மேலும் அறிய

"ஹமாஸை கண்டிக்காத தீர்மானம்" : ஐநாவில் இந்தியா எடுத்த நிலைப்பாட்டின் பின்னணி..

அக்டோபர் 7ஆம் தேதி, ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலை தீர்மானம் வெளிப்படையாக கண்டிக்காத காரணத்தால் இந்தியா இந்த முடிவு எடுத்திருப்பதாக ABP LIVEக்கு அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்துள்ளது.

காசாவில் வான்வழி தாக்குதலை நிறுத்த கோரி ஐநா பொதுச் சபை அழைப்பு விடுத்திருந்தாலும், மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து, இந்த விவகாரத்தில் இந்தியா பின்வாங்க முடிவெடுத்துள்ளது. அக்டோபர் 7ஆம் தேதி, ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலை தீர்மானம் வெளிப்படையாக கண்டிக்காத காரணத்தால் இந்தியா இந்த முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ABP LIVEக்கு கிடைத்த அதிகாரப்பூர்வ தகவலின்படி, "போர் நிறுத்த தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு விடுவதற்கு முன், அக்டோபர் 7 அன்று இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் நடத்திய தாக்குதல்களை உள்ளடக்கி திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதற்கு, இந்தியா ஆதரவாக வாக்களித்தது. இருப்பினும், அந்த குறிப்பிட்ட திருத்தம் 88 வாக்குகளை மட்டுமே பெற்றது. தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளை பெறத் தவறியதால் அது செல்லாது என அறிவிக்கப்பட்டது.

எங்கள் அணுகுமுறையின் அனைத்து கூறுகளும் தீர்மானத்தின் இறுதி உரையில் இடம்பெறாத நிலையில், அதை ஏற்றுக்கொள்வதற்கான வாக்கெடுப்பில் நாங்கள் வாக்களிக்கவில்லை. பயங்கரவாதத்துடன் எந்தவிதமான சமரசமும் இருக்க கூடாது. வாக்கெடுப்பின் போது, ​​பாலஸ்தீனம் மீதான மத்திய அரசின் நிலைப்பாட்டை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தியது.

ஐநா விதிகளை பொறுத்தவரையில், தீர்மானத்துக்கு வாக்களிக்காமல் புறக்கணிக்கும் உறுப்பினர்கள் குறிப்பிட்ட தீர்மானத்திற்கு வாக்களிக்காதவர்களாக கருதப்படுகிறார்கள். இஸ்ரேலியப் படைகளுக்கும் காசாவில் உள்ள ஹமாஸ் படையினருக்கும் இடையே நடந்து வரும் போரை மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக நிறுத்த வேண்டும் எனக் கூறி கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை புறக்கணித்த 45 நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

நிலத்தின் வழியே தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் விரிவுப்படுத்தி, குண்டுகள் வீசுவதை தீவிரப்படுத்தியிருப்பதாக செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது. இந்த சமயத்தில், ஐநாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், "அந்நிய நாடு படையெடுத்திருக்கும் பகுதியில் உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் சேவைகளை தொடர்ச்சியாக போதுமான அளவில் தடையின்ற வழங்க வேண்டும்" என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 7ஆம் தேதி, இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை, காசாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 7,000ஐ தாண்டியுள்ளது. காசாவில் உள்ள சுகாதாரத்துறை அமைச்சகம், இதுவரை 7,028 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகக் கூறுகிறது.

இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்பு படை, "போர் விமானம் மூலம் ஹமாஸின் வான்படை தலைவரான அசெம் அபு ரகாபா கொல்லப்பட்டுள்ளார். கடந்த அக்டோபர் 7ஆம் தேதி மேற்கொண்ட தாக்குதலில், முக்கிய பங்காற்றியவர் அசெம் அபு ரகாபா. மேலும், பாராகிளைடர்களில் இஸ்ரேலுக்குள் ஊடுருவிய பயங்கரவாதிகள், இவரின் கட்டளையின் கீழ்தான் செயல்பட்டுள்ளனர். இஸ்ரேல் பாதுகாப்பு படை மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல்களுக்கு இவரே பொறுப்பு" என தெரிவித்துள்ளது.

"இரு நாட்டு தீர்வுக்கு இந்தியா எப்போதும் ஆதரவளித்து வருகிறது"

ஐநா தீர்மானம் மீதான வாக்களிப்பின்போது இந்தியா எடுத்த நிலைபாட்டுக்கு விளக்கம் அளித்து பேசிய ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர துணை தூதர் யோஜனா படேல், "அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிர்ச்சிகரமானவை. கண்டனத்துக்கு உரியவை. பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டவர்களை நினைத்து வருந்துகிறோம். அவர்களை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். 

காசாவில் நடந்து வரும் மோதலில் ஏற்பட்ட உயிரிழப்புகள், தீவிரமானவையாக எடுத்து கொள்ளப்படுகிறது. தொடர்ச்சியான கவலையை தருகிறது. பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கள் உயிரைக் கொடுத்து வருகின்றனர். இந்த மனிதாபிமான நெருக்கடிக்கு தீர்வு காணப்பட வேண்டும். சர்வதேச சமூகத்தின் முயற்சிகளையும், காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதையும் நாங்கள் வரவேற்கிறோம். இந்த முயற்சியில் இந்தியாவும் பங்களித்துள்ளது.

இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் இரு நாட்டு தீர்வுக்கு இந்தியா எப்போதும் ஆதரவளித்து வருகிறது. இறையாண்மைமிக்க, சுதந்திரமான பாலஸ்தீனத்தை நிறுவுவதற்கு இது வழிவகுக்கும். பாதுகாப்பாகவும், அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள், இஸ்ரேலுடன் சமாதானத்துடன் அருகருகே வாழ வேண்டும். இதற்காக, மோதல் தீவிரமடைவதைத் தடுக்கவும், வன்முறையைத் தவிர்க்கவும், நேரடி சமாதானப் பேச்சுவார்த்தைகளை விரைவாக மீண்டும் தொடங்குவதற்கான நிலைமைகளை உருவாக்குவதற்கு உழைக்குமாறு இரு தரப்பையும் கேட்டுக்கொள்கிறோம்" என்றார்.

                                                                                                                                                                                                                                                                                                                                                      தமிழில்: சுதர்சன்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi: சியுஇடி தேர்விலும் குளறுபடி:
Rahul Gandhi: சியுஇடி தேர்விலும் குளறுபடி: "ஒரு தேர்வு கூட ஒழுங்கா நடத்தல" மத்திய அரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி!
பொண்டாட்டி தொல்லை தாங்க முடியல.. கருணைக்கொலை பண்ணுங்க.. கணவர் மனு!
பொண்டாட்டி தொல்லை தாங்க முடியல.. கருணைக்கொலை பண்ணுங்க.. கணவர் மனு!
Top 10 Headlines: வைகாசி விசாகம் கொண்டாட்டம்.. பள்ளி மாணவிகளுக்கு மாதவிடாய் விடுப்பு.. 11 மணி வரை நடந்த நிகழ்வுகள்!
Top 10 Headlines: வைகாசி விசாகம் கொண்டாட்டம்.. பள்ளி மாணவிகளுக்கு மாதவிடாய் விடுப்பு.. 11 மணி வரை நடந்த நிகழ்வுகள்!
PPF கணக்கில் அதிக வட்டி பெற வேண்டுமா? ஒவ்வொரு மாதமும் 5-ஆம் தேதிக்குள் பணம் செலுத்துங்கள்.
PPF கணக்கில் அதிக வட்டி பெற வேண்டுமா? ஒவ்வொரு மாதமும் 5-ஆம் தேதிக்குள் பணம் செலுத்துங்கள்.
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support
Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK alliance Iuml : கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என ஏற்கனவே தெரியும்.! காதர் மொய்தீன் திடீர் ட்விஸ்ட்
கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என ஏற்கனவே தெரியும்.! காதர் மொய்தீன் திடீர் ட்விஸ்ட்
IPL 2026 Final: 2வது ஐபிஎல் பட்டத்தை வெல்லப்போவது யார்? குஜராத்தை வீழ்த்தி CSK, மும்பை சாதனையை ஈடு செய்யுமா RCB?
2வது ஐபிஎல் பட்டத்தை வெல்லப்போவது யார்? குஜராத்தை வீழ்த்தி CSK, மும்பை சாதனையை ஈடு செய்யுமா RCB?
CM Vijay: நண்பர் வீட்டில் சோகம், ஓடோடி வந்த சிஎம் விஜய்.. வாசலில் காத்திருந்த அஜித் - வீடியோ வைரல்
CM Vijay: நண்பர் வீட்டில் சோகம், ஓடோடி வந்த சிஎம் விஜய்.. வாசலில் காத்திருந்த அஜித் - வீடியோ வைரல்
Maruti 7 Seater: மஹிந்த்ராவிற்கு போட்டியாக வரும் மாருதியின் 7 சீட்டர் - ஹைப்ரிட், AWD அம்சங்கள், - விலை எப்படி?
மஹிந்த்ராவிற்கு போட்டியாக வரும் மாருதியின் 7 சீட்டர் - ஹைப்ரிட், AWD அம்சங்கள், - விலை எப்படி?
CM Vijay Trisha: சிஎம் விஜயுடன் த்ரிஷா..! துக்க வீட்டிலும் அரசியலா? இணையத்தில் மல்லுக்கட்டும் திமுக - தவெக
CM Vijay Trisha: சிஎம் விஜயுடன் த்ரிஷா..! துக்க வீட்டிலும் அரசியலா? இணையத்தில் மல்லுக்கட்டும் திமுக - தவெக
TN Weather Update: பலத்த காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
பலத்த காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
”வள்ளூவருக்கு காவி பெயிண்ட்.. கொள்கை எதிரியை கேள்வி கேட்க ஏன் தயக்கம்..” முதல்வர் விஜயை விமர்சித்த உதயநிதி
”வள்ளூவருக்கு காவி பெயிண்ட்.. கொள்கை எதிரியை கேள்வி கேட்க ஏன் தயக்கம்..” முதல்வர் விஜயை விமர்சித்த உதயநிதி
சேலம் எப்போதும் அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டை: வாக்காளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி
சேலம் எப்போதும் அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டை: வாக்காளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி
Embed widget