மேலும் அறிய

பா.ஜ.க.வுடனான சிவசேனாவின் 25 ஆண்டுகள் கூட்டணி வீண் - மகாராஷ்ட்ரா முதல்வர் உத்தவ்தாக்கரே

25 ஆண்டுகளுடன் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து வீணடித்துவிட்டோம் என்று என்று மகாராஷ்ட்ரா முதல்வர் உத்தவ்தாக்கரே மீண்டும் கூறியுள்ளார்.

மகாராஷ்ட்ராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த சில காலங்களாக பா.ஜ.க.விற்கும், சிவசேனாவிற்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில், மும்பையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த முதல்வர் உத்தவ்தாக்கரே பா.ஜ.க. மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

கடந்தாண்டு நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சைக்கு பிறகு நேற்று அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, “ நான் விரைவில் மகாராஷ்ட்ரா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன். என் உடல்நிலை குறித்து கவலைப்படும் எதிரணியினருக்கு பலத்தை காட்டுவேன். ஒரு காபந்து அரசாங்கம் இருப்பது போல நினைக்கும் அவர்கள்தான் ஒரு காபந்து எதிர்க்கட்சி. அவர்கள் தங்களைத் தாங்களே அழித்துக்கொள்வார்கள்.


பா.ஜ.க.வுடனான சிவசேனாவின் 25 ஆண்டுகள் கூட்டணி வீண் - மகாராஷ்ட்ரா முதல்வர் உத்தவ்தாக்கரே

நாம் ஏன் பா.ஜ.க.வை விட்டு ஒதுங்கினோம். இன்று அவர்கள் காட்டுகின்ற வெற்று இந்துத்துவா என்பது அதிகாரத்திற்கான வேட்கையைத் தவிர வேறறொன்றுமில்லை. 25 ஆண்டுகளாக அவர்களுடன் கூட்டணி வைத்தது வீணானது என்ற எனது முந்தையை அறிக்கையை நான் இப்போதும் கடைபிடிக்கிறேன். 25 ஆண்டுகளாக நாங்கள் அவர்களை வளர்த்தெடுத்தது துரதிஷ்டவசமானது.

புனே வந்து தனித்து போட்டியிடுவோம் என்று அமித்ஷா சவால் விடுத்தார். அந்த சவாலை தசரா பேரணியில் நாங்கள் எற்றுக்கொண்டுள்ளோம். உங்களுக்கு தைரியம் இருந்தால் தொண்டர்களின் பலத்தில் போட்டியிடுங்கள். எங்களுக்கு சவால்விடுவது, அமலாக்கத்துறை மற்றும் பிற துறைகளை பின்னால் இருந்து அனுப்புவது ஒன்றும் தைரியம் அல்ல.


பா.ஜ.க.வுடனான சிவசேனாவின் 25 ஆண்டுகள் கூட்டணி வீண் - மகாராஷ்ட்ரா முதல்வர் உத்தவ்தாக்கரே

நாங்கள் இந்துத்துவாவை விட்டுத்தரவில்லை. நாங்கள் பா.ஜ.க.வுடனான கூட்டணியைத்தான் முறித்துள்ளோம். பா.ஜ.க. ஒன்றும் இந்துத்வா. நீங்கள் நாட்டை பார்த்துக்கொண்டால், நாங்கள் மகாராஷ்ட்ராவை பார்த்துக்கொள்கிறோம் என்று பால்சாகேப் பா.ஜ.க.விடம் கூறியிருந்தார். ஆனால், அவர்கள்தான் நமக்கு துரோகம் செய்தனர். எங்களை அழிக்க முயற்சித்தனர். நாங்கள் பல ஆண்டுகளாக அவர்களை வளர்த்தோம். அவர்கள் வென்ற பிறகு யூஸ் அண்ட் த்ரோ கொள்கையை எடுத்துக்கொண்டனர்.

பிரிட்டிஷார் ஆட்சியில் இருந்ததுபோன்று அடிமைத்தன சூழல் உருவாகியுள்ளது. இது இந்துத்வா அல்ல. உண்மையான இந்து இதை அனுமதிக்கமாட்டான். ஒருவேளை நாம் இன்று இதை விட்டுவிட்டால், மீண்டும் அடிமைத்தனம் புகுந்துவிடும். யார் எமெர்ஜென்சிக்கு எதிராக போராடினார்களோ, அவர்களே நாட்டில் எமெர்ஜென்சி போன்ற சூழலை உருவாக்கியுள்ளனர். இதை முறியடித்து சிவசேனா கண்டிப்பாக முன்னேறும்.


பா.ஜ.க.வுடனான சிவசேனாவின் 25 ஆண்டுகள் கூட்டணி வீண் - மகாராஷ்ட்ரா முதல்வர் உத்தவ்தாக்கரே

சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் நாம் நான்காவது இடத்தை பிடித்துள்ளோம். ஆனால், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருந்த போது இருந்ததை காட்டிலும் அதிக இடங்கள் வென்றுள்ளோம். சட்டசபை, மக்களவைத் தேர்தலைப் போல இந்த தேர்தலில் தீவிரமாக நாங்கள் போட்டியிடவில்லை. எதிர்க்கட்சியில் மூத்த தலைவர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டனர். எங்கள் கட்சியில் அவ்வாறு செய்யவில்லை. இப்போது முதல் அதை தவிர்ப்போம்.”

இவ்வாறு அவர் கூறினார்.

சமீபத்தில் மகாராஷ்ட்ராவில் நடைபெற்ற 1791 பதவியிடங்களுக்கு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க. 419 பணியிடங்களை வென்றது. தேசியவாத காங்கிரஸ் 381 பணியிடங்களை வென்றது. காங்கிரஸ் 344 பணியிடங்களை வென்றது. சிவசேனா 296 பணியிடங்களை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

LIC Warning: எல்ஐசி பயனாளர்கள் அதிர்ச்சி..! அம்பலமான மோசடி, பாதிக்கப்பட்டவர்கள் என்ன செய்யலாம்? பறந்த உத்தரவு
LIC Warning: எல்ஐசி பயனாளர்கள் அதிர்ச்சி..! அம்பலமான மோசடி, பாதிக்கப்பட்டவர்கள் என்ன செய்யலாம்? பறந்த உத்தரவு
Delhi Election 2025: நாங்க ஜீரோதான், ஆனாலும் பாஜகவிற்கு ஹீரோ - ஆம் ஆத்மியை காங்கிரஸ் பார்சல் கட்டியது எப்படி?
Delhi Election 2025: நாங்க ஜீரோதான், ஆனாலும் பாஜகவிற்கு ஹீரோ - ஆம் ஆத்மியை காங்கிரஸ் பார்சல் கட்டியது எப்படி?
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி வழக்கில் திடீர் திருப்பம்;  சிக்கிய விசிக நிர்வாகி... பகீர் கிளப்பும் கனியாமூர் வழக்கு!
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி வழக்கில் திடீர் திருப்பம்; சிக்கிய விசிக நிர்வாகி... பகீர் கிளப்பும் கனியாமூர் வழக்கு!
Thanjavur : ஆளுநர் மீதான வழக்கு! நீதிமன்றத்தின் கதவை தட்டிய முதல்வர்..  அமைச்சர் சொன்ன முக்கிய பாயிண்ட்
Thanjavur : ஆளுநர் மீதான வழக்கு! நீதிமன்றத்தின் கதவை தட்டிய முதல்வர்.. அமைச்சர் சொன்ன முக்கிய பாயிண்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tirupathur: தாய்க்கு பாலியல் தொல்லை.. திமுக நிர்வாகிக்கு வெட்டு! சித்தியை கொலை செய்த இளைஞர்!Sivagangai Police: ”விசிகவினர் அடிச்சுட்டாங்க” நாடகம் ஆடிய பெண் SI! உண்மையை உடைத்த காவல்துறை!Delhi Next CM: டெல்லியின் அடுத்த முதல்வர்? முதலிடத்தில் பர்வேஷ் வர்மா! வெளியான லிஸ்ட்!Aravind kejriwal: ”டெல்லி மக்கள் கொடுத்த TWIST”தோல்விக்கு பின் உருக்கம் கெஜ்ரிவால் திடீர் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
LIC Warning: எல்ஐசி பயனாளர்கள் அதிர்ச்சி..! அம்பலமான மோசடி, பாதிக்கப்பட்டவர்கள் என்ன செய்யலாம்? பறந்த உத்தரவு
LIC Warning: எல்ஐசி பயனாளர்கள் அதிர்ச்சி..! அம்பலமான மோசடி, பாதிக்கப்பட்டவர்கள் என்ன செய்யலாம்? பறந்த உத்தரவு
Delhi Election 2025: நாங்க ஜீரோதான், ஆனாலும் பாஜகவிற்கு ஹீரோ - ஆம் ஆத்மியை காங்கிரஸ் பார்சல் கட்டியது எப்படி?
Delhi Election 2025: நாங்க ஜீரோதான், ஆனாலும் பாஜகவிற்கு ஹீரோ - ஆம் ஆத்மியை காங்கிரஸ் பார்சல் கட்டியது எப்படி?
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி வழக்கில் திடீர் திருப்பம்;  சிக்கிய விசிக நிர்வாகி... பகீர் கிளப்பும் கனியாமூர் வழக்கு!
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி வழக்கில் திடீர் திருப்பம்; சிக்கிய விசிக நிர்வாகி... பகீர் கிளப்பும் கனியாமூர் வழக்கு!
Thanjavur : ஆளுநர் மீதான வழக்கு! நீதிமன்றத்தின் கதவை தட்டிய முதல்வர்..  அமைச்சர் சொன்ன முக்கிய பாயிண்ட்
Thanjavur : ஆளுநர் மீதான வழக்கு! நீதிமன்றத்தின் கதவை தட்டிய முதல்வர்.. அமைச்சர் சொன்ன முக்கிய பாயிண்ட்
Ponmudi : ஆம் ஆத்மி தோல்வி.. இந்தியா கூட்டணிக்கு இது ஒரு பாடம் ; கடுப்பான அமைச்சர் பொன்முடி
Ponmudi : ஆம் ஆத்மி தோல்வி.. இந்தியா கூட்டணிக்கு இது ஒரு பாடம் ; கடுப்பான அமைச்சர் பொன்முடி
CSK Rachin Ravindra Injured: சிஎஸ்கே வீரர சாய்ச்சுப்புட்டீங்களேப்பா.!! ரத்தக் காயமடைந்த ரச்சின் ரவீந்திரா..நடந்தது என்ன.?
சிஎஸ்கே வீரர சாய்ச்சுப்புட்டீங்களேப்பா.!! ரத்தக் காயமடைந்த ரச்சின் ரவீந்திரா..நடந்தது என்ன.?
TN fishermen arrest: போராட்டம் எல்லாம் வீணா? மீண்டும் 14 தமிழக மீனவர்கள் கைது, இலங்கை கடற்படை அட்டூழியம்
TN fishermen arrest: போராட்டம் எல்லாம் வீணா? மீண்டும் 14 தமிழக மீனவர்கள் கைது, இலங்கை கடற்படை அட்டூழியம்
IND Vs ENG 2ND ODI: தொடரை வெல்லுமா இந்தியா? இன்று களமிறங்குவாரா கோலி? இங்கிலாந்து உடன் 2வது ஒருநாள் போட்டி
IND Vs ENG 2ND ODI: தொடரை வெல்லுமா இந்தியா? இன்று களமிறங்குவாரா கோலி? இங்கிலாந்து உடன் 2வது ஒருநாள் போட்டி
Embed widget