மேலும் அறிய

ஜெர்மனியின் நுட்பமும் இந்தியாவின் திறனும் இணைந்தால் உலகத்துக்கே உதவலாம்- மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

பருவநிலை மாற்ற செயல்திறன் குறியீட்டில் (சிசிபிஐ) தற்போது 7 வது இடத்தில் இந்தியா உள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

ஜெர்மனியின் துல்லியமான பொறியியல் கலையும், கட்டமைப்பு, டிஜிட்டல் அல்லது சமூக உள்கட்டமைப்பை மேம்படுத்தும் இந்தியாவின் திறனும் இணைந்து உலகிற்கு அசாதாரணமான ஒன்றை உருவாக்க உதவும் என்று மத்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார். 

ஆசிய பசிபிக் மாநாடு:   

புதுதில்லியில் இன்று நடைபெற்ற ஜெர்மன் வர்த்தகத்தின் 18-வது ஆசிய பசிபிக் மாநாட்டை தொடங்கி வைத்து அவர் உரையாற்றினார். அப்போது இந்தியா-ஜெர்மனி ஒத்துழைப்பு குறித்து பேசிய மத்திய அமைச்சர், செயற்கை நுண்ணறிவை ஏற்றுக்கொள்வது முதல் குறைக்கடத்திகள் வரை, நாட்டின் துடிப்பான புத்தாக்க சூழல் அமைப்பை வளர்ப்பது முதல் பசுமை தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்பது வரை, இந்தியா மற்றும் ஜெர்மனி இடையேயான ஒருங்கிணைப்பானது வளர்ச்சியை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.

7 வது இடத்தில் உள்ள இந்தியா:

இன்றைய இந்தியா வலுவான பேரினப் பொருளாதார அடிப்படைகளின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், உலகெங்கிலும் உள்ள வணிகர்களின் எதிர்காலத்திற்கான சீர்திருத்தம், பின்னடைவு மற்றும் தயார்நிலை ஆகியவை இங்கு உள்ளதாக கூறினார். பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவது குறித்துப் பேசிய கோயல், 2015-ல் நடைபெற்ற ஐ.நா பருவநிலை மாற்ற மாநாட்டில் (COP21) இந்தியாவின் உறுதிப்பாட்டை சுட்டிக் காட்டினார். பருவநிலை மாற்ற செயல்திறன் குறியீட்டில் (சிசிபிஐ) தற்போது 7 வது இடத்தில் உள்ள இந்தியா, தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகளையும் (என்டிசி) விஞ்சும் பாதையில் உள்ளது என்றும்  குறிப்பிட்டார்.

60% மக்கள்: 

இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்காக, ஜெர்மன் வர்த்தகத்திற்கான ஆசிய பசிபிக் குழு மற்றும் இந்தோ-ஜெர்மன் வர்த்தக சபைக்கு நன்றி தெரிவித்த  கோயல், ஆசிய-பசிபிக் பிராந்தியம் உலக மக்கள் தொகையில் 60%-ஐ உள்ளடக்கியது என்றும், 2030-ம் ஆண்டில், உலகில் உள்ள நடுத்தர வர்க்கத்தினரில் மூன்றில் இரண்டு பங்கினர் ஆசியாவில் வசிப்பார்கள் என்றும் கூறினார்.  மக்கள்தொகையில் ஏற்படும் இந்த மாற்றம் தனது எல்லையை விரிவுபடுத்தவும் உருவாகி வரும் தொழில் பிரிவுகளில் ஆதாயம் ஈட்டவும் வணிகர்களுக்கு  வளமான பின்னணியை அளிக்கிறது என்று அவர் கூறினார்.

வளர்ந்து வரும் போக்குகளை அடையாளம் காண்பதிலும் உலகளாவிய சவால்களை சமாளிப்பதிலும் இந்த மாநாடு முக்கியமானதாக இருக்கும் என்று கோயல் வலியுறுத்தினார். இது சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக்கொள்வதை எளிதாக்குகிறது,தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு உந்துதல் அளிக்கிறது மற்றும் எதிர்கால தொழில்துறை வளர்ச்சிக்கான கொள்கைகளை வடிவமைக்க உதவுகிறது என்று அவர் கூறினார். இந்தியாவும் ஜெர்மனியும் ராஜ்ஜிய கூட்டாண்மைகளை வலுப்படுத்தி, இந்த ஒத்துழைப்பை இரு நாடுகளின் பொருளாதாரம் மற்றும் குடிமக்களின் உண்மையான வளர்ச்சியாக மாற்ற முடியும் என்று மத்திய அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

”கனவு காணுங்கள்”:

இந்த பண்டிகை காலத்தில், தீபாவளி முதல் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வரை இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பன்முகத்தன்மையின் செழுமையை  பின்பற்றுமாறு பங்கேற்பாளர்கள் அனைவரையும் கேட்டுக்கொண்டார்.

தமது உரையின் நிறைவாக ரவீந்திரநாத் தாகூரின் வார்த்தைகளை மேற்கோள் காட்டிய கோயல், "உயரத்தை அடையுங்கள், ஏனென்றால் நட்சத்திரங்கள் உங்களுக்குள் மறைந்துள்ளன. ஆழமாகக் கனவு காணுங்கள், ஏனெனில் ஒவ்வொரு கனவும் இலக்கை முந்துகிறது" என்றார். தயாரிப்புகள், தொழில்கள் வழிநடத்திய மற்றும் முன்னோடியான கண்டுபிடிப்புகள், உலகின் ஒவ்வொரு மூலையையும் தொடும் எதிர்காலத்தை உருவாக்குமாறு பங்கேற்பாளர்களை வலியுறுத்தினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

திராவிட நாடு என சொன்னால் நாக்கு தீட்டாகி விடுமா? கொந்தளித்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்!
திராவிட நாடு என சொன்னால் நாக்கு தீட்டாகி விடுமா? கொந்தளித்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் 
"கூட்டாட்சியே இப்போதைய தேவை" ஏபிபி மாநாட்டில் ஓங்கி ஒலித்த திமுக எம்பி கனிமொழி சோமுவின் குரல்!
ஏபிபி மாநாட்டில் வெற்றியின் ரகசியத்தை உடைத்த ராபிடோ இணை நிறுவனர் அரவிந்த் சங்கா!
ABP Southern Rising Summit 2024:
"தென்னிந்தியாவிற்கு வஞ்சகம், அழிவிற்கான அரசியல் செய்யும் மோடி அரசு" - முதல்வர் ரேவந்த் ரெட்டி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Udhayanidhi : தமிழ்த்தாய் வாழ்த்தை தவறாக பாடிய அரசு ஊழியர்கள்! உதயநிதி நிகழ்ச்சியில் சர்ச்சை!TVK Vijay Letter | ’’2026-ல் வெற்றி நிச்சயம்த.வெ.க மாநாடுக்கு தயாரா?’’தொண்டர்களுக்கு விஜய் கடிதம்!CJI Sanjiv Khanna | பாஜகவின் சிம்ம சொப்பனம்! சந்திரசூட்டின் நம்பிக்கை!அடுத்த CJI சஞ்சீவ் கண்ணாSalem Rain Police : கண்டுகொள்ளாத மாநகராட்சி? சாக்கடை நீரில் இறங்கிய POLICE! உடனே ஓடிவந்த காவல்துறை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திராவிட நாடு என சொன்னால் நாக்கு தீட்டாகி விடுமா? கொந்தளித்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்!
திராவிட நாடு என சொன்னால் நாக்கு தீட்டாகி விடுமா? கொந்தளித்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் 
"கூட்டாட்சியே இப்போதைய தேவை" ஏபிபி மாநாட்டில் ஓங்கி ஒலித்த திமுக எம்பி கனிமொழி சோமுவின் குரல்!
ஏபிபி மாநாட்டில் வெற்றியின் ரகசியத்தை உடைத்த ராபிடோ இணை நிறுவனர் அரவிந்த் சங்கா!
ABP Southern Rising Summit 2024:
"தென்னிந்தியாவிற்கு வஞ்சகம், அழிவிற்கான அரசியல் செய்யும் மோடி அரசு" - முதல்வர் ரேவந்த் ரெட்டி
ABP Southern Rising LIVE: மஞ்சும்மல் பாய்ஸில் காட்டப்பட்டது உண்மையான குணா குகை அல்ல - இயக்குநர் சிதம்பரம்
ABP Southern Rising LIVE: மஞ்சும்மல் பாய்ஸில் காட்டப்பட்டது உண்மையான குணா குகை அல்ல - இயக்குநர் சிதம்பரம்
TVK Manaadu : தவெக மாநாட்டில் அஞ்சலை அம்மாள் கட்அவுட்...யார் இந்த அஞ்சலை அம்மாள்... தனி ரூட் எடுக்கும் விஜய்
தவெக மாநாட்டில் அஞ்சலை அம்மாள் கட்அவுட்...யார் இந்த அஞ்சலை அம்மாள்... தனி ரூட் எடுக்கும் விஜய்
Chennai Diwali Traffic: தீபாவளி கொண்டாட, சொந்த ஊர் போறீங்களா ? எப்ப போலாம் எந்த வழியில போலாம் ?
Chennai Diwali Traffic: தீபாவளி கொண்டாட, சொந்த ஊர் போறீங்களா ? எப்ப போலாம் எந்த வழியில போலாம் ?
Chennai School Gas Leak: சென்னை தனியார் பள்ளியில் வாயுக் கசிவு: 35 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!
Chennai School Gas Leak: சென்னை தனியார் பள்ளியில் வாயுக் கசிவு: 35 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!
Embed widget