மேலும் அறிய

Gyanvapi case: ஞானவாபி மசூதி வழக்கில் இன்று தீர்ப்பு... பின்னனி என்ன? வழக்கு கடந்து வந்த பாதை இதுதான்!

ஞானவாபி மசூதி வழக்கில் இன்று நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.

ஞானவாபி மசூதி விவகாரத்தில் இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட வாரணாசி நீதிமன்றம் இது தொடர்பான தீர்ப்பை தள்ளி வைத்திருந்தது. ஞானவாபி மசூதி வழக்கு கடந்த மே மாதம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஆய்வு ஆணையர் விஷால் சிங் (Vishal Singh)  தலைமையில் ஞானவாபி (Gyanvapi Masjid) மசூதியில் மேற்கொள்ளப்பட்ட வீடியோ பதிவு தொடர்பான முதற்கட்ட அறிக்கையை மூடி சீல் வைக்கப்பட்ட கவரில் வைத்து வாரணாசி நீதிமன்றத்தில் ஆய்வுக் குழு சமர்ப்பித்தது. இந்த அறிக்கை 10 முதல் 12 பக்கங்கள் கொண்டது. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை இன்று நீதிமன்றம் அளிக்க உள்ளது. 

 

வழக்கு பின்னணி:

உத்தரப் பிரதேசம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் ஞானவாபி மசூதி அமைந்துள்ளது.  இந்த மசூதி, கோயிலை இடித்து முகலாய பேரரசர் அவுரங்கசீப்பால் கட்டப்பட்டதாக புகார் கூறப்படுகிறது. மேலும், மசூதி சுவரில் உள்ள சிங்கார கவுரி அம்மனை தினசரி தரிசிக்க உத்தரவிடக் கோரிய வழக்கும் உள்ளது. வாரணாசியை சேர்ந்த இந்துப் பெண்கள் 5 பேர் சேர்ந்து இந்த வழக்கைத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கில், வாரணாசி சிவில் நீதிமன்ற நீதிபதி ரவி குமார் திவாகர்  3 நாட்கள் கள ஆய்வு மற்றும் ஆய்வு முழுமையாக வீடியோ பதிவும் செய்யப்பட வேண்டும் என்று உத்திரவிட்டார்,. அதன்படி, ஞானவாபி மசூதிக்குள் கள ஆய்வு நடைபெற்றது.

கள ஆய்வில், தொழுகைக்கு முன்பாக கை, கால்களை சுத்தப்படுத்தும் ஒசுகானாவின் நடுவே சிவலிங்கம் இருப்பதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. இதையடுத்து, சிவலிங்கம் இருப்பதாகக் கூறப்படும் மசூதியின் ஒரு பகுதி நீதிமன்ற உத்தரவின்படி கையகப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. இந்த உத்தரவை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டுள்ளது. ஒசுகானாவில் உள்ள சிவலிங்கத்தை அளக்கவும், அதை சுற்றியுள்ள சுவரை உடைக்கவும் இந்துக்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஞானவாபி மசூதி வழக்கில் வீடியோ ஆய்வுக்கு உத்தரவிட்ட நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

ஞானவாபி மசூதி வழக்கில் கருத்து தெரிவித்த பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபூர் சர்மா தெரிவித்த கருத்து உலகளவில் கண்டனங்களைப் பெற்றுள்ளது. இதனால், அல்குவைதா தீவிரவாத அமைப்பு இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம் என்று மிரட்டல் விடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. டெல்லி, மும்பை, குஜராத், உத்தரப் பிரதேச நகரங்களில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்படும் என்று அல்குவைதா எச்சரித்துள்ளது. இந்தியாவுக்கு இஸ்லாமிய நாடுகள் பல தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வந்தன. 

இந்த வழக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பை இரு பிரிவினரும் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
646
Active
28426
Recovered
157
Deaths
Last Updated: Sat 12 July, 2025 at 10:55 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

கொளத்தூரில் ஸ்டாலினுக்கு ஸ்கெட்ச் போடும் பாஜக.. களத்தில் இறக்கப்படும் பவன் கல்யாண்
கொளத்தூரில் ஸ்டாலினுக்கு ஸ்கெட்ச் போடும் பாஜக.. களத்தில் இறக்கப்படும் பவன் கல்யாண்
25 ஆயிரம் பேரு பேசுற சமஸ்கிருதத்திற்கு ரூ.2,500 கோடியா? பா.ஜ.க.வை விளாசும் மொழி ஆர்வலர்கள்!
25 ஆயிரம் பேரு பேசுற சமஸ்கிருதத்திற்கு ரூ.2,500 கோடியா? பா.ஜ.க.வை விளாசும் மொழி ஆர்வலர்கள்!
Srikanth Confession: போதை பழக்கம் ஏற்பட்டது எப்படி? யார் காரணம்.. நடிகர் ஸ்ரீகாந்த் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம் !
Srikanth Confession: போதை பழக்கம் ஏற்பட்டது எப்படி? யார் காரணம்.. நடிகர் ஸ்ரீகாந்த் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம் !
EPS: கமிஷன்தான் குறி.. அரைகுறை மருத்துவமனையை திறக்கப்போகும் மு.க.ஸ்டாலின் - இபிஎஸ் பகிரங்க குற்றச்சாட்டு
EPS: கமிஷன்தான் குறி.. அரைகுறை மருத்துவமனையை திறக்கப்போகும் மு.க.ஸ்டாலின் - இபிஎஸ் பகிரங்க குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Udhayanidhi vs Kanimozhi : துணை பொதுச்செயலாளர் உதயநிதி !கனிமொழியை வைத்து ஸ்கெட்ச்ஸ்டாலின் MASTERMIND
கனிமொழிக்கு புதிய பதவி? அறிவாலயத்தில் தனி அலுவலகம்! ஸ்டாலின் மாஸ்டர் ப்ளான்!
Union Minister Meena : மத்திய அமைச்சராகும் மீனா?வாக்கு கொடுத்த BIGSHOT திடீர் டெல்லி விசிட்
தவெகவினரை தாக்கிய திமுகவினர் உடனே CALL போட்ட விஜய்”எதுனாலும் நான் பாத்துக்குறேன்” DMK vs TVK Fight
”நீ யாருயா அத சொல்ல?”ட்ரம்ப்-க்கு பதிலடி கொடுத்த ஈரான் சைலண்ட் மோடில் இஸ்ரேல் Israel vs Iran Ceasefire

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கொளத்தூரில் ஸ்டாலினுக்கு ஸ்கெட்ச் போடும் பாஜக.. களத்தில் இறக்கப்படும் பவன் கல்யாண்
கொளத்தூரில் ஸ்டாலினுக்கு ஸ்கெட்ச் போடும் பாஜக.. களத்தில் இறக்கப்படும் பவன் கல்யாண்
25 ஆயிரம் பேரு பேசுற சமஸ்கிருதத்திற்கு ரூ.2,500 கோடியா? பா.ஜ.க.வை விளாசும் மொழி ஆர்வலர்கள்!
25 ஆயிரம் பேரு பேசுற சமஸ்கிருதத்திற்கு ரூ.2,500 கோடியா? பா.ஜ.க.வை விளாசும் மொழி ஆர்வலர்கள்!
Srikanth Confession: போதை பழக்கம் ஏற்பட்டது எப்படி? யார் காரணம்.. நடிகர் ஸ்ரீகாந்த் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம் !
Srikanth Confession: போதை பழக்கம் ஏற்பட்டது எப்படி? யார் காரணம்.. நடிகர் ஸ்ரீகாந்த் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம் !
EPS: கமிஷன்தான் குறி.. அரைகுறை மருத்துவமனையை திறக்கப்போகும் மு.க.ஸ்டாலின் - இபிஎஸ் பகிரங்க குற்றச்சாட்டு
EPS: கமிஷன்தான் குறி.. அரைகுறை மருத்துவமனையை திறக்கப்போகும் மு.க.ஸ்டாலின் - இபிஎஸ் பகிரங்க குற்றச்சாட்டு
விஜய்க்கு அப்போ ரஜினியை பிடிச்சது.. ஆனா இப்போ.. உண்மையை உடைத்த தளபதியின் நெருங்கிய நண்பர்!
விஜய்க்கு அப்போ ரஜினியை பிடிச்சது.. ஆனா இப்போ.. உண்மையை உடைத்த தளபதியின் நெருங்கிய நண்பர்!
Kanimozhi: மாநில அரசியலில் என்ட்ரி கொடுக்கும் கனிமொழி? அறிவாலயத்தில் தனி அறை- தயாராகும் தலைமைப் பதவி!
Kanimozhi: மாநில அரசியலில் என்ட்ரி கொடுக்கும் கனிமொழி? அறிவாலயத்தில் தனி அறை- தயாராகும் தலைமைப் பதவி!
சென்னை ஏரிகளில் மிதக்கும் சோலார் பேனல் திட்டம்: மின்சார உற்பத்திக்கு புதிய முயற்சி! சாத்தியக்கூறுகள் என்ன?
சென்னை ஏரிகளில் மிதக்கும் சோலார் பேனல் திட்டம்: மின்சார உற்பத்திக்கு புதிய முயற்சி! சாத்தியக்கூறுகள் என்ன?
முருக பக்தர்கள் மாநாட்டில், அரசியல் இருக்காது என்று நம்பி போனோம் - மனம் திறக்கும் ஆர்.பி.உதயகுமார்
முருக பக்தர்கள் மாநாட்டில், அரசியல் இருக்காது என்று நம்பி போனோம் - மனம் திறக்கும் ஆர்.பி.உதயகுமார்
Embed widget