மேலும் அறிய

துண்டிக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலை... இமாச்சல்-ஜம்முவை உலுக்கி வரும் வெள்ளம்.. மக்கள் பரிதவிப்பு

பனாலா பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதால் சண்டிகார் – மனாலி நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. குல்லு மாவட்டத்தில் பெருக்கெடுத்த பியாஸ் நதி, நெடுஞ்சாலையின் பல பாகங்களை அடித்துச் சென்றது

ஹிமாச்சலப் பிரதேசத்தில் இடையறாத கனமழை பலத்த பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பனாலா பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதால் சண்டிகார் – மனாலி நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. குல்லு மாவட்டத்தில் பெருக்கெடுத்த பியாஸ் நதி, நெடுஞ்சாலையின் பல பாகங்களை அடித்துச் சென்றது. இதனால் முக்கிய சாலை இணைப்புகளை மீண்டும் தொடங்குவதற்காக பணியாளர்கள் போராடி வருகின்றனர்.

குல்லு மாவட்ட ஆட்சியர் டோருல் எஸ். ரவீஷ், “தொடர்ச்சியான மழையால் நெடுஞ்சாலைகள் பல இடங்களில் சேதமடைந்துள்ளன. சில பகுதிகளில் நேற்று மக்கள் இடம்பெயர்க்கப்பட்டனர்; தற்போது இடம்பெயர்ப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அனைத்து அலுவலர்களும் தரையில் பணி செய்து வருகின்றனர்” என்று எச்சரித்தார்.

பல மாவட்டங்களுக்கு IMD எச்சரிக்கை

இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD), சம்பா, காங்க்ரா, மண்டி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று மற்றும் நாளை சிகப்பு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 28ஆம் தேதி சம்பா, லாஹவுல்-ஸ்பீதி, காங்க்ரா, குல்லு, மண்டி மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை மற்றும் ஆகஸ்ட் 29ஆம் தேதி ஷிம்லா, மண்டிக்கு மஞ்சள் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 30–31 தேதிகளில் மண்டி, ஷிம்லா, சோலனுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை, ஆகஸ்ட் 31ஆம் தேதி குல்லு, மண்டி, காங்க்ரா, ஷிம்லாவுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆபத்தான பகுதிகளில் மக்கள் தேவையற்ற பயணத்தைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மூடப்பட்ட நெடுஞ்சாலையில் நூற்றுக்கணக்கான சரக்கு லாரிகள் சிக்கியுள்ளன. காய்கறிகள் மற்றும் பிற பொருட்கள் கெட்டுப்போவது குறித்து லாரி ஓட்டுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர். “நான் இங்கே வந்தது நான்கு நாட்களாகிறது. சாலைகள் சேதமடைந்துள்ளன, டோல் வசூல் தொடர்கிறது, அதிகாரிகளிடமிருந்து தெளிவான தகவல் கிடைக்கவில்லை. எங்களுடைய பொருட்கள் அழுகிக் கொண்டிருக்கின்றன” என டிரைவர் குர்விந்தர் சிங் கூறினார்.ர்.

ஜம்மு-காஷ்மீர்: வெள்ளத்தில் உயிரிழப்புகள்

ஜம்மு-காஷ்மீரிலும்  மழையால் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மாதா வைஷ்ணோ தேவி யாத்திரை இரண்டாவது நாளாக மூடப்பட்டுள்ளது.யாத்திரை பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34-ஆக உயர்ந்துள்ளது. 10,000க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்க்கப்பட்டுள்ளனர். படையினர், எஸ்.டி.ஆர்எப், காவல்துறை ஆகியவை மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.

கிஷ்த்வார் பகுதியில் மார்கி மற்றும் வர்வான் பள்ளத்தாக்குகளில் இருந்த வீடுகள், பாலங்களை அடித்துச் செல்லப்பட்டன. மேலும் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின. ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். மீட்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், சாலைகள் மற்றும் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மழையும் இடைவிடாமல் பெய்து வருவதால் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தாமதமாகி வருகிறது.

போக்குவரத்து முறைகள் பாதிப்பு

டாவி பாலம், சக்கி புல் பாதான்கோட் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் ரயில் மற்றும் சாலைபோக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜேலம் நதி உட்பட, ஸ்ரீநகர், அனந்த்நாக் பகுதிகளில் ஆறுகள் பெருக்கெடுத்துள்ளதால் மக்கள் இடம்பெயர்க்கப்பட்டு வருகின்றனர்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

அமெரிக்கா எடுத்த அதிரடி முடிவு! ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்! இனி சிக்கலே இல்லையா?
அமெரிக்கா எடுத்த அதிரடி முடிவு! ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு ஜாக்பாட்! இனி சிக்கலே இல்லையா?
கணவரிடம் பணம் கேட்க முடியாது! மனைவியின் கோரிக்கையை தூக்கி எறிந்த உயர்நீதிமன்றம்! பின்னணி என்ன?
கணவரிடம் பணம் கேட்க முடியாது! மனைவியின் கோரிக்கையை தூக்கி எறிந்த உயர்நீதிமன்றம்! பின்னணி என்ன?
சபரிமலை நிறை புத்தரிசி பூஜை: ஆகஸ்ட் 3ல் ஐஸ்வர்யம் பெருகும் தரிசனம்! முன்பதிவு அவசியம்.
சபரிமலை நிறை புத்தரிசி பூஜை: ஆகஸ்ட் 3ல் ஐஸ்வர்யம் பெருகும் தரிசனம்! முன்பதிவு அவசியம்.
ரயிலின் பொதுப் பெட்டிகள் ஏன் நடுவில் வைக்கப்படுவதில்லை? காரணம் இதுதான்!
ரயிலின் பொதுப் பெட்டிகள் ஏன் நடுவில் வைக்கப்படுவதில்லை? காரணம் இதுதான்!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
Iran Vs Trump: ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
EPS ADMK : அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
Embed widget