மேலும் அறிய

இதுதான் குஜராத் மாடலா? ஐந்து ஆண்டுகளில் 40,000 பெண்கள் மாயம்..! தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையில் அதிர்ச்சி..!

கடந்த 5 ஆண்டுகளில், குஜராத்தில் 40,000 பெண்கள் மாயமானதாக தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

நரேந்திர மோடி, நாட்டின் பிரதமராக பதவியேற்பதற்கு முன்பிலிருந்தே குஜராத் மாடல், நாடு முழுவதும் பேசுபொருளாக மாறின. கடந்த 2001ஆம் ஆண்டு, குஜராத் முதலமைச்சராக மோடி பதவியேற்ற பிறகு, அம்மாநில அசுர வளர்ச்சி அடைந்ததாக பல்வேறு தரப்பினர் கூறினர். 

குறிப்பாக, பூகம்பம், குஜராத் கலவரம் போன்ற சவால்களுக்கு மத்தியில் குஜராஜ் முதலமைச்சராக மோடி சிறப்பாக செயல்பட்டதாக பல்வேறு தரப்பினர் கூறினர். அதற்கு ஏற்றார்போல, தொழில் வளர்ச்சியில், மகாராஷ்டிரா, தமிழ்நாடு மாநிலங்களுக்கு சவால் விடும் அளவுக்கு குஜராத் பெரிய முன்னேற்றத்தை பெற்றது.

குஜராத் மாடல்:

ஆனால், மனித வள மேம்பாட்டில் மோசமான இடத்திலேயே குஜராத் உள்ளது. தொழில் வளர்ச்சியில் முன்னேற்றம் அடைந்திருந்தாலும் கல்வியறிவு விகிதம், சராசரி ஆயுட்காலம், குழந்தை இறப்பு விகிதம், மொத்த மூலதனச் செலவு போன்றவற்றில் குஜராஜ் பின்தங்கிதான் உள்ளது.

சமீபத்தில் கூட குஜராத் மாடல் குறித்து விவாதம் எழுந்தபோது, குஜராத் மாடலை விட தமிழ்நாட்டின் திராவிட மாடல் சிறந்தது, கேரள மாடல் சிறந்தது போன்ற எதிர்வாதங்கள் கிளம்பின. ஏன் என்றால், குஜராத்தை போல் அல்லாமல் தமிழ்நாட்டின் வளர்ச்சி அனைவருக்குமானதாக இருந்து வருகிறது என பொருளாதார நிபுணர்கள் கூறினர்.

தொழில் வளர்ச்சிக்கு இணையாக மனித வள மேம்பாட்டிலும் தமிழ்நாடு சிறந்து விளங்குவது பல்வேறு ஆய்வறிக்கைகள் மூலம் தெரிய வந்தது. இந்த சூழ்நிலையில், குஜராத்தில் நடக்கும் குற்றச் செயல்கள் குறித்து அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில், குஜராத்தில் 40,000 பெண்கள் மாயமானதாக தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பெண்கள் பாதுகாப்பில் பின்தங்கியுள்ள குஜராத்:

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவுகளின்படி, 2016இல் 7,105 பெண்களும், 2017இல் 7,712 பெண்களும், 2018இல் 9,246 பெண்களும், 2019இல் 9,268 பெண்களும் காணாமல் போயுள்ளனர். 2020 ஆம் ஆண்டில், 8,290 பெண்கள் காணாமல் போயுள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில், காணாமல் போன பெண்களின் மொத்த எண்ணிக்கை 41,621 ஆக உள்ளது.

பெண்கள் காணாமல் போனது தொடர்பான மற்றொரு அதிர்ச்சி அறிக்கையை குஜராத் அரசு சமீபத்தில் வெளியிட்டிருந்தது. கடந்த 2021 ஆம் ஆண்டு, குஜராத் சட்டப்பேரவையில் மாநில அரசு வெளியிட்ட அறிக்கையின்படி, அகமதாபாத் மற்றும் வதோதராவில் ஒரு வருடத்தில் (2019-20) 4,722 பெண்கள் காணாமல் போனது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் குஜராத் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினருமான சுதிர் சின்ஹா கூறுகையில், "சில காணாமல் போன வழக்குகளில், சிறுமிகளும் பெண்களும் அவ்வப்போது குஜராத்தைத் தவிர மற்ற மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு பாலியல் தொழிலில் தள்ளப்படுவதை நான் கவனித்துள்ளேன்.

காணாமல் போனோர் வழக்குகளை தீவிரமாகக் கையாளாததுதான் காவல்துறையின் பிரச்சனை. இது போன்ற வழக்குகள் கொலையை விட தீவிரமானது. ஏனென்றால், ஒரு குழந்தை காணாமல் போனால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்காக வருடக்கணக்கில் காத்திருக்கிறார்கள். மேலும் காணாமல் போன வழக்கை கொலை வழக்கை போல கடுமையாக விசாரிக்க வேண்டும்" என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget