மேலும் அறிய

இன்னும் 2 ஆண்டுகள்தான்; இடதுசாரி தீவிரவாதத்துக்கு தேதி குறித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

இடதுசாரி தீவிரவாதம் இன்னும் இரண்டு ஆண்டுகளில் நாட்டிலிருந்து முற்றிலும் ஒழிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இடதுசாரி தீவிரவாதம் நாட்டுக்கு பெரும் சவால் விடுத்து வருவதாக மத்திய அரசு கூறி வருகிறது. குறிப்பாக, நக்சல் தீவிரவாதத்தால் வளர்ச்சி பணிகள் தடைப்படுவதாக மத்திய அரசு கூறி வருகிறது. சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்கள் நக்சல் தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களாக உள்ளன.

இடது தீவிரவாதத்தால் அதிகம் பாதிப்புக்குள்ளான மாநிலங்கள்:

இந்த நிலையில், இடது தீவிரவாதத்தால் அதிகம் பாதிப்புக்குள்ளான மாநிலங்களில் பாதுகாப்பு நிலையை ஆய்வு செய்யும் வகையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலையிலான ஆலோசனை கூட்டத்தில் மகாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் ஜார்கண்ட் மாநில முதலமைச்சர்கள், ஒடிசா, பீகார், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய அமித் ஷா, "இடதுசாரி தீவிரவாதம் இன்னும் இரண்டு ஆண்டுகளில் நாட்டிலிருந்து முற்றிலும் ஒழிக்கப்படும்" என்றார். தொடர்ந்து பேசிய அவர், "கடந்த நாற்பது ஆண்டுகளிலேயே 2022ஆம் ஆண்டுதான், நக்சல்களால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மிகக் குறைவான வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளது. இறப்புகள் பதிவாகியுள்ளது.

"நக்சலிசம் மனித குலத்திற்கு ஒரு சாபக்கேடு"

நக்சலிசம் மனித குலத்திற்கு ஒரு சாபக்கேடு. அதன் அனைத்து வடிவங்களிலும் அதை வேரோடு பிடுங்குவதில் நாம் உறுதியாக இருக்கிறோம்" என்றார். இதை தொடர்ந்து பேசிய அதிகாரிகள், "நக்சல் பாதித்த மாநிலங்களில் வன்முறை சம்பவங்கள் 2010ஆம் ஆண்டை விட 2022இல் 77 சதவிகிதம் குறைந்துள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் நாட்டில் இடது தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டு பகுதிகளில், பாதுகாப்பு நிலைமையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இடது தீவிரவாத்தை எதிர்கொள்ள கடந்த 2015ஆம் ஆண்டு, தேசிய கொள்கை மற்றும் செயல் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள், வளர்ச்சிக்கான தலையீடுகள், உள்ளூர் சமூக மக்களின் உரிமைகளை உறுதி செய்தல் போன்றவற்றுக்காக பல்முனை உத்தியை வகுக்க இந்தக் கொள்கை உதவுகிறது. இந்தக் கொள்கையின் உறுதியான அமலாக்கம் நாடு முழுவதும் இடது தீவிரவாத வன்முறையில் தொடர்ந்து சரிவை ஏற்படுத்தியது.

இடது தீவிரவாத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு படை வீரர்கள், அப்பாவி மக்கள் கொல்லப்படுவது 2010ஆம் ஆண்டை காட்டிலும் 2022ஆம் ஆண்டு 90 சதவிகிதம் குறைந்துள்ளது" என்றார்கள்.

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, "2004க்கும் 2014க்கும் இடைப்பட்ட காலத்தில் 17,679 இடது தீவிரவாதம் தொடர்பான சம்பவங்கள் பதிவாகியுள்ளது. 6,984 இறப்புகள் பதிவாகியுள்ளன" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: PAK vs NED WC 2023: சொதப்பிய டாப் ஆர்டர்; மிரட்டி விட்ட மிடில் ஆர்டர்; நெதர்லாந்துக்கு எதிராக 286 ரன்கள் குவித்த பாகிஸ்தான்

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN School Leave: மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
CM Stalin Condemnation: “100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
“100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
ABP Premium

வீடியோ

நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்
DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN School Leave: மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
CM Stalin Condemnation: “100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
“100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
Ukraine Zelensky: “நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
“நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
OnePlus 15R Leaked Details: மெகா பேட்டரியுடன் ஒன்பிளஸ் 11R; வெளியீட்டிற்கு முன் கசிந்த விவரங்கள்; விலை, ஸ்டோரேஜ் என்ன.?
மெகா பேட்டரியுடன் ஒன்பிளஸ் 11R; வெளியீட்டிற்கு முன் கசிந்த விவரங்கள்; விலை, ஸ்டோரேஜ் என்ன.?
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
Embed widget