மேலும் அறிய

I.N.D.I.A கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம்.. பாஜகவின் கோட்டையில் களமிறங்கும் எதிர்க்கட்சிகள்

I.N.D.I.A கூட்டணி ஒருங்கிணைப்பு குழுவின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது.

நடப்பு மக்களவை பதவிக்காலம் அடுத்தாண்டு மே மாதம் நிறைவடைய உள்ளதால், மக்களவை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதற்கு முன்பாகவே, 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுடன் நாடாளுமன்ற தேர்தலை சேர்த்து நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியான வண்ணம் உள்ளது.

தேர்தலுக்கு தயாரான I.N.D.I.A கூட்டணி:

இப்படிப்பட்ட பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், பாஜகவை வீழ்த்தும் நோக்கில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து மெகா கூட்டணியை அமைத்துள்ளது. எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம், பிகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற நிலையில், இரண்டாவது கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில்தான், எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணிக்கு I.N.D.I.A என பெயர் சூட்டப்பட்டது. இதை தொடர்ந்து, I.N.D.I.A கூட்டணியின் மூன்றாவது கூட்டம் கடந்த ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 தேதிகளில் மும்பையில் நடைபெறே்றது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் இயன்றவரை ஒன்றாகப் போட்டியிடுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பல்வேறு மாநிலங்களில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை உடனடியாகத் தொடங்கப்பட்டு, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் கூடிய விரைவில் முடிக்கப்படும் என I.N.D.I.A கூட்டணி அறிவித்தது.

அதுமட்டும் இன்றி, ஒருங்கிணைப்பு, பிரச்சாரம், ஊடகம், சமூக ஊடகம் போன்றவற்றில் பல்வேறு கட்சிகளை ஒருங்கிணைக்க தனித்தனியே குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒருங்கிணைப்பு குழுவின் முதல் கூட்டம்:

இந்த நிலையில், I.N.D.I.A கூட்டணி ஒருங்கிணைப்பு குழுவின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், I.N.D.I.A கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் அக்டோபர் முதல் வாரம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள காங்கிரஸ் அமைப்பு செயலாளர் கே.சி. வேணுகோபால், "ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டத்தில் 12 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கூட்டணி சார்பில் பொதுக் கூட்டங்களை நடத்த குழு முடிவு செய்தது. அக்டோபர் முதல் வாரத்தில் போபாலில் முதல் பொதுக்கூட்டம் நடைபெறும். விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், ஊழல் பிரச்னை உள்ளிட்டவற்றை எழுப்புவோம். சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பிரச்னையை கையில் எடுக்க கூட்டணி கட்சிகள் ஒப்புக்கொண்டன.

யாருடைய தொலைக்காட்சி விவாதங்களில் எல்லாம் கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள கூடாது என்ற முடிவை எடுக்கும் அதிகாரம் ஊடக ஒருங்கிணைப்பு குழுவுக்கு அளிக்கப்பட்டுள்ளது" என்றார்.

இந்த கூட்டத்தில், திரிணாமுல் காங்கிரஸ் பிரதிநிதி அபிஷேக் பானார்ஜி கலந்து கொள்ளாதது பல்வேறு விதமான சந்தேகங்களை எழுப்பியுள்ளது. குறிப்பாக, அவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ள நிலையில், கூட்டத்தை அபிஷேக் பானார்ஜி தவிர்த்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

அதேபோல, சாதிவாரி கணக்கெடுப்புக்கு திரிணாமுல் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இதன் காரணமாக, மும்பை கூட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் I.N.D.I.A கூட்டணி கட்சிகள் மத்தியில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
கொந்தளித்த விவசாயிகள்.. பரபரப்பில் மயிலாடுதுறை..
கொந்தளித்த விவசாயிகள்.. பரபரப்பில் மயிலாடுதுறை..
TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
எஸ்பிபி-க்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உதயமான ஜாம்பவான் பாடகர் - யாரு தெரியுமா? எப்படி?
எஸ்பிபி-க்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உதயமான ஜாம்பவான் பாடகர் - யாரு தெரியுமா? எப்படி?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
Embed widget