள் தங்கள் உயிர்களை தியானம் செய்து இந்திய நாட்டை காப்பாற்றியுள்ளனர். பாகிஸ்தானுடனான மோதல் மட்டுமின்றி சீனாவுடனான போரின்போதும் இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இந்திய - பாகிஸ்தான் மோதலில் இதுவரை தாங்கள் உயிரை தியாகம் செய்த இந்திய வீரர்களின் எண்ணிக்கையை கீழே காணலாம். 

ஜம்மு காஷ்மீர் ஆபரேஷன் :

1947 - 48ம் ஆண்டுகளில் நடந்த ஜம்மு காஷ்மீர் ஆபரேஷனில் 1104 இந்திய வீரர்கள் தங்கள் உயிரை தியாகம் செய்தனர். அந்த மோதலில் 3 ஆயிரத்து 152 இந்திய வீரர்கள் காயம் அடைந்தனர்.

இந்தியா - சீனா போர்:

1962ம் ஆண்டு இந்தியா - சீனா போரின்போது 3 ஆயிரத்து 250 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அந்த போரில் 548 இந்திய வீரர்கள் காயம் அடைந்தனர்.

இந்தியா - பாகிஸ்தான் போர்: 

1965ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்த போரில் 3 ஆயிரத்து 264 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.  அந்த போரில் 8 ஆயிரத்து 623 இந்திய வீரர்கள் காயம் அடைந்தனர். 

இந்தியா - பாகிஸ்தான் போர்:

பாகிஸ்தானுடன் 1971ம் ஆண்டு மீண்டும் நடந்த போரில் இந்தியாவிற்காக 3 ஆயிரத்து 843 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அந்த போரில் 9 ஆயிரத்து 851 இந்திய வீரர்கள் காயம் அடைந்தனர். 

ஆபரேஷன் பவன்:

இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு நடத்திய போரில் இலங்கைக்குச் சென்ற இந்திய அமைதிப்படையில் 1157 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 3 ஆயிரத்து 9 வீரர்கள் காயம் அடைந்தனர். 

கார்கில்:

1999ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த கார்கில் போரில் 524 இந்திய வீரர்கள் உயிரைத் தியாகம் செய்தனர். மொத்தம் ஆயிரத்து 363 வீரர்கள் காயம் அடைந்தனர். 

நாடு சுதந்திரம் பெற்றது முதல் இந்திய ராணுவம் நாட்டிற்காக நடத்திய போர்களில் மட்டும் மொத்தமாக 13 ஆயிரத்து 140 வீரர்கள் தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர். 

நாட்டிற்காக உயிர் நீத்த இந்திய வீரர்கள் முழு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. போரால் ஏற்படும் பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் தவிர்ப்பதற்காகவே இரு நாட்டுச் சண்டையின்போது பல நாடுகளும் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனர். 

பகல்ஹாம் பயங்கரம்:

பகல்ஹாமில் கடந்த 22ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் உயிரிழந்த காரணத்தால் ஒட்டுமொத்த நாடும் கொந்தளித்தது. இதையடுத்து, பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூரை நடத்திய 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை கொன்றனர். இதன்பின்னர், பாகிஸ்தானும் பதில் தாக்குதல் நடத்த முயற்சிக்க இந்தியா தனது பதிலடியை அளித்தது.

இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்து சென்ற பிறகு அந்த நாடு இந்திய அளவிற்கு பொருளாதாரத்திலோ, தொழில்நுட்பத்திலோ பெரியளவிலோ வளரவில்லை. ஆனால், அந்த நாடு உருவானது முதலே அங்கு தீவிரவாதம் தழைத்தோங்கியுள்ளது. இதன் காரணமாக அந்த நாடு இதுவரை பெரிய வளர்ச்சியை அடையாமல் உள்ளது. 

தலைப்பு செய்திகள்

ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget