மேலும் அறிய

கண்காணிக்கும் அரசுக்கு ப்ளாஸ்டர் போடவேண்டும் - மம்தா பானர்ஜி

ஒரு சங்கிலித் தொடர் போல் ஃபோன் ஒட்டுக்கேட்பை மத்திய அரசு செய்தது என திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

ஒரு சங்கிலித்தொடர்போல ஃபோன் ஒட்டுக்கேட்பை மத்திய அரசு செய்தது என திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்று, கொல்கத்தாவில் திரிணாமூல் கட்சியின் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனையொட்டி மம்தா பானர்ஜி காணொலி வாயிலாக ஒரு கூட்டத்தை ஒருங்கிணைத்தார். அதில் பேசிய அவர் தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரத்தில் மத்திய அரசை சரமாரியாக சாடினார். உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தை தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்றும் கூறினார்.

இது குறித்து மம்தா பானர்ஜி கூறியதாவது, எனது செல்போன் பல ஆண்டுகளாகவே ஒட்டுகேட்கப்படுகிறது. பெகாசஸ் மட்டுமல்ல பல்வேறு உளவு மென்பொருள் கொண்டு ஒட்டுகேட்கப்பட்டிருக்கிறது. இதை மத்திய அரசு ஒரு சங்கிலித்தொடர் போல் செய்கிறது. எனது உறவினர் அபிஷேக் பானர்ஜியின் போன் ஒட்டுகேட்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து எனது போன், தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் என அடுத்தடுத்து மத்திய அரசு ஒட்டுகேட்புப் பட்டியலை நீட்டிக்கொண்டே சென்றது. அவர்கள் என் போன் உரையாடல்கள் அனைத்தையும் இடைமறித்து கேட்கின்றனர். அதனை அப்படியே பதிவு செய்கின்றனர். என்னால், ப.சிதம்பரத்திடம் பேச முடியாது, மகாராஷ்டிராவின் சரத் பவாரிடம் பேச முடியாது. ஏன் டெல்லி முதல்வருடனும் பேச முடியாது. ஏனெனில் எனது போனை அவர்கள் ஒட்டுகேட்கின்றனர் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். கண்காணிக்கும் அரசுக்கு ப்ளாஸ்டர் போடவேண்டும் என்றார்

எதிர்க்கட்சியினரை விட்டுத்தள்ளுங்கள், பாஜகவும் சொந்த கட்சியினர் மீது கூட முழு நம்பிக்கையில்லை. அவர்கள் இந்த தேசத்தையே கண்காணிப்புக்குள் வைத்திருக்க முயற்சிக்கினறனர். இது ஜனநாயகம் அல்ல. மாறாக இங்கு நடப்பது டிடக்டிவோகிரசி தான் நடக்கிறது. நான் இந்த வேளையில் உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டைக் கோருகிறேன். உச்ச நீதிமன்றம் தான் நாட்டைக் காப்பாற்ற வேண்டும். தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். இவர்கள் எல்லோரையும் கண்காணிப்புக்குள் கொண்டு வர நினைக்கின்றனர். ஜனநாயகத்தின் வேர் ஊடகம், தேர்தல் ஆணையம், நீதித்துறை. ஆனால், அவர்கள் இந்த மூன்று துறையையுமே கண்காணிப்புக்குள் கொண்டு வந்துள்ளனர். தனிநபர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடப்பவற்றை அறிந்து வைத்து மிரட்டிப் பணியவைக்க நினைக்கின்றனர். நான் எனது ஃபோனுக்கு ஒரு ப்ளாஸ்டர் போட்டுள்ளேன். (போனின் கேமராவில் ப்ளாஸ்டர் ஒட்டியிருந்தார்) இதே இந்த அரசாங்கத்துக்கும் ஒரு ப்ளாஸ்டர் போட வேண்டும். 

தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். நான் வருகிற 27, 28 தேதிகளில் டெல்லி வருகிறேன். என்னை சந்திக்க விரும்பும் எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்திக்கலாம். நான் யாருடனும் போனில் பேச முடியாத நிலையில் இருக்கிறேன்” இவ்வாறு மம்தா பானர்ஜி கோப ஆவேசத்துடன் கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Bangladesh Election: வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Ather Rizta Record Sales: குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
Mexico Vs India Tariff: ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget