மேலும் அறிய

Hijab Row | `பிற மத அடையாளங்களுக்கு அனுமதி.. ஹிஜாப் உடைக்குத் தடை ஏன்?’ - நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பிய வழக்கறிஞர்!

மக்களால் அணியப்படும் மத அடையாளங்களான துப்பட்டா, வளையல், தலைப்பாகை, சிலுவை, பொட்டு முதலானவை அனுமதிக்கப்படும் சூழலில் ஏன் ஹிஜாப் மட்டுமே எதிர்க்கப்படுகிறது என நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை நான்காவது நாளாக இன்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி மனுதாரர்களான முஸ்லிம் பெண்களின் தரப்பு வாதத்தை இன்று கேட்டுள்ளார். 

தனது மனுதாரர்களுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் ரவி வர்மா குமார், நீதிபதிகளிடம், தினமும் மக்களால் அணியப்படும் நூற்றுக்கணக்கான மத அடையாளங்களான துப்பட்டாக்கள், வளையல்கள், தலைப்பாகைகள், சிலுவைகள், பொட்டு முதலானவை அனுமதிக்கப்படும் சூழலில் ஏன் ஹிஜாப் மட்டுமே எதிர்க்கப்படுகிறது எனக் கேள்வி எழுப்பியுள்ளார். 

`சமூகத்தில் வாழும் அனைத்து சமுதாயங்களால் கடைப்பிடிக்கப்படும் வெவ்வேறு விதமான மத அடையாளங்களை மட்டுமே நான் இங்கே சுட்டிக் காட்டுகிறேன். அரசு ஏன் ஹிஜாபை மட்டும் தேர்ந்தெடுத்து, இந்தப் பாகுபாட்டை நடைமுறைப்படுத்துகிறது. கையில் அணியும் வளையல்கள் மத அடையாளம் இல்லையா? ஏன் இந்த ஏழை முஸ்லிம் சிறுமிகளைக் குறி வைக்கிறார்கள்?’ என்றும் அவர் கூறியுள்ளார். 

Hijab Row | `பிற மத அடையாளங்களுக்கு அனுமதி.. ஹிஜாப் உடைக்குத் தடை ஏன்?’ - நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பிய வழக்கறிஞர்!

தொடர்ந்து, `என் மனுதாரர் தன்னுடைய மதத்தைப் பின்பற்றியதற்காகவே வகுப்பில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார். நெற்றியில் பொட்டு வைத்திருக்கும் சிறுமிகள் வெளியில் அனுப்பப்படுவதில்லை. வளையல் அணியும் சிறுமிகள் வெளியில் அனுப்பப்படுவதில்லை. சிலுவை அணியும் கிறித்துவர்களை யாரும் தொடுவதில்லை. அப்படியிருக்கும் போது, இந்த சிறுமிகளை மட்டும் குறிவைப்பது ஏன்? இது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமையான 15ஆம் சட்டப்பிரிவுக்கு எதிரானது’ எனவும் வழக்கறிஞர் ரவி வர்மா குமார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

`இந்த விவகாரத்தில் வேறு எந்த மத அடையாளமும் குறிவைக்கப்படவில்லை. ஹிஜாப் மட்டும் ஏன் குறிவைக்கப்படுகிறது? மதத்தின் காரணமாக இல்லையா? முஸ்லிம் சிறுமிகளுக்கு எதிரான இந்தப் பாகுபாடு மத அடிப்படையிலானது’ என்று வழக்கறிஞர் ரவி வர்மா குமார் வாதாடியுள்ளார். 

ஹிஜாப் அணிந்து வந்ததற்காக பள்ளியில் இருந்து மாணவிகள் விலக்கி வைக்கப்பட்ட நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி பேசிய வழக்கறிஞர் ரவி வர்மா குமார், `எங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. எங்கள் தரப்பு நியாயம் கேட்கப்படுவதற்கு முன்பே எங்களுக்குத் தண்டனை வழங்கப்படுகிறது. இதனை விட கொடுங்கோன்மையான ஆட்சி இருக்க முடியுமா? இவர்கள் ஆசிரியர்கள் என அழைப்பதற்குத் தகுதி வாய்ந்தவர்கள் தானா?’  என்றும் கேட்டுள்ளார். 

Hijab Row | `பிற மத அடையாளங்களுக்கு அனுமதி.. ஹிஜாப் உடைக்குத் தடை ஏன்?’ - நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பிய வழக்கறிஞர்!

`மதம் மீதான வெறுப்பே இங்கு நிறைந்துள்ளது. எந்த முன்னறிவிப்பும் வழங்கப்படாமல், அதிகாரம் இல்லாத மனிதர்களால் வகுப்பறைகளை விட்டு மாணவிகள் வெளியே அனுப்பப்பட்டுள்ளனர்’ என்றூம் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். 

கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் உடை அணிந்து பள்ளிக்கு வரும் மாணவிகள் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தை எட்டியுள்ளது. மேலும் கர்நாடக உயர் நீதிமன்றம் சமீபத்தில் ஹிஜாப் மீதான தடையை விசாரிப்பதாகவும், அதுவரை பள்ளியில் அனைத்து வித மத அடையாளங்களுக்கும் தற்காலிகமாகத் தடை விதித்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

IND Vs SA T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா? டஃப் கொடுக்குமா தெ.ஆப்.,? இன்று 4வது டி20 போட்டி
IND Vs SA T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா? டஃப் கொடுக்குமா தெ.ஆப்.,? இன்று 4வது டி20 போட்டி
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
IPL Auction 2026 LIVE: பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மாவுக்கு ஜாக்பாட்! அதிக விலைக்கு ஏலம் போன கேமரூன் கீரின்..ஐபிஎல் மினி ஏலம்..
IPL Auction 2026 LIVE: பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மாவுக்கு ஜாக்பாட்! அதிக விலைக்கு ஏலம் போன கேமரூன் கீரின்..ஐபிஎல் மினி ஏலம்..
ABP Premium

வீடியோ

Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்
டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident
கைதாகிறாரா சீமான்? திமுக நிர்வாகி மீது அட்டாக் பாய்ந்த கொலை மிரட்டல் வழக்கு | Seeman Arrest
நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND Vs SA T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா? டஃப் கொடுக்குமா தெ.ஆப்.,? இன்று 4வது டி20 போட்டி
IND Vs SA T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா? டஃப் கொடுக்குமா தெ.ஆப்.,? இன்று 4வது டி20 போட்டி
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
IPL Auction 2026 LIVE: பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மாவுக்கு ஜாக்பாட்! அதிக விலைக்கு ஏலம் போன கேமரூன் கீரின்..ஐபிஎல் மினி ஏலம்..
IPL Auction 2026 LIVE: பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மாவுக்கு ஜாக்பாட்! அதிக விலைக்கு ஏலம் போன கேமரூன் கீரின்..ஐபிஎல் மினி ஏலம்..
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
ஹைதராபாத்தில் தாய் செய்த கொடூரம்! 8 வயது மகளை மாடியிலிருந்து தள்ளி கொலை - காரணம் என்ன?
ஹைதராபாத்தில் தாய் செய்த கொடூரம்! 8 வயது மகளை மாடியிலிருந்து தள்ளி கொலை - காரணம் என்ன?
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
Embed widget