மேலும் அறிய

'பண்பற்ற மனிதராக மோடியை நினைத்தேன்...ஆனால்...' மனம் உருகிய குலாம் நபி ஆசாத்

பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் கண்ணீர் விட்டு அழுதது ஏன் என முன்னாள் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் இன்று விளக்கம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு குலாம் நபி ஆசாத்தின் மாநிலங்களவை பதவிக்காலம் முடிவடைந்த போது, ​​பிரியாவிடை உரையின் போது, ​​பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் கண்ணீர் விட்டு அழுதது ஏன் என முன்னாள் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் இன்று விளக்கம் தெரிவித்துள்ளார். கடந்த வாரம், காங்கிரஸ் கட்சியிலிருந்து குலாம் நபி ஆசாத் விலகியதிலிருந்தே மோடி கண்ணீர் விட்ட சம்பவம் மீண்டும் பேசு பொருளாக மாறியது.

 

இதுகுறித்து விரிவாக பேசிய குலாம் நபி ஆசாத், "அவரது உரையின் உள்ளடக்கத்தைப் படியுங்கள். நான் மாநிலங்களவையை விட்டு வெளியேறியது குறித்து பிரதமர் மோடி வருத்தம் தெரிவிக்கவில்லை. அவர் ஒரு சம்பவத்தைப் பற்றிப் பேசினார். காஷ்மீரில் நான் முதலமைச்சராக இருந்தபோது (2006ல்) குஜராத்தில் இருந்து வந்த சில சுற்றுலாப் பயணிகள் கையெறி குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தனர்.

குஜராத் முதலமைச்சராக இருந்த மோடி எனது அலுவலகத்திற்கு போன் செய்தார். ஆனால், எவ்வளவு கொடூரமான கொலைகள் என்பதை எண்ணி அழுது திணறிவிட்டேன். என்னால் அவருடன் பேச முடியவில்லை. எனது ஊழியர்கள் தொலைபேசியை என் அருகில் கொண்டு வந்தபோது நான் அழுவதை அவர் கேட்டார்.

அடுத்தடுத்து என்ன நடந்தது என தெரிந்து கொள்ள மோடி எனது அலுவலகத்திற்கு தொடர்ந்து அழைப்பு விடுத்தார். பின்னர், இரண்டு விமானங்களில் உடல்களையும், காயமடைந்தவர்களையும் ஏற்றிச் சென்றதை நான் பார்த்தபோது, ​​உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சோகத்தில் அலறினர். நானும் அழ ஆரம்பித்தேன். தொலைக்காட்சியிலும் வந்தது. அவர் அழைத்தார் ஆனால், மீண்டும் என்னால் பேச முடியவில்லை.

நான் மோடி ஒரு முரட்டுத்தனமான மனிதராக இருப்பாரோ என்று நினைத்தேன். அவருக்கு மனைவியோ குழந்தைகளோ இல்லாததால், கவலைப்பட மாட்டார் என்று நினைத்தேன். ஆனால், குறைந்த பட்சம், அவர் மனிதாபிமானத்தைக் காட்டினார்" என்றார்.

மே 25, 2006 அன்று ஸ்ரீநகரில் நடந்த தாக்குதலில் நான்கு சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். ஆறு பேர் காயமடைந்தனர். 50 ஆண்டு காலமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விட்டு, அக்கட்சியிலிருந்து கடந்த வாரம் விலகினார். அப்போது, ராகுல் காந்தி மீது கடுமையான விமர்சனங்களை மேற்கொண்டிருந்தார். அவரின் பின்னணியில், பாஜக இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது.

ஆனால், பாஜகவில் சேரமாட்டேன் என திட்டவட்டமாக குலாம் நபி ஆசாத் மறுத்துவிட்டார். மேலும், அவர் தனிக்கட்சி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தாண்டின் இறுதியில், ஜம்மு காஷ்மீர் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget