மேலும் அறிய

Hijab Row: ஹிஜாப் மனுதாரரின் குடும்ப உறுப்பினர்கள் மீது தாக்குதல், கும்பல் வன்முறையாளர்கள் வெறிச்செயல்

எனது ஹிஜாப் உரிமையைப் பற்றி தொடர்ந்து பேசியதற்காகவா? எங்களது சொத்துக்களைச் சேதப்படுத்தியுள்ளனர். எனது உரிமையைப் பற்றி பேசக் கூடாதா? போராடி பெறக் கூடாதா?

கர்நாடகா ஹிஜாப் விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த பெண் மனுதாரரின் குடும்ப உறுப்பினர்கள் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, கர்நாடக மாநிலத்தின் கல்விக்கூடங்களில் இசுலாமியப்பெண்கள் தங்களது மார்க்கத்தின்படி, உடை உடுத்தி வருவதற்கு கல்வி நிர்வாகம் தடைவிதித்தது. இதனையடுத்து, உடுப்பி மாவட்டத்தில் ஹிபாஜ் உடையுடன் வந்த ஆறு மாணவிகள் கல்லூரிக்குள் நுழைய முடியாதபடி தடுத்து நிறுத்தப்பட்டனர்.  இது, மிகவும் விவாதப்பொருளாக மாறியது. ஹிஜாப் விவகாரத்தில் கல்லூரி நிர்வாகத்தின் முடிவை அம்மாநில பாஜக வரவேற்றது. மேலும், சில தீவிர இந்துத்துவ அமைப்புகள் தங்களது அரசியல் ஆதாயத்திற்காக உடன் படிக்கும் சக மாணவர்களை ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் போட வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

இதற்கிடையே, தங்களது மார்க்கத்தின்படி, உடை உடுத்தி வருவதற்கு கல்வி நிர்வாகம் அனுமதி அளிக்கவேண்டும் என்று பாதிக்கப்பட்ட ஆறு மாணவிகள் தரப்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த, மனு மீதான விசாரணை கடந்த 8 நாட்களாக நடைபெற்று வருகிறது. இருப்பினும், மாணவர்கள் தங்கள் மார்க்கத்தின்படி, உடை உடுத்தி வருவதற்கு கல்வி நிர்வாகம் விதித்த தடையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. 

இந்நிலையில், மனுதாரர்களின் ஒருவரான 'Hazra Shifa' என்ற மாணவியின் குடும்ப உறப்பினர்களை சங் பரிவார் அமைப்பைச் சேர்ந்த கும்பல் வன்முறையாளர்கள் தாக்கியுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது. 

பாதிக்கப்பட்ட அப்பெண் தனது ட்விட்டரில், " எனது சகோதரன் கும்பல் வன்முறையாளர்களால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டான்.  எனது ஹிஜாப் உரிமையைப் பற்றி தொடர்ந்து பேசியதற்காகவா? எங்களது சொத்துக்களைச் சேதப்படுத்தியுள்ளனர். எனது உரிமையைப் பற்றி பேசக் கூடாதா? போராடி பெறக் கூடாதா? அவர்களின் அடுத்த தாக்குதலுக்கு யார் பாதிப்புக்குள்ளாக போகின்றனர்? இந்த சங் பரிவார் கும்பல்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். 

 

மாணவியின் குடும்ப உறுப்பினர்கள் நடத்தி வந்த உணவகத்தை முற்றுகையிட்ட சில கும்பல் வன்முறையாளர்கள் சகோதரர் சைப்-ஐ தாக்கியதாகவும், உணவகத்தின் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் தொடர்பாக மால்பே நகர போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget